Friday, November 14, 2014


உயிர்களின் சங்கமம்
உணர்வுகளின் உன்னதம்
மனங்களின்  மயக்கம்
மழலையின் மாசற்ற சிரிப்பு

Thursday, November 13, 2014

மாமரத்துப் பூவு!


பவள சங்கரி


இசைச்சாரலில் நனைந்த தென்றல் காற்று
பாடுது பாட்டொன்னு தேனாய்ப் பொழிந்து
வீசிய தென்றலின் இளங்குளிரில் இதமாய்
மலர்ந்ததொரு மாமரத்துப் பூவு 

இசைச்சாரலில் நனைந்த தென்றல் காற்று
பாடுது பாட்டொன்னு தேனாய்ப் பொழிந்தே
வீசிய தென்றலின் இளங்குளிரில் இதமாய்
மலர்ந்ததொரு மாமரத்துப் பூவு 
பாடுது பாட்டொன்னு தேனாய்ப் பொழிந்தே

காலம் காலமாய் காத்திருந்தாலும் காததூரத்தில்
கனிந்திருந்தாலும் வேதம் என்று மலைத்திருந்தாலும்
மலையாய் மோதும் கீதம் வென்றாலும் 
அலைஅலையாய் அதிர்ந்திருந்தாலும் ஆதவனேயானாலும்
அடக்காத குளிர்தான் இதமான பாடல்தான்
ஆராரோ பாடினாலும் ஆராரோ ஆகாதம்மா
வான்பறந்த தேன்சிட்டு எந்நாளும் வாராதம்மா!

இசைச்சாரலில் நனைந்த தென்றல் காற்று
பாடுது பாட்டொன்னு தேனாய்ப் பொழிந்தே
வீசிய தென்றலின் இளங்குளிரில் இதமாய்
மலர்ந்ததொரு மாமரத்துப் பூவு 

கோயில் கொண்ட சிற்பம் மீளாது எந்நாளுமது
மையல் கொண்ட மாதுளை தாளாத சந்தமது
தந்தன தந்தன தாளம் கேட்டும் அசையாத சிற்பமது
மாளாத பாசங்களும், நேசங்களும் அலங்காரமாய்
பவனிவரும் தங்கத்தேரில் பொன்னூசல் ஆடுமனசு
இசையருந்தும் மனசது மலரும் அரும்பாகும்
மாலையாய் சூடும் தென்றல் மகிழ்ந்தாடும் நிதமும்
கவிபாடும் கணந்தோறும் புவியேழும் பொலிவாகும்

இசைச்சாரலில் நனைந்த தென்றல் காற்று
பாடுது பாட்டொன்னு தேனாய்ப் பொழிந்தே
வீசிய தென்றலின் இளங்குளிரில் இதமாய்
மலர்ந்ததொரு மாமரத்துப் பூவு 



Wednesday, November 12, 2014

புல்மேல் பனித்துளி


பவள சங்கரி

இன்று பனிப்பெண் முதன் முதலில் மெல்லத்தன் அழகு முகம் காட்டி மறைந்தாள். ஏதோ சொல்லத்தான் வந்திருப்பாள் போல.. சொல்லாமலே சென்றுவிட்டாள். விரைவில் மீண்டும் அவள் வரவிற்காக ஒரு பாடலுடன் காத்திருக்கிறேன்.. பாடல் பிடித்திருந்தால் ஒருவேளை உடன் வருவாளோ... சரி கீழ்கண்ட இந்த என் பாடலை, ‘மே மாதம்’ படத்தில் வரும் என் மேல் விழுந்த மழைத் துளியே என்ற கவிஞர் திரு வைரமுத்து அவர்களின் பாடலின் மெட்டில் பாடிப்பாருங்களேன்.. பிடித்திருந்தால்...



