Monday, July 7, 2014

மானசா





பவள சங்கரி

மானசா.. ஏய் மானசா.. எந்த உலகத்துல இருக்கே நீ..  எப்பப் பார்த்தாலும் காதுல பாட்டை மாட்டிக்கிட்டு, ஏதோ உலகத்துல சஞ்சாரம் பண்ணிக்கிட்டு .. என்ன பண்றே.. நான் கழுதையா கத்துறது ஏதாவது உனக்கு காதுல உழுகுதா..  இல்லைனா எப்பப் பார்த்தாலும் சிரிப்பும், கும்மாளமும் தான்” 

ஏனோ இந்த அம்மாக்களுக்கு மட்டும் தான் கடந்து வந்த அந்த ஸ்வீட் சிக்ஸ்டீன் மனசு மறந்தே போகுது.. எத்தனை சுகமான பருவம் அது. கண்ணுல பார்க்குறதெல்லாம் அழகு. எதோ எல்லாமே தனக்காகவே படைக்கப்பட்டது போல ஒரு நினைப்பு. அதோட உலகத்துலயே தன்னைவிட வேற அழகியே இல்லைங்கற மதர்ப்பு..  1008 கோணத்துல கண்ணாடியில அழகு பாக்குறதே முக்கியமான வேலை..  இத்தனை கற்பனையையும் அந்த ஒற்றை வரியில் தவிடு பொடியாக்க அம்மாவுக்கு மட்டுமே சாத்தியம். “இங்க பாருடி, சும்மா சிலுப்பிக்கிட்டுத் திரியாத.. பன்னிக்குட்டி கூட பருவத்துல அழகாத்தான் இருக்கும்.. போ.. போ.. போய் பொழப்பப் பாரு..”