Showing posts with label வாழ்வியல் தத்துவம். Show all posts
Showing posts with label வாழ்வியல் தத்துவம். Show all posts

Monday, November 5, 2018

தேளின் குணம் .....



நல்லவராய் வாழ்வது என்பது இன்றைய காலகட்டத்தில் அவ்வளவு எளிதான காரியமல்ல என்பதை விளக்கும் புத்தத் தத்துவக் கதைகளில் ஒன்று. தேளின் குணம் கொட்டுவது என்று தெரிந்தும் தேளையும் அரவணைக்க நினைப்பது நல்லவனின் விதி! 

ஒரு முறை ஆற்றைக்கடக்க யாரேனும் தனக்கு உதவ மாட்டார்களா என்று போவோர் வருவோரிடமெல்லாம் வேண்டி நிற்கிறது ஒரு தேள். தேளின் குணமறிந்து பல உயிரினிங்களும் அதை மறுத்து, தப்பித்தால் போதுமென்று கடந்து செல்லும்போது, ஆற்றைக் கடக்க முனையும் ஒரு ஆமை மட்டும் இந்தத் தேளின் மீது பரிதாபம் கொண்டு தன் மீது ஏற்றிக்கொண்டு செல்கிறது. சிறிது தூரம் அமைதியாக வந்த தேள் சும்மா இருக்கமாட்டாமல் ஆமையின் ஓட்டின் மீது மெல்ல கொட்டிப்பார்க்கிறது. ஆமைக்கு ஓடு என்பதால் உறைக்கவில்லை. மீண்டும், மீண்டும் கொட்டிப் பார்த்துவிட்டு, “என்னடா இந்த ஆமையிடம் ஒரு அசைவும் இல்லையே ... 4 முறைகள் கொட்டியும் எந்த அசைவும் இல்லையே என்ற ஆச்சரியத்தில், பொறுக்க முடியாமல் அந்த ஆமையிடமே கேட்டு விடுகிறது. அதற்கு ஆமையும், ஓ நீ என்னைக் கொட்டியதே எனக்குத் தெரியாதே ...  என் ஓட்டின் மீது கொட்டினால் எனக்கு வலிக்காதே ..” என்றது அப்பாவியாய். அதற்கு அந்த தேளும் விடாமல், அப்ப உனக்கு எங்க கொட்டினால் வலிக்கும் என்று ஆர்வமாகக் கேட்க, அந்த ஆமையும் என் கழுத்துப் பகுதியில் கொட்டினால் மட்டுமே என்னால் வலியை உணர முடியும்” என்று சொல்லியவாறே கழுத்தை உள்ளிழுக்க முனைந்தது. அதற்குள் தேளும் ஆமையின் கழுத்தைப் பார்த்து கொட்டுவதற்கு முயல, கோபம் கொண்ட ஆமை சட்டென்று தண்ணீரில் மூழ்க, தேள் இறந்து மிதக்க ஆரம்பித்தது ... 

Monday, September 20, 2010

'சுயம்' எங்கே இருக்கிறது ?

சிந்திக்க வேண்டியவைகள்

'நான்' மகிழ்ச்சியாக இருக்கிறேன். 'நான்' குலோப் ஜாமூன் உண்ணப் போகிறேன். 'எனக்கு' மனசே சரியில்லை, ஒரே குழப்பமாக இருக்கிறது.

இங்கே மகிழ்ச்சியாக இருக்கிற அந்த 'நான்' யார்? மனசே சரியில்லை என்று சொல்கிற 'நான்' [எனக்கு] யார்? குழப்பமான மனதைக் கண்டுபிடித்தது யார்? யார் மனது சரியில்லாமல் குழப்பமாக இருக்கிறது?...........................இதுதாங்க என்னோட பெரிய டவுட் இப்போ.....யப்பா.......கண்ணைக் கட்டுதே...........

'நான்' என் 'சுயம்' என்பதை எப்படி கண்டுபிடிப்பது? ஆள் காட்டி விரலைத் திருப்பி என் மீதே காட்டுவதா? இல்லை தத்துவ ஞானிகளை நாடுவதா?

ஆதிகாலத்திய எகிப்தியர்கள் 'சுய' கட்டுப்பாட்டுச் செயல்பாடுகள் மற்றும் எண்ணங்கள் என்பது, 'ஹோமன்க்யூலஸ்' [homonculus] என்கிற குட்டி மனிதன் தலையினுள் உட்கார்ந்திருப்பதாக நம்பினார்கள்.

டெஸ்கார்ட்ஸ், [Descartes] ஆன்மா, மூளையில் உள்ள சுரப்பிகளில் [Pineal gland] உடலைத் தொடர்பு கொள்கிறது என்றார். மேற்கத்திய மதங்களோ, இந்தப் பிரச்சனையை வேறு விதமாக நோக்கியது. அதாவது, அழியக் கூடிய மூளைக்கும் அப்பால், அழிவேயில்லாத ஒரு 'சுயம்' அதாவது ஆன்மா இருக்கிறது என்றனர்.

ஆனால் பெரும்பாலான நவீன விஞ்ஞானிகள், 'மனம்' என்பது எப்பொழுதும் ஒரு சர்ச்சைக்குரிய விடயமாகவே இருப்பதாகக் கருதுகின்றனர். பலவிதமான மதம் சம்பந்தப்பட்ட நம்பிக்கைகள் இருந்தாலும், பலர் மனம் [mind] அல்லது 'சுய-விழிப்புணர்வு' [self-awareness] என்பதை, முன் பக்க மூளைப்பகுதியில் கார்டெக்சில் [cortex] உள்ள ஒரு பொருளே தவிர, "இயந்திரத்திற்குள் இருக்கிற பூதம்" அல்ல என்று கருதுகின்றனர். கார்டெக்சில் பாதிப்பு ஏற்பட்டாலோ அல்லது பாதிப்பகுதி முழுவதுமாக நீக்கப்பட்டாலுமோ, ஒரு மனிதனின் 'சுய உணர்வு' ஏன் பழுது படுவதில்லை என்பதே விஞ்ஞானிகளுக்கும் புரியாத புதிராகவே உள்ளது.

சில விஞ்ஞானிகள்,'சுய உணர்வு' என்பதே ஒரு பிரதி பிம்பம், மூளையின் முழுமையான செயல்பாடுகளின் விளைவாக கிடைக்கின்ற ஒரு வகையான உப பொருளாகவே கருதுகின்றனர்.

நரம்பியல் வல்லுனர்களோ நம்முடைய பல செயல்கள் மற்றும் தெரிவுகள் [choices] சுயநினைவுடனான பாதையில் செல்லாமல், தற்செயலாக நிகழக் கூடியதாகக் குறிப்பிடுகின்றனர்.

மனத்திட்பம் அல்லது துணிவு என்பதனை பயிற்சியளிக்கக் கூடிய மையம் என்று மூளையில் எதுவும் தனியாக இல்லையாம். அதைப