Saturday, September 22, 2012

பாவலர்கள் - கலீல் ஜிப்ரான்



பாவலர்கள்

நான்கு பாவாணர்கள் மேசையின் மீது இருந்த திராட்சைரச மதுக் கோப்பையைச் சுற்றி அமர்ந்திருந்தனர். முதல் கவிஞன், ”எம் மூன்றாம் கண் மூலமாக, ஒரு மாய வனத்தின் பறவைகள் மேகங்களாய் விண்வெளியில் நகருவது போல் இந்த மதுவின் சுகந்த மணத்தையும் காண்பதாக என்ணுகிறேன் யான்என்றார்.
  இரண்டாம் பாவலரோ தம் சிரத்தை உயர்த்திக் கொண்டு, “எம்முடைய அகச்செவியின் மூலம் அந்த மூடுபனிப் புள்ளினங்கள் பாடுவதைக் கேட்கிறேன். மேலும் வெண்மையான ரோசா தன் மென்மையான இதழ்களுக்குள் தேனீயை சிறைப்பிடித்து வைத்திருப்பதைப் போன்று அந்த மெல்லிசை எம் இருதயத்தைக் கட்டி வைத்துள்ளதுஎன்றார்.

ஆகாயத்தாமரை!





ஊதுவத்தியும், பன்னீரும், வாசனைத் திரவமும், மலர்ச்செண்டுகளின் மணமும் கலந்ததொரு வித்தியாசமான வாடை.. ஆங்காங்கே பெண்கள் கூடிக்கூடி குசுகுசுவென இரகசியமும், வாயின் மீது அடித்துக் கொண்டும், புலம்பிக் கொண்டும், வயிற்றில் புளியைக் கரைக்கும் சூழல். பெரிய பட்டாசாலை முழுதும் நிறைந்த உறவுகளும், நட்புகளும், மங்கலான முகங்களுடன்......

"ஏண்டி பாவி, இப்படி அல்பாயுசுல போயிட்டியேடி.. நன்னாத்தானே இருக்கேன்னு நினைச்சுண்டிருந்தேனே.. இப்படி தலையில கல்லைத் தூக்கிப் போட்டுட்டியேடி.. தற்கொலை பண்ணிண்டு உயிரை மாய்ச்சுக்கற அளவுக்கு நோக்கு என்னடி பிரச்சனை. என்னண்ட ஒரு வார்த்தை சொல்லப்படாதோ பாவி....

Sunday, September 16, 2012

பண்டிதரும் கவிஞரும்


அரவம் ஒன்று வானம்பாடியிடம், “நீவிர் பறக்கக்கூடியவரேயாயினும், உம்மால், பூரணமான அமைதியில் வாழ்க்கையின் உயிர்ச்சாறு இடம் பெயரும் அந்த பூமியின் சரிவுகளைக் காண இயலாதேஎன்றது.
அதற்கு வானம்பாடி, “ஆம், தாங்கள் அளவிற்கதிகமாக அறிந்துள்ளீர்கள், அனைத்து அறிவார்ந்த பொருட்களையும்விட உம்முடைய கலை மேலும் அறிவுடையதாகவும் இருக்கலாம். - உம்மால் பறக்க இயலாது என்பது பரிதாபத்திற்குரியதுஎன்று பதிலிறுத்தது.
மேலும் இதெல்லாம் ஏதும் செவியில் விழாதது போல, அந்த அரவம், “உம்மால் ஆழமான இரகசியங்களைக் காணவும் இயலாது, மறைந்த ராச்சியங்களின் பொக்கிசங்களினூடே ஊர்ந்து செல்லவும் இயலாது. ஆனால் நேற்று, யான் மாணிக்கக் குகையினுள் இருந்தேன். அது செம்மையாக பழுத்த மாதுளையின் இருதயம் போன்று இருந்தது, மற்றும் மெல்லிய ஒளிக்கிரணம் அதனை தீச்சுவாலை ரோசாவாக ஒளிரச் செய்கிறது. எம்மைத் தவிர எவரால் இது போன்ற அற்புதங்களையெல்லாம் கண்டு களிக்க இயலும்?” என்றது.