Tuesday, November 28, 2017

உடுத்தும் உடையில் மட்டுமா உள்ளது நாகரீகம்?




சுவாமி விவேகானந்தர் அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகர வீதியில்  நடந்து சென்று கொண்டிருந்தபோது மிக எளிமையான உடையில் இருந்தாராம். கையிலே ஒரு தடியும், மேனியில் ஒரு சால்வையை மட்டும் போர்த்தியபடி  சென்றாராம். சுவாமியின் எதிரில் வந்த ஒரு ஆங்கிலேயப் பெண்மணி அவருடைய தோற்றத்தைக் கண்டு எள்ளி நகையாடியிள்ளார். சிறிதும் கோபம் கொள்ளாத சுவாமி விவேகானந்தர் புன்முறுவல் தவழும் முகத்துடன், “அம்மா எங்கள் இந்திய நாட்டில் ஒருவர் அணியும் உடைகளை வைத்து அவரை மதிப்பிடும் வழக்கம் இல்லை. நாகரீகம் என்பது மனிதனுடைய நன்னடத்தையில் தான் அடங்கியிருக்கிறது” என்று சொல்லி விட்டு சங்கடம் ஏதுமின்றி அவ்விடம்விட்டு அகன்றாராம். இதில் நாம் உணர வேண்டியது 2 செய்திகள். ஒன்று, சுவாமிகள் தமது சொந்த மண்ணின் மீது கொண்ட மதிப்பு! அடுத்தது தம் நன்னடத்தையின் மீது கொண்ட அதீத நம்பிக்கை!

Monday, November 27, 2017

Quotation


அன்றைய பொழுதை உன் அறுவடையைக் கணக்கில்வைத்து மதிப்பிடாதே
நீ விதைக்கும் விதைகளைக்கொண்டே மதிப்பிடு!!

ராபர்ட் லூயிசு இசுடீவென்சன்



ஓரக்கண்ணால் பார்க்கும் கோடியைவிட நேராகக் காணும் வாரத்திற்கொரு பவுண்டு என்பதே மேல்.

பெர்னார்ட் ஷா

LIFE


உயிருள்ள மீனின் உணவு புழு.
உயிரற்ற மீன் புழுவின் உணவு!
#life

கலைஞனுக்குள் வாழும் மனிதம்
மனிதனுக்குள் மனிதம் விதைக்கிறது!
#life

ஒரு புன்னகை நட்பை இணைக்க அனுமதிக்கலாம்!
ஒரு நட்பு புன்னகையைப் பறிக்க அனுமதிக்காதே!!
#life

பறக்க மறந்த சிறகுகளை உயர்த்திப்பிடிக்கும்
அக்கைகள் நட்பெனும் தேவதையினுடையது!
#life

உள்வலி இரணங்கள் என ஏதும் உணராமல் கதாநாயக மேல்பூச்சில் மயங்கி முன்னுதாரணமாக்குவதால் வாழ்வே பாழ்!
#life

வாய்ப்புகள் வரமாகலாம் - கதவு தட்டும் தேவதைகள் சுமந்து வருவது பியாண்டோ கனியாகவும் இருக்கலாம்!
நம்பிக்கையோடு விழித்தெழுங்கள்!!
#life

பி.கு. பியாண்டோ கனி - Beondo - 3000 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் கனியக்கூடிய ஒரு பீச் வகைக்கனி. ‘சாம்குக் யுசா’ எனும் சீன தொன்மக் கதையில் பேசப்படும் அதிசயக்கனி!


வேதனைகளை வாங்குவதற்கு கொடுக்கும் விலை:
அல்லவைகளையே அனுதினமும் சுமப்பவரிடம் நல்லவைகளைத் தேடித்திரிவதும்
நல்லவைகளை மட்டுமே கருதியிருப்போரிடம் அல்லவைகளைத் தேடிக்காண முயல்வதும்தான்!
#life


சுயநலக்காரர்களுக்காக வடிவமைக்கப்பட்டதன்று
அன்பான உறவுகளின் இனியபொழுதுகள்!
#life

தன் நலம் பேணவும் அடுத்தவரை பாதிக்காத தன்மகிழ்ச்சிக்கு முன்னுரிமை அளிப்பதும் சுயநலம் அன்று .
#life


Sunday, November 26, 2017

ஆன்மா அழிவதில்லை!

இறந்தவர்களின் ஆன்மா அழிவதில்லை. பிரபஞ்சத்திற்கு மீண்டும் வருகின்றது, என்ற ஆச்சரியமான தகவலை அமெரிக்க இயற்பியலாளர்கள் இருவர் கண்டுபிடித்து கூறியிருக்கிறார்கள். இதைத்தானே நம் இந்து மதமும், சித்தர்களும் தொன்றுதொட்டு சொல்லி வருகிறார்கள். மிகவும் தாமதமான கண்டுபிடிப்பு!
மனித மூளை ஒரு "உயிரியல் கணினி" போலவே செயல்படுவது போல, மனித உணர்வு மூளையில் ஒரு குவியக்கொள்கை கணினி மூலம் இயங்கும் திட்டமாக இருக்கலாம் என்கிறார்கள். நுண்ணிய குழாய்களில் மூளை செல்களால் ஆன்மா பராமரிக்கப்படுகிறதாம்."மருத்துவ ரீதியாக இறந்தவர்கள்" என கருதப்படும்போது மூளையில் உள்ள நுண்ணுயிரிகள் தங்கள் குவாண்டம் நிலைமையை இழந்துவிடுகின்றன, ஆனாலும் பதிவான தகவல்கள் அழிவதில்லை. அவை அப்படியே பிரபஞ்சத்தில் பரவலாக விநியோகிக்கப்பட்டு சிதைகிறது.
உயிர் போனவுடன் இதயம் அழுகிப்போகும், இரத்த ஓட்டம் நிறுத்தப்படும் என்று சொல்லலாம்; நோயாளி மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டால், புத்துயிர் பெற்றால்,நுண்ணுயிரிகளில் இந்த குவாண்டம் தகவல் மீண்டும் செல்லும்போது ' மரணத்தை அருகில் பார்த்த அனுபவம் உண்டு' என்று கூறுவார். நோயாளி இறந்துவிட்டால், இந்த குவாண்டம் தகவல் உடலின் வெளியே, காலவரையின்றி, ஒரு ஆத்மாவாக உலவ முடியும்.
இந்த "ஆன்மாக்கள்" காலச்சக்கரத்தின் ஆரம்பம் முதலே இருந்திருக்கலாம் என்பதைக் குறிக்கிறது. சமீபத்திய கண்டுபிடிப்புகள் மனிதர்களால் பார்க்க முடியாத அல்லது கையாள முடியாத இருண்ட எரிசக்தியும் இருண்ட பொருட்கள் இருக்கின்றன. இந்த கோட்பாடு மேலும் மர்மமான, கவர்ச்சிகரமான பல விசயங்களுக்கு விடையளிக்கும் என்று நம்புவோம்.. எது எப்படியோ மக்கள் பாவ புண்ணியத்திற்கு கொஞ்சம் அஞ்ச வேண்டிய நிலை உள்ளது என்பது சத்தியம்!