Monday, May 30, 2016

கேழ்வரகு அப்பம்


கேப்பை, ராகி, ஆரியம் என்று பல பெயர்களில் அழைக்கப்படும் கேழ்வரகு மிக சத்தானதொரு சிறுதானியம். இதில் உள்ள ட்ரிப்டோஃபேன் (Tryptophan) என்னும் அமினோ அமிலம் பசி உணர்வை குறைப்பதால் உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்க உதவுகிறது. கேழ்வரகு உணவு வகைகள் மெதுவாக செரிமானமாவதால், அதிக கலோரிகள் உட்கொள்ளுவதை தடுக்கலாம். கேழ்வரகில் உள்ள நார்ச்சத்து, உணவு சாப்பிடும் போது ஒரு திருப்தி உணர்வை அளிப்பதால் உணவு அதிகம் உட்கொள்ளுவதை குறைக்க முடியும்.சேதமடைந்த திசுக்களை சரி செய்வதிலும், உடலின் நைட்ரஜன் நிலையை சமன்படுத்தவும் உதவுகிறது. கேப்பையில் கால்சியம் அதிகம் நிறைந்து இருப்பதால், எலும்புகள் வலுப்படும். அதோடு இதிலுள்ள தாவர வகை இரசாயனக் கலவைகள் (Phytochemical Compounds) சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. மற்றும் லெசித்தின் (Lecithin)மெத்தியோனைன் (Methionine) போன்ற அமினோ அமிலங்கள் (Amino acids), கல்லீரலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை வெளியேற்றுவதோடு அதன் அளவையும் குறைக்கிறது. இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் இரத்தசோகையைக் குணப்படுத்துகிறது. மலச்சிக்கலை குறைக்கிறது.  உயர் இரத்த அழுத்தம், கல்லீரல் நோய்கள், இதய நோய், ஆஸ்துமா மற்றும் புது தாய்மார்களுக்கு பால் சுரக்காமல் இருத்தல் போன்ற அனைத்து நோய்களையும் குணமாக்குகிறது.
இதிலுள்ள சத்துகள்: