Showing posts with label _மொழி பெயர்ப்பு - கலீல் ஜிப்ரான் பொன் மொழிகள். Show all posts
Showing posts with label _மொழி பெயர்ப்பு - கலீல் ஜிப்ரான் பொன் மொழிகள். Show all posts

Saturday, May 17, 2014

கலீல் ஜிப்ரானின் பொன் மொழிகள் (5)







நீ சிந்தும் சோகக் கண்ணீர் முத்துக்களே,  கெக்கலித்தல்  மற்றும் உரத்த பரிகாசச் சிரிப்பைக் காட்டிலும் இனிமையானவை!

வைராக்கியம் என்பது ஓர் எரிமலை. அதன் உச்சியில் உறுதியின்மை என்ற பசும்புல் முளைக்காது!

’கையளவு கடற்கரை மணல்’ - கலீல் ஜிப்ரான்

Wednesday, May 7, 2014

கலீல் ஜிப்ரான் பொன் மொழிகள் (4)


பவள சங்கரி



என்னுள் இருக்கும்  உயிரின் ஒலி உன்னுள் இருக்கும் உயிரின் செவியை எட்ட இயலாது; ஆயினும் நாம்  தனிமையில் இல்லை என்றே பேசுவோமே!

மூடிய கதவுகள் ஒவ்வொன்றின் பின்னும் ஏழு முத்திரைகளால் முத்திரையிடப்பட்டதோர் மாயமும் உள்ளது.

மணலும் நுரையும் - கலீல் ஜிப்ரான்

Friday, May 2, 2014

கலீல் ஜிப்ரானின் பொன் மொழிகள் (3)


பவள சங்கரி





முன்னேறு. தயங்கி நில்லாதே! முன்னேற்றம்தான் முழுமை
முன்னேறு! பாதையில் கிடக்கும் முட்களுக்கு அஞ்சாதே!
அதில்  வடியும் குருதி அழுகலானது!


கலீல் ஜிப்ரான்

Sunday, April 27, 2014

கலீல் ஜிப்ரானின் பொன் மொழிகள் (2)


பவள சங்கரி



சான்றோருக்கும், கவிஞருக்கும் இடையே 
அங்கோர் பச்சைப் பசும் புல்வெளி இருக்கிறது; 
அந்தச் சான்றோரதைக் கடக்க நேர்ந்தால் விவேகியாகிவிடுகிறார்; கவிஞரதைக் கடக்க நேர்ந்தாலோ தீர்க்கதரிசியாகிவிடுகிறார். 

கலீல் ஜிப்ரான்.

Thursday, April 24, 2014

கலீல் ஜிப்ரானின் பொன் மொழிகள் - (1)



பவள சங்கரி

கலீல் ஜிப்ரானின் பொன் மொழிகள் என் மொழி பெயர்ப்பில் - (1)



கவிதை என்பது மனோவசியத்திற்கான ஞானம்
ஞானம் என்பதோ மனதினூடே இசைக்கும் கவிதை.
நம்மால் ஒருவரின் மனதை வசியப்படுத்த முடியுமானால், 
அதே நேரம் அவர் மனதில் நம்மால் இனிய கீதமிசைக்கவும் முடியும்.
பின்னர் உண்மையில் இறை நிழலில் வாழக்கூடும் அவனால்.
அகத்தூண்டுதல் எப்போதும் இசைக்கும். புத்துணர்வு ஒருபோதும் விளக்கமளிக்காது.

கலீல் ஜிப்ரான்

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 36

  63 நாயன்மார்கள் வரலாறு – 31 மூர்க்க நாயனார்   தொண்டை நாடு சான்றோர் உடைத்து , எனும் பழமொழிக்கேற்ப சான்றோர் பெருமக்கள் பல்லோர் அவதரித...