Wednesday, January 11, 2012

ஆகா, தமிழனென்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா!

நறுக்.. துணுக்…

பவள சங்கரி

தமிழ்மொழி 50,000 ஆண்டு வரலாற்றுப் பழமை பெற்ற மொழி. தமிழ்மொழி உலக மொழிகட்கு 1800 வேர்ச் சொற்களும், 180 மொழிகட்கு உறவுப்பெயரும் தந்துள்ளதை ஆய்வுகள் உணர்த்தியுள்ளன. அதிலும் சிவசமயம் 22,000 ஆண்டுகள் பழமை கொண்டதாம். திருமந்திரம் என்பது 8000 ஆண்டுகளுக்கு முன்னர்த் தோன்றிய சித்தர் நெறி நிற்கும் மந்திர, தந்திர வழிபாட்டு நூல். திருக்குறளும், திருமந்திரமும் நம் தமிழ்த்தாயின் இரு கண்கள் என்று போற்றத்தக்க தெய்வாம்சமும், வாழ்க்கை நெறிகளும் கொண்டனவாகும். திருமந்திரம் இயற்றியவர், 3000 ஆண்டுகள் வாழ்ந்த திருமூலர் என்ற சித்தர். இப்படிப் பல சித்தர்களைக் கொண்ட நாடு நம் தமிழ்நாடு.

“நெற்றிக்கு நேரே புருவத்திடை வழி
உற்று உற்றுப்பார்க்க ஒளிவரும் மந்திரம்”

சிற்றம்பலம் எனக் காண்பவர். சிவசமய வரலாறு கூறுவது போன்று சித்தர்களுக்கு சிவன் சீவனுக்குள் எழுந்தருளும் என்பதால் அவர்கள் அட்டமாசித்திகளும் பெற்றுச் சாகாக்கலை நிறைந்தவர்கள் என்பதையும் அறியலாம்!

படத்திற்கு நன்றி : http://thirukkural.net.in/Thiruvalluvar.html