Sunday, August 17, 2014

ஆறில் ஒரு பங்கு - ஆங்கிலேயரால் தடை செய்யப்பட்ட நூல்


பவள சங்கரி



உயிரோட்டமுள்ள உரைநடைக்கு உரைகல் பாரதி!



1911, டிசம்பர் 6ம் தேதி மகாகவி பாரதியின் “ஆறில் ஒரு பங்கு” என்ற ஒரு நூல் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நூலில் தடை செய்யும் அளவிற்கு அப்படி என்னதான் இருக்கிறது என்று அறியும் ஆர்வம் எழாமல் இல்லை. இதற்கு இன்னொரு முக்கியமான காரணம் 1912 ம் ஆண்டுக்குப் பிறகு பாரதியாரின் படைப்புகள் ஒரு கட்டுக்குள் வந்திருக்கிறது. தம் வாழ்நாளில் எஞ்சிய அந்த ஒன்பது ஆண்டுகள், வறுமையின் கொடுமையில் சிக்கி, சின்னாபின்னமாகிவிட்டது.  இந்த காலகட்டத்தில் மகாகவி எழுதிய பாடல்கள் மிகக்குறைவே என்கிறார் ஞானபாரதி தம் நுழைவாயிலில்.  

மகாகவி பாரதியின் புதல்வி சகுந்தலா தம் தந்தையாரின் அந்நாட்கள் குறித்து நினைவு கூர்கையில், “கவிதை புனைவதும், கற்பனையுலகில் சஞ்சரிப்பதுமாகக் காலம் தள்ளி வந்த என் தந்தையாருக்கு நாளாக நாளாக மிக சங்கடமான நிலையேற்பட்டுவிட்டது. அநேக நாட்கள் மிகுந்த துன்பத்தோடும் - மனத்துடிப்போடும் எது சொல்வதெனத் தெரியாத வேதனையுடன் கழிக்க ஆரம்பித்தார். நடுப்பகல் உச்சி வேளைகளில் மேன்மாடத்தில் நின்று பாடுவார். அவர் மனது அந்த வெயிலில் என்ன பாடுபட்டதோ யாரறிவார்? நண்பர்கள் உள்பட எல்லாவற்றையும் வெறுக்கத் தொடங்கினார். பல நாட்களாக யாதொரு பாட்டும் எழுதாமல் வேதனையுடன் கழிந்தார்” என்கிறார். 

பொன் மொழிகள்


பவள சங்கரி