Friday, October 5, 2012

நம்பிக்கை ஒளி! (1)




பவள சங்கரி

அம்மா.. அம்மா. தூங்குறயா நீனு.. இந்த பாப்பா பொம்மையைப் பாறேன். திடீர்னு கண்ணே திறக்க மாட்டீங்குது.. அச்சச்சோ, பாப்பா மாரியே நீயும் கண்ணே தொறக்க மாட்டீங்கறே.. ஐய.. பாப்பா மாதிரி நீனும் வெள்ளாடறியா... அம்மா.. அம்மா...

அக்கா, அம்மா தூங்கறாங்க பாரு. தொந்திரவு பன்னாத. அம்மா நேத்தே காச்சல்னு சொல்லிச்சுதானே. நல்லா தூங்கட்டும். அப்பதான் சீக்கிரமா காச்சல் சரியாவும்.

இல்லை, மாலு எனக்கு வயிறு பசிக்குதே. அம்மா இன்னும் சோறு செய்யவே இல்லியே.. அம்மா எழுப்பச் சொல்லிச்சுதானே..

அப்பிடியா.. சரி எனக்குந்தான் பசிக்குது . சரி வா இரண்டு பேரும் சேந்து எழுப்பலாம். அப்பதான் அம்மா சீக்கிரமா எந்திரிக்கும்.. இல்லியா.. அப்பா வந்தா வேற திட்டுமில்ல. அம்மா ஏன் சோறாகலன்னு.. சீக்கிரமா எழுப்பலாம்..

Wednesday, October 3, 2012

நித்தியப் புன்னகை



-



வெகு எளிதாக
வயிறு புடைக்கச் செய்கிறாய்
உன் சொப்புவாய் குவித்து!
அது தள்ளாடுகிறது
காற்றடைத்தொரு பையாக.
அதன் பின்னாலேயே ஓடுகிறாய்
குப்பைமேடு, கோபுர வாசல்,
கட்டாந்தரை, கற்குவியல்,
சொகுசு வாகனம், சொக்கும் மலர்வனம்,
துர்நாற்றம் வீசும் சாக்கடைநீர்,
பிச்சைக்காரனின் வளைந்த தட்டு
பாரபட்சமில்லாத பயணம்!
பறந்தும் மிதந்தும்
போக்குக் காட்டுமதை
விரட்டிச் செல்கிறாய்,
உன் உலகமே அதுவாய் ஆனதோவென்று!
அது வெடிக்கையில்
என் இதயமும் சிதற
கலகலவென சிரித்தபடி
காற்றடைக்கத் தொடங்குகிறாய்
கவலையின்றி மீண்டும் உதடுகுவித்து
மற்றுமொரு வளிக்கூட்டின்
வயிறு புடைக்கச் செய்கிறாய்!








நித்தியப் புன்னகை



-



வெகு எளிதாக
வயிறு புடைக்கச் செய்கிறாய்
உன் சொப்புவாய் குவித்து!
அது தள்ளாடுகிறது
காற்றடைத்தொரு பையாக.
அதன் பின்னாலேயே ஓடுகிறாய்
குப்பைமேடு, கோபுர வாசல்,
கட்டாந்தரை, கற்குவியல்,
சொகுசு வாகனம், சொக்கும் மலர்வனம்,
துர்நாற்றம் வீசும் சாக்கடைநீர்,
பிச்சைக்காரனின் வளைந்த தட்டு
பாரபட்சமில்லாத பயணம்!
பறந்தும் மிதந்தும்
போக்குக் காட்டுமதை
விரட்டிச் செல்கிறாய்,
உன் உலகமே அதுவாய் ஆனதோவென்று!
அது வெடிக்கையில்
என் இதயமும் சிதற
கலகலவென சிரித்தபடி
காற்றடைக்கத் தொடங்குகிறாய்
கவலையின்றி மீண்டும் உதடுகுவித்து
மற்றுமொரு வளிக்கூட்டின்
வயிறு புடைக்கச் செய்கிறாய்!








Monday, October 1, 2012

காந்தி கண்ட ராமராச்சியம்



பவள சங்கரி

1869ம் ஆண்டு இதே நாளில் (அக்டோபர் 2,) அண்ணல், மகாத்மா, தேசப்பிதா, என்று அன்புடன் அழைக்கப்படுகிற மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி நம் இந்திய அன்னையின் செல்ல மகனாக அவதரித்தார். நம் நாடு மட்டுமன்றி, உலக நாடுகள் பலவும் அண்ணலை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டதன் முக்கிய காரணம் அவருடைய சத்தியாகிரகம் என்ற அறவழிப் போராட்டம்தான். குஜராத் மாநிலத்தில் கரம்சந்த காந்தி மற்றும் புத்லிபாய் என்ற பெற்றோருக்கு மகனாகப் பிறந்த இவருக்கு தம் 13ம் வயதிலேயே அன்னை கஸ்தூரிபாயுடன் திருமணம் நடந்தது. இங்கிலாந்தில் தம் வழக்குரைஞர் (பாரிஸ்டர்) படிப்பை முடித்து, மும்பையில் சில காலம் பணியாற்றினார். பிறகு ராஜ்காட்டில் சிலகாலம் ப்ணிபுரிந்து, அங்கிருந்து 1893 ஏப்ரல் மாதத்தில் தென்னாப்பிரிக்காவில் பணிபுரியச் சென்றார். தென்னாப்பிரிக்காவின் நிகழ்வுகளே இவரது அரசியல் வாழ்க்கைக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது. ஆங்கிலேயர் ஆட்சியினால், இனப்பாகுபாடும், மதவெறியும் மக்களை பாடாய்ப்படுத்திக் கொண்டிருந்ததைக் கண்டு மனம் நொந்தவர், போராட்டத்தில் ஈடுபடத்துவங்கினார்.


ஒருமுறை பிரிட்டோரியா நகருக்குச் செல்லும் பொருட்டு, தொடருந்தில், முதல் வகுப்பில் தகுந்த பயணச்சீட்டுடன் பயணித்தாலும், தான் ஒரு வெள்ளையராக இல்லாத காரணத்தினால் , அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிகழ்ச்சி அவர் மனதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்தியர்களின் வாக்குரிமையைப் பறிக்கும் தீர்மானத்தை எதிர்த்து, அதன்மூலம் மக்களுக்கு தங்கள் உரிமையைப் பெறவேண்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 1906ம் ஆண்டு, ஜோகானாஸ்பர்க் நகரில் முதன் முறையாக ஒத்துழையாமை, சத்தியாகிரகம் என்ற அறவழியில் போராடியதன் மூலமாக தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்தியர்களின் சமூக வாழ்வை மேம்படுத்தும் முயற்சியை மேற்கொண்டார். இதற்காக காந்தியுடன் சேர்ந்து பலரும், பலமுறை சிறைவாசமும் செய்ய வேண்டியிருந்தது. இறுதியில் வெற்றியும் பெற்று இந்தியா திரும்பினார். 1920ம் ஆண்டு, ஒத்துழையாமை இயக்கம் மூலம், அன்னிய பொருட்களை புறக்கணித்தல், மதுபானக்கடைகள் முன் மறியல் செய்தல் போன்றவற்றில் பெண்களும் பங்கெடுத்தனர். இராட்டை வைத்து நூல் நூற்று கதர் துணி நெய்தலிலும் ஈடுபட்டனர். இதனால் இந்திய மக்கள் பொருளாதார முன்னேற்றம் பெறவும் வழிவகுத்தார். ஆங்கிலேய அரசிற்கு நட்டமேற்படவும் வழிவகுத்தது.

இந்திய தேசிய காங்கிரசில் இணைந்து 1921ம் ஆண்டு அதன் தலைமைப் பதவியையும் ஏற்றார். ரவீந்திரநாத் தாகூர், கோகலே போன்றோரின் நட்பும் கிடைத்தது. சுதேசி கொள்கை மற்றும் சத்தியாகிரக கொள்கைகள் மூலமாக் இந்திய தேசிய காங்கிரசில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தினார். அது மாபெரும் விடுதலை இயக்கமாக உருப்பெற்றது. இந்தியர்களால், இந்தியாவில் தயாரிக்கப்படும் உப்பிற்கு இங்கிலாந்து அரசு உரிமை கொண்டாடி, அதை வேறு யாரும் விற்கக்கூடாது என்று தடை உத்திரவு போட்டது. இதை எதிர்த்து 1930ம் ஆண்டு மார்ச் மாதம் 2ம் தேதி, அண்ணல் காந்தியடிகள் 78 சத்தியாகிரகப் போராளிகளுடன், அகமதாபாத்திலிருந்து 240 மைல் 23 நாட்கள் நடைப்பயணமாக தண்டி கடற்கரை நோக்கி வந்தனர். அங்கு அவர்களுடன் சேர்ந்து உப்பு காய்ச்சி அதை பொது மக்களுக்கு விநியோகம் செய்ததோடு, தொடர்ந்து அது போலவே தயாரிக்கவும் மக்களை ஊக்குவித்தார். இந்தியாவில் பல இடங்களில் இதற்காக பலர் சிறையிலடைக்கப்படனர். நம் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இது ஒரு மைல்கல் எனலாம். இறுதியில் ஆங்கில அரசு உப்பின் மீது போட்ட வரியை விலக்கிக் கொண்டது.

1932ம் ஆண்டில் வைசிராய் வெலிங்டன் மூலமாக அண்ணல் கைது செய்யப்பட்டார். நாடு முழுவதும் கொதித்தெழுந்தது. கடையடைப்பு, வேலை நிறுத்தம் என்று மக்கள் ஈடுபட்டதால் அடக்கு முறை செய்யப்பட்டது. பல முகியமான பெருந்தலைவர்களும் கைது செய்யப்பட்டதோடு காங்கிரசு குழுவும் கலைக்கப்பட்டது.

 அதற்குப் பிறகு இடைவிடாமல் பல போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தார். 1942ல் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்திலும் அண்ணலின் பங்கு பெருமளவில் இருந்தது. இதன் முக்கிய அம்சம் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம். 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் நாள் நள்ளிரவில் நம் இந்திய நாடு முழு சுதந்திரம் பெற்றபோதும், இந்திய - பாகிஸ்தான் பிரிவினை அண்ணலை துக்கம் கொள்ளச் செய்தது. பகவத் கீதை மற்றும் சமண சமயக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டிருந்தார். லியோ டால்ஸ்டாயின் எழுத்துக்களால் கவரப்பட்டிருந்தார்.

1902ம் ஆண்டிற்குப் பிறகு பிரம்மச்சரிய விரதம், வாரத்தில் ஒரு நாள் மௌன விரதம், உணவுக் கட்டுப்பாடு, அசைவ உணவை முழுதும் தவிர்த்தல், சத்தியம், அகிம்சை போன்ற பல கொள்கைகளை தம் வாழ்நாள் இறுதிவரை கடைபிடித்தார். 1948, ஜனவரி 30ம் நாள், புது தில்லியில் நாதுராம் கோட்சே என்பவனால் சுட்டுக் கொல்லப்பட்டார். அண்ணல் காந்தியடிகள் ’சத்திய சோதனை’ என்ற தம் சுயசரிதையை தமது தாய் மொழியான குஜராத்தி மொழியில் எழுதியுள்ளார். பல உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழில், ரா.வேங்கடராஜூலு என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

தம்முடைய சத்திய சோதனைகள் தேடித்தந்திருக்கும் ‘மகாத்மா’ என்ற பட்டத்தை தான் மதிக்கவில்லை என்றும் அப்பட்டம் தனக்கு மன வேதனையைத்தான் அளித்துள்ளது என்பதையும் தம் சுயசரிதையின் முதல் அத்தியாயத்திலேயே கூறுகிறார். கடவுளை நேரில் காண வேண்டும் என்றும், மோட்சம் அடைய வேண்டும் என்பதையே முக்கியமான இலட்சியமாகக் கொண்டிருந்தார். கடவுளைக் காண வேண்டும் என்ற தீவிர வேட்கையில் தம் உயிரையும் தியாகம் செய்ய சித்தமாக இருப்பதாகக் குறிப்பிடுகிறார். சத்தியத்தை நாடிச் செல்பவர்கள் தம்மை தூசியைவிட கீழாக எண்ண வேண்டும் என்கிறார். அந்த அளவிற்கு பணிவுள்ளவராக தம்மை மாற்றிக்கொள்ள வேண்டும் என்கிறார்.

”இளைஞர்கள் அனைவரும் அழகிய கையெழுத்து அவசியம் வேண்டும் என்பதை உணர வேண்டும். குழந்தைகளுக்கு எழுத்து பயிற்சி அளிக்கும் முன் ஓவியப் பயிற்சி  அளிக்கப்பட வேண்டும். ஓவியம் வரைய பயிற்சி இருந்தால் கையெழுத்தும் அழகாக வரும்.”

“வாய்மையாக இருக்க நினைப்பவன் கவனமானவனாகவும் இருக்க வேண்டும் ”

” ஏழை எளியோரும் இது நம் நாடு என்று எண்ணக்கூடிய இந்தியாவிற்காக நான் பாடுபடுவேன்.அந்த இந்தியாவில் எளியோருக்கு உரிமை இருக்கும். உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாடு நீங்கியிருக்கும். அனைத்துப்பிரிவினருக்கும் சமமான வாழ்வு இருக்கும். தீண்டாமை சாபமும். மதுப்பழக்கமும் ஒழிந்திருக்கும். ஆண்களுக்கு நிகராக பெண்களும் உரிமைகள் பெற்றிருப்பர். மற்ற உலகத்தினரோடு நாமும் அமைதியான வாழ்க்கையைப் பெற்றிருப்போம். இதுதான் நான் காணும் கனவு இந்தியா.”


நன்றி : வல்லமை வெளியீடு

Sunday, September 30, 2012

சிங்கமடங்கல் - கலீல் ஜிப்ரான்






கதையே கவிதையாய்!

சிங்கமடங்கல் - கலீல் ஜிப்ரான்
 (சிங்கத்தின் மகள்)

   தம் சிம்மாசனத்தின் மீது துயில் கொண்டிருந்த ஒரு மூதாட்டி அரசிக்கு சாமரம் வீசிக்கொண்டு நின்றிருந்தனர், நான்கு அடிமைகள்.  குறட்டை விட்டுக்கொண்டிருந்த அந்த அரசியின் மடியில் பூனை ஒன்று மெலிதாக உறுமிக்கொண்டு, அந்த அடிமைகளை சோம்பலுடன் வெறித்துக் கொண்டிருந்தது. 

  முதல் அடிமை பேச ஆரம்பித்து, “இந்த மூதாட்டி தூங்கும் போது எவ்வளவு அவலடசணமாக இருக்கிறார் பாருங்கள். அவர் வாய் துருத்திக்கொண்டு, சாத்தான் தனக்கு மூச்சுத்திணறல் ஏற்படுத்துவது போல சுவாசித்துக் கொண்டிருக்கிறார்.என்றான்.

  பின்னர் அந்த பூனை உறுமிக்கொண்டே, “ அவருடைய உறக்க நிலையிலும், உங்களுடைய விழிப்பு நிலை, அடிமைத்தனத்தின் அவலட்சணத்தில் பாதிகூட இல்லை என்றது.

  மேலும் அந்த இரண்டாம் அடிமையோ, “உறக்கம் அவருடைய சுருக்கங்களை ஆழப்படுத்துவதைவிட, மென்மையாக்கக்கூடும் என்று நீவிர் எண்ணியிருக்கலாம். அவர் ஏதோ தீய கனவு கண்டுகொண்டிருக்கலாம்என்றான்.

  அந்தப் பூனை மேலும் உறுமியவாறு, “நீயும்கூட உறங்கி, உம்முடைய சுதந்திரம் குறித்து கனவு காணலாமல்லவாஎன்றது.

   மேலும் அந்த மூன்றாம் அடிமையோ, “ஒருவேளை அவர்தாம் கொன்றவர்களின்  ஊர்வலத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறாரோ என்னவோஎன்றான்.

  மேலும் அந்த பூனை உறுமிக்கொண்டு, “ ஆம், உம்முடைய முன்னோர்கள் மற்றும் உம்முடைய சந்ததியினரின் ஊர்வலத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்என்றது.

  மேலும் அந்த நான்காம் அடிமையோ, “அவரைப்பற்றி பேசுவதற்கு மிகவும் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் நின்று கொண்டே விசிறிக்கொண்டிருப்பது எம்மை மிகவும் களைப்படையச் செய்கிறதேஎன்றான். 

  அந்தப் பூனை மேலும் உறுமலுடன், “ முதலும், முடிவுமற்ற அனைத்திற்கும் நீவிர் விசிறிக் கொண்டிருக்கலாம்; காரணம், பூமியில் உள்ளது போன்றேதான் அது சுவர்கத்திலும் உள்ளதுஎன்றது.

  அந்த நேரத்தில் அந்த மூதாட்டி அரசி உறக்கத்திலேயே தலையசைத்தபோது அவளுடைய கிரீடம் தரையில் விழுந்தது.

  அதற்கு அதில் ஒரு அடிமை, “அது ஒரு கெட்ட சகுனம்என்றான்.

  மேலும் அந்த பூனையோ உறுமலுடன், “ஒன்றிற்கு தீய சகுனமாக இருக்கக்கூடியது மற்றொன்றிற்கு நல்ல சகுனமாகிறதுஎன்றது.

  இரண்டாம் அடிமையோ, “அவர் விழித்தவுடன் தம்முடைய கிரீடம் கீழே வீழ்ந்து கிடப்பதைப் பார்த்து கட்டாயம் நம்மைக் கொல்லப்போகிறார்என்றான்.

