Thursday, September 12, 2013

சிறுகை துளாவி... சிற்றுளி எடுத்து!



பவள சங்கரி


எங்கோ ஓரு மூலையில் ஒரு திரை சட்டென்று விலகுகிறது..  வெடித்துக்கொண்டு சிதறுகிறது சொற்களாக..  ஆசானின் அரிச்சுவடியை சிரமேற்கொண்டு சிறுகை துளாவி சிற்றுளி எடுத்து சிரத்தையாய் வடிவமைக்கும் முயற்சி..தவறானால் தண்டனிட்டு மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன்! 



என்றோ காயாத கான்கிரீட் தரையில் 
பதிந்து கிடந்த நாயின் அடியொற்றி
பற்றில்லாக் கால்களின் பாதையறியா பயணம்.

கந்தலாகிப்போன வறட்டு கௌரவம் 
கதைபல பேசி கட்டாந்தரையாக்கியதால்
நத்தையாய் சுருண்டு போனது உயிர்.

பூமியாய் பொறுமையும்
 சோதியாய் தனிமையும்
போதியாய் ஞானமும்
சாமியாய் வரமும் வந்தது

ஓடுகூட பாரமாகித்தான் போகிறது
கூடுவிட்டு கூடுபாய ஊர்ந்து தேய்க்கிறது
கடக்க வேண்டிய காததூரத்தையும்!




படத்திற்கு நன்றி:

பெருமதிப்பிற்குரிய கவிஞர் சுந்தர்ஜி அவர்களின் ‘அதனதன் இடம்’ என்ற கவிதையின் இன்ஸ்பிரேஷன் தான் இந்த என் கவிதை! அவரிடம் சம்மதம் பெற்று படத்தையும் சுட்டுவிட்டேன்! கவிஞர் சுந்தர்ஜி அவர்களுக்கு என் மனமார்ந்த  நன்றி.

1 comment:

  1. //பூமியாய் பொறுமையும்
    சோதியாய் தனிமையும்
    போதியாய் ஞானமும்
    சாமியாய் வரமும் வந்தது//

    அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete