Saturday, September 17, 2016
Tuesday, September 13, 2016
Monday, September 12, 2016
பன்மொழிப் புலவன் பாரதீ
“விடுத லைக்கு மகளிரெல் லோரும்
வேட்கை கொண்டனம்; வெல்லுவ மென்றே
திடம னத்தின் மதுக்கிண்ண மீது
சேர்ந்து நாம்பிர திக்கினை செய்வோம்”
(பாரதியார் கவிதைகள். 577)
- “சீயூசூனி” என்னும் பெண் கவிஞர் சீன மொழியில் பாடிய பாடலின் , மாகவி பாரதியின் தமிழ் மொழிபெயர்ப்பு இது.
பாரதியார் புதுவையில் பத்தாண்டுகள் தங்கியிருந்தார், அப்பொழுது பிரெஞ்சு மொழியைக் கற்றிருக்கிறார். “லா மார்ஸெலேஸ்” என்னும் பிரெஞ்சு தேசிய கீதத்தை “அன்னை நன்னாட்டின் மக்காள்” என்று தமிழில் மொழிபெயர்ப்புச் செய்துள்ளார். தமிழில் தேசியகீதம் எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்ற இதுவே வித்தாய் அமைந்துள்ளது.
பாரதியின் எழுத்துக்கள் விவேகபாநு, ஞானபாநு, காமன் வீல், ஆர்யா, மெட்ராஸ் ஸ்டாண்டர்ட், நியூ இண்டியா, பெண்கல்வி, கலைமகள், தேசபக்தன், கதாரத்னாகரன் போன்ற இதழ்களில் அவர் மொழிபெயர்ப்புகள் இடம்பெற்றிருக்கின்றன.
Subscribe to:
Posts (Atom)
காகத்தின் நுண்ணறிவு!
காக்கை நாம் அன்றாடம் பார்க்கிற பறவை. ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது நாம் இயல்பாகப் பயன்படுத்தும் பழமொழி. நாங்கள் அன்றாடம் கா...

-
உதயன் படங்களைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியவை... நன்றி. ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு. (மீன்கொத்தி...
-
கண்ணதாசனின் ‘சேரமான் காதலி' (சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்) தமக்கென ஒரு உலகைப் படைத்துக்கொண்டு அதில் தாமே சக்கரவ...
-
தமிழ்த்துறை தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், சித்தா வேதா மையம், நியூ ஜெர்சி, அமெரிக்கா, சாந்தம் உலக...