  அதற்கு மேலும் அந்த பூனையோ, “உங்கள் பிறப்பிலிருந்து அன்றாடம் அவர் உம்மை கொன்றுகொண்டுதான் இருக்கிறார் என்றாலும் நீவிர் அதை அறியவேயில்லைஎன்றது.

  மேலும் அந்த மூன்றாம் அடிமையோ, “ஆமாம், அவர் நம்மைக் கொன்றுவிட்டு, அதை இறைவருக்கான அர்ப்பணிப்பு என்பார்”, என்றான்.

  மேலும் அந்த பூனையோ, “ பலமற்றவர்கள் மட்டுமே  கடவுளருக்கு அர்ப்பணிக்கப்படுகிறார்கள்என்றது.

  மேலும் அந்த நான்காம் அடிமையோ, மற்றவர்களை அமைதியாக இருக்கச் செய்துவிட்டு, மெதுவாக அலுங்காமல் அவர் உறக்கத்தையும் கெடுக்காமல், அந்த மூதாட்டி அரசியின் தலையில் அந்தக் கிரீடத்தை எடுத்து திரும்ப வைத்தான்..

  மேலும் அந்த பூனையோ உறுமலுடன், “ஒரு அடிமை மட்டுமே வீழ்ந்த கிரீடத்தை ஒப்படைக்கிறான்என்றது.

  சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த மூதாட்டி அரசி விழித்து, தம்மையே பார்த்துக்கொண்டு கொட்டாவி விட்டாள். பிறகு அவள், யான் கனவு கண்டேன். அதில் ஒரு பழமையான ஓக் மரத்தைச் சுற்றி, நான்கு கம்பளிப் பூச்சிகள் தேள் ஒன்றினால் விரட்டப்படுவதைக் கண்டேன். அந்த என் கனவு எனக்குப் பிடிக்கவில்லைஎன்றாள்.

  தம் கண்களை மூடிக்கொண்டு உறங்கப்போனாள் அவள் மீண்டும். குறட்டை விட ஆரம்பித்தவளுக்கு நான்கு அடிமைகளும் விசிறினர்.

  மேலும் அந்த பூனை உறுமலுடன், “விசிறுங்கள், விசிறுங்கள், முட்டாள்களே. நீங்கள் விசிறுங்கள். நீங்கள் விசிறுகிறீர்கள். ஆனால் அந்த நெருப்பு உங்களை பயன்படுத்திக்கொள்கிறதுஎன்றது.


THE FORE RUNNER - THE LION'S DAUGHTER

      Four slaves stood fanning an old queen who was asleep upon her throne. And she was snoring. And upon the queen's lap a cat lay purring and gazing lazily at the slaves.
      The first slave spoke, and said, "How ugly this old woman is in her sleep. See her mouth droop; and she breathes as if the devil were choking her."
      Then the cat said, purring, "Not half so ugly in her sleep as you in your waking slavery."
      And the second slave said, "You would think sleep would smooth her wrinkles instead of deepening them. She must be dreaming of something evil."
      And the cat purred, "Would that you might sleep also and dream of your freedom."
      And the third slave said, "Perhaps she is seeing the procession of all those that she has slain."
      And the cat purred, "Aye, she sees the procession of your forefathers and your descendants."
      And the fourth slave said, "It is all very well to talk about her, but it does not make me less weary of standing and fanning."
      And the cat purred, "You shall be fanning to all eternity; for as it is on earth, so it is in heaven."
      At this moment the old queen nodded in her sleep, and her crown fell to the floor.
      And one of the slaves said, "That is a bad omen."
      And the cat purred, "The bad omen of one is the good omen of another."
      And the second slave said, "What if she should wake, and find her crown fallen! She would surely slay us."
      And the cat purred, "Daily from your birth she has slain you and you know it not."
      And the third slave said, "Yes, she would slay us and she would call it making a sacrifice to the gods."
      And the cat purred, "Only the weak are sacrificed to the gods."
      And the fourth slave silenced the others, and softly he picked up the crown and replaced it, without waking her, on the old queen's head.
      And the cat purred, "Only a slave restores a crown that has fallen."
      And after a while the old queen woke, and she looked about her and yawned. Then she said, "Methought I dreamed, and I saw four caterpillars chased by a scorpion around the trunk of an ancient oak tree. I like not my dream."
      Then she closed her eyes and went to sleep again. And she snored. And the four slaves went on fanning her.
      And the cat purred, "Fan on, fan on, stupids. You fan but the fire that consumes you."
    

 நன்றி : திண்ணை வெளியீடு