புல்மேல் விழுந்த பனித் துளியே
எங்கே போனாய் இத்தனை நாளாய்
இன்று குளிர்ந்த என் மனமே
ஏன் மறந்தாய் இத்தனை நாளாய்
புல்மேல் விழுந்த பனித் துளியே
எங்கே போனாய் இத்தனை நாளாய்
இன்று குளிர்ந்த என் மனமே
ஏன் மறந்தாய் இத்தனை நாளாய்
என்னை எழுப்பிய வெண்பனியே
ஏன் மறைந்தாய் இத்தனை நாளாய்
கல்லை உருக்கிய கவிமழையே
கனவில் நிறைந்த கற்கண்டே
உயிரில் கலந்த இன்னிசை போல்
உனக்குள் தானே உறைந்திருந்தேன்
புல்மேல் விழுந்த பனித் துளியே
எங்கே போனாய் இத்தனை நாளாய்
இன்று குளிர்ந்த என் மனமே
ஏன் மறந்தாய் இத்தனை நாளாய்
பனியில் கதிரொளி வீழ்ந்தால் நீராகும்
விதியின் புத்தொளி வீழ்ந்தால் சுகமாகும்
வலியைக் கடந்தால் சுகம் இருக்கும்
மழையில் நனைந்தால் குளிரெடுக்கும்
கானம் இசைத்தால் உள்ளம் திறக்கும்
உள்ளம் திறந்தால் உயிர் நிலைக்கும்
உயிரும் உணர்வும் உலராமல் இருந்தால்
மலரும் மணமாய் பரவசமாய் இருக்கும்
புல்மேல் விழுந்த பனித் துளியே
எங்கே போனாய் இத்தனை நாளாய்
இன்று குளிர்ந்த என் மனமே
ஏன் மறந்தாய் இத்தனை நாளாய்
குருவிகளிரண்டும் மூக்கால் உரசுகையில்
குழலோசையாய் அது இசைத்திடுமோ
பனியும் காற்றும் உரசுகையில்
மெல்லிய கீதம் இசைத்திடுமோ
மலையும் நதியும் உரசுகையில்
எந்த மொழியில் குலவிடுமோ
நினைவெல்லாம் பார்வையானால்
மொழியெலாம் ஊமை ஆகிடுமோ
புல்மேல் விழுந்த பனித் துளியே
எங்கே போனாய் இத்தனை நாளாய்
இன்று குளிர்ந்த என் மனமே
ஏன் மறந்தாய் இத்தனை நாளாய்
என்னை எழுப்பிய வெண்பனியே
ஏன் மறந்தாய் இவ்வளவு நாளாய்
என்னை உருக்கிய கவிமழையே
எங்கே போனாய் இத்தனை காலமாய்
உயிரில் கலந்த இன்னிசை போல்
உனக்குள் தானே உறைந்திருந்தேன்
புல்மேல் விழுந்த பனித் துளியே
எங்கே போனாய் இத்தனை நாளாய்
இன்று குளிர்ந்த என் மனமே
ஏன் மறந்தாய் இத்தனை நாளாய்
---------------------------------------------------------------------------------
http://youtu.be/k57OsWDSH88http://youtu.be/k57OsWDSH88

ஆட்டிசம்

பவள சங்கரி


குழந்தைகளை ஆட்டிப்படைக்கும், ‘ஆட்டிசம்’ என்ற கொடிய நோய் பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். நானும் ஏற்கனவே இதுபற்றி இங்கேயும் விவாதித்திருக்கிறேன். இன்றும் சொல்லுமளவில் எந்த முன்னேற்றமும் இல்லை. மாறாக அதிகமான பாதிப்பே உள்ளது. பெண் குழந்தைகளைக் காட்டிலும் ஆண் குழந்தைகளே அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். ஆட்டிசம் குறித்த விரிவான என் கட்டுரை இதோ இங்கே ..http://coralsri.blogspot.com/2012/08/blog-post_27.html

St. Louis - America

பவள சங்கரி