Tuesday, October 22, 2013

என் பார்வையில் - இது நிகழாதிருந்திருக்கலாம்!


பவள சங்கரி


 நூல் பெயர்: இது நிகழாதிருந்திருக்கலாம்
ஆசிரியர் : ஜி. தமிழ்ச் செல்வி
பக்கங்கள் : 88
விலை : ரூ. 80
வெளியீடு : தாரிணி பதிப்பகம்
4 ஏ – ரம்யா பிளாட்ஸ்
32 – 79 காந்தி நகர் 4வது மெயின் ரோடு
அடையார்
சென்னை – 600020


ஆடிவரும்தென்றலெனில் ஆக்கும்துயர் கொஞ்சமல்ல
அத்தனையும் நீக்கியுளம் அன்புகொள்ளாதோ
கூடிவரும் பூவின்மணம் கொல்லுதய்யா உன்நினைவில்
கொண்டதுவோர் துன்பந்தனைக் கிள்ள வாராயோ
கோடியெனத் தன்னருகில் கொள்ளியெழிற் தாரகைகள்
கொட்டிகிடந்தென்ன மதி கூடிவிடாதே
ஓடிஒரு சோடியினை உள்ளமதிற் காணும்வரை
ஒவ்வொருநாள் தேய்ந்துமது ஒய்ந்துவிடாதே ”

Sunday, October 20, 2013

அன்பெனும் சிறைக்குள் ......... !


பவள சங்கரி
“அன்சார், எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு.. இது சரிவருமா. நம்மால் தனியாக சமாளிக்க முடியுமா? இனிமேல் நம் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் வரும். நாம் நிறைய நம் சுகங்களை விட்டுக்கொடுக்க வேண்டிவரும்.  இரவு முழுமையான தூக்கம்கூட கேள்விக்குறியாகிவிடும்”
“அது மட்டுமா டார்லிங்.. நமக்கு இடையில் இன்னொரு ஜீவன் வரும். பல தியாகங்கள்கூட செய்ய வேண்டிவரும், ஆனால் சமாளிக்கலாம் டோனி, ஒன்னும் பிரச்சனை இல்லைடா”
“இது என்ன சாதாரண விசயமா அன்சார்.  எவ்ளோ பெரிய விசயத்தை இவ்ளோ சாதாரணமா சொல்ற, ஏதோ டெக்னிகல் பிராஜக்ட் செய்வது போல. அப்டீல்லாம் கணக்கு போட்டு ஒரு தியரிக்குள்ள செய்யுற பிராஜக்ட் இல்லப்பா இது ”?