Wednesday, August 24, 2016

தீயவை ...


 ஒரு மனிதன் தொடர்ந்து தீய சொற்களையே கேட்டுக் கொண்டிருந்தாலோ தீய எண்ணங்களையேக் கொண்டிருந்தாலோ, தீய செயல்களே செய்து கொண்டிருந்தாலோ, அவர் மனதில் தீய பதிவுகள் நிரம்பி விடும். அதன் பிறகு அவருடைய இந்த தீய பதிவு அவர் அறியாமலே அவருடைய செயல்களில் பிரதிபலித்துவிடும். அவர் அந்தப் பதிவுகளின் கையில் ஒரு இயந்திரமாகி விடுவதால் அது தீயச் செயல்களையேச் செய்வதற்கு  கட்டாயப்படுத்துகிறது . அந்த மனிதனும் தீயவனாகி விடுகிறான். அதிலிருந்து அவனால் மீண்டு வரவும் முடிவதில்லை -  சுவாமி விவேகானந்தர்.

ஆண்டாள் – தமிழை ஆண்டாள்!


பவள சங்கரி
.
சிறீவில்லிப்புத்தூர் – கோதை பிறந்த ஊர், கோவிந்தன் வாழும் ஊர்!
சிறீவில்லிப்புத்தூர் என்ற இப் புனிதத்தலத்தின் காரணப் பெயர், சிறீ என்ற இலக்குமி அவதாரமான ஆண்டாள், வில்லி என்ற மன்னன் ஆண்ட பாம்பு புற்றுகள் நிறைந்த புத்தூரில் வாழுகிறாள் என்பதாகும்.
aan5
ஆண்டாள், பெரியாழ்வாருடன் வடபத்ரசாயி சுயம்புவாக அவதரித்த தலம் என்பதால் இது முப்புரி ஊட்டிய தலம்.

பாப்பா பாப்பா .. கதை கேளு! (37)

Tuesday, August 23, 2016

பிள்ளையாய் இருந்துவிட்டால் இல்லையென்றும் தொல்லை!



பிள்ளையாய் இருந்துவிட்டால் இல்லையென்றும் தொல்லை!


பின்னியவலையும் சிந்தியநஞ்சும் எறிந்தவஞ்சகமும்
ஏதுமறியா மழலையுள்ளம் பழிவாங்கும் பாதையறியாது
பசித்தவயிற்றுக்கு பால்சோறு படுத்துறங்க அன்னைமடி
கூடிக்களிக்க தந்தைமார் வித்தைக்காட்ட வீதிநாய்
விண்ணில்பறக்க வீசுதென்றல் ஓடிவிளையாட உடனொருநிலவு!

Monday, August 22, 2016

முத்தானகவி



ஆனந்தயாழை மீட்டி ஆயிரமாயிரம் 
இதயங்களை கனிவூட்டிய கவிஞன்
தரணியெலாம் தவிக்குமாறு தன்னுயிரிழந்து
தாம்பெற்ற செல்வங்களை தத்தளிக்கவிட்டு
மனையாளையும் மீளாத்துயரில் தவிக்கவிட்டு
எளிமையாய் வாழ்ந்து எளிதாய் மாய்ந்து
மானுடத்தின் அழியாச்சுடராய் ஒளிர்ந்து 
மாதவ வேள்வியின் ஆகுதியாய்
காலத்தேவன் ஆரத்தழுவலில் பிஞ்சு
மழலையையும் மறந்து  மேலுலகம்
மேவிய முத்தானகவிக்கு கண்ணீரஞ்சலிகள் :-(

பவளா