Tuesday, May 27, 2014

சித்த சோரன்

பவள சங்கரி




ரோகிணியில் பிறந்த ரோசக்காரப்பிள்ளையவன்
திட்டுவாங்கினாலும் திருந்த மாட்டானவன்
செவியில் கட்டெறும்பாய் நுழைந்து
செல்லக் குறும்புகள் புரிந்திட்டானவன்
கண்ணைப் புரட்டி விழித்தாலும்
வண்ணம் பரப்பி வறுத்தெடுப்பானவன்
நன்மாலைகள் ஏந்தி நர்த்தனம் புரிந்தாலும்
நடுவானில் நின்று கூத்துகள் பலப்புரிபவன்
விளையாடு புழுதியோடு பூரித்திருப்பவன்