Friday, February 14, 2014

’புரட்சிச் சித்தர்’ சிவவாக்கியர்!



பவள சங்கரி


சமுதாயத்தில் பல புரட்சிகளை ஏற்படுத்திய, சிவவாக்கியர், ‘புரட்சிச் சித்தர்’ என்றே குறிப்பிடப்பட்டார். ஆரம்பத்தில் நாத்திகராக இருந்து பின் ஆத்திகராக மாறியவர் இவர். வேதியர் குலத்தில் பிறந்த சிவவாக்கியர் காசி யாத்திரை செல்கிறார். சென்ற இடத்தில் இவருக்கு இல்லறத்தில் நாட்டம் செல்ல, ‘சக்கிலி’ வகுப்பைச் சார்ந்த ஒரு ஞானியரிடம் சென்று தம் விருப்பத்தை வெளியிடுகிறார். அந்த ஞானியும் சிவவாக்கியருக்கு, காசும், பேய்ச்சுரைக்காயும் கொடுத்து,  “எந்தப் பெண் உனக்கு மணலும், இந்த பேய்ச்சுரைக்காயும் கொண்டு நல்ல உணவு சமைத்துப் போடுகிறாளோ அவளே உன் மனைவி”,  என்று  சொல்லி அனுப்பி வைக்கிறார். அவரும் இந்த ஆணையைச் சிரமேற்கொண்டு,  தேடியலைந்து, ஒரு குறப்பெண்ணைக் கண்டு அவளையே மணந்து இல்லறத்தில் ஈடுபடுகிறார். ஒரு நாள், பிழைப்பிற்காக மூங்கில் வெட்டும்போது, அது பொன்மாரி பொழிய அதை நீத்து, அங்கிருக்கும் ஒரு கீரையைப் பிடுங்குகிறார். அப்போது தன்னிலைப் பெற்று கொங்கணரால் உள்ளம் திருந்துகிறார். பின் சைவராக மாறி தம் பெயரில் தமிழில், ‘சிவவாக்கியம்’ என்ற நூலை எழுதுகிறார்.  இவர் பிறக்கும் போதே, ‘சிவ’ என்று சொல்லிக்கொண்டே பிறந்ததனால் இவருக்கு சிவவாக்கியர் என்று பெயரிட்டுள்ளனர்.  பின் வைணவராக மாறி, திருமழிசை ஆழ்வார் என்ற பெயர் பெற்றார். சிவவாக்கியர் உருவ வழிபாட்டை முற்றிலும் மறுத்தார். கடவுளின் பெயரால் சிலை உருவங்கள்  செய்து வைத்து வணங்குவதும், அவைகளுக்குத்  தினசரி பூசைகள், நைவேத்தியங்கள், திருவிழாக்கள்  செய்வதும் என்று தொன்று தொட்டு  நடந்து  வரும் வழமைகளை  மூடப்பழக்கங்கள் என்று  சாடுகிறார்.   

Thursday, February 13, 2014

கவிக்குயிலின் கவி முகம்! (2) - சரோஜினி நாயுடு


பவள சங்கரி

இன்று கவிக்குயிலின் 135 வது பிறந்த தினம்! 

சரோஜினி நாயுடு (1879 – 1949) இந்திய ஆங்கிலக் கவிஞர், சுதந்திரப் போராட்ட வீரர், பெண்ணுரிமை, அரசியல் ஆர்வலர், சொற்பொழிவாளர், மற்றும் நிர்வாகி இந்திய தேசிய காங்கிரஸ் முதல் பெண் தலைவர், மற்றும் முதல் இந்திய மாநில கவர்னராக இருந்தவர். இளமையில் எளிதில் உணர்ச்சிவயப்படுகிற ஒரு பெண்ணாகவும் இருந்திருக்கிறார்.

மெல்லிய இதயமும்பளிச்சென்ற கருத்துகளும் கொண்ட ஆங்கில கலாச்சாரமும்,இந்தியக் கலாச்சாரமும் ஒருங்கே அமையப்பெற்ற கவிக்குயிலின் பாடல்களில்,டெனிசன்ஷெல்லி மற்றும் எலிசபெத் பேரட் பிரௌனிங் ஆகிய ஆங்கிலக் கவிஞர்களின் தாக்கமும் இருந்தது. மிகுந்த கற்பனை வளமும்தாள லயமும்இசை வடிவமும்காதல்பிரிவுஏக்கம்இறப்பு,வாழ்வின் அற்புதங்கள் என்று அனைத்து ஆழ்மன உணர்வுகளையும் அழகு கவிதைகளாக்கும் வல்லமை பெற்றவரானார்.இந்திய அரசும் கேசரி ஹிந்த்’ என்னும் சிறப்பு வாய்ந்த பதக்கத்தைக் கொடுத்து அம்மையாரைக் கௌரவித்தது.

Corn Grinders

O little mouse, why dost thou cry
While merry stars laugh in the sky?


Alas! alas! my lord is dead!
Ah, who will ease my bitter pain?
He went to seek a millet-grain
In the rich farmer's granary shed;
They caught him in a baited snare,
And slew my lover unaware:
Alas! alas! my lord is dead.

Monday, February 10, 2014

மன அமைதிக்கு வித்து! – வேறுபாடற்ற மனித தத்துவம்



பவள சங்கரி
பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் – புவி
பேணி வளர்த்திடும் ஈசன்
மண்ணுக்குள்ளே சில மூடர் – நல்ல
மாதர் அறிவைக் கெடுத்தார்
கண்கள் இரண்டினில் ஒன்றைக் – குத்திக்
காட்சிக் கெடுத்திட லாமோ?
பெண்கள் அறிவை வளர்த்தால் – வையம்
பேதைமை யற்றிடும் காணீர்!
- பாரதியார்
இந்தக் கட்டுரையில் எங்கேனும் ஆணாதிக்கம், அல்லது பெண்ணியம் என்பதன் சாயல் துளியும் தென்படக்கூடாது என்பதில் தெளிவாகவே இருக்கிறேன். மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்த வேண்டி, போராட்டங்கள் நூற்றாண்டுகளாக நடந்துகொண்டிருந்தாலும், இன்று பெண்கள் தடம் பதிக்காதத் துறையே இல்லை என்னும் நிலை இருக்கும் ஒரு காலகட்டத்திலும் பெண்களின் போராட்டங்கள் ஓய்ந்தபாடில்லை. இங்கு பெண்களின் போராட்டம் என்று நான் குறிப்பிடும்போது சில வேளைகளில் பெண்களே பெண்களுக்கு எதிரியாகவும், தமக்குத்தாமே தேவையற்ற ஒரு எல்லைக்கோட்டை நிர்ணயித்துக்கொள்பவளாக இருப்பதையும் சேர்த்தே குறிப்பிட வேண்டியுள்ளது. இந்த எல்லைக்கோடு என்று நான் குறிப்பிடுவது நம்முடைய பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் எந்த விதத்திலும் பாதிக்காமல் இருக்கக்கூடிய எல்லைக்கோடுகளைத்தான்!