Sunday, April 13, 2014

தமிழ் புத்தாண்டு மலர்ந்தது!


பவள சங்கரி



சித்திரை மகள் ஜனித்தாள்!
ஜெயமாய் முகம் மலர்ந்தாள்!!!

நித்தம் நிலவின் ஒளியில்
சித்தம் மலரும் சிரிப்பில்
முத்தம் சிதறும் புவியில்
கன்னம் சிவக்க கலந்தால்
முன்னம் இருந்த நிலையில்
இன்னம் இருக்க வள்ளல்
அருளும் அளித்து சொல்லல்
சுவையும் கரும்பும் தேனும்
பாலும் பழமும் கற்கண்டும்
சந்தம் பலவும் சரமாரியாய்
வெடிக்கும் உலகும் பிரகாசமாய்
படிக்கும் பாடமும் உள்ளுருக்குவதாய்
நொடிக்கும் பொழுதும் இன்னமுதாய்
வாழ்க! வாழ்கவே!! வளமாய் வாழ்கவே!!

2 comments:

  1. மனமார்ந்த தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
  2. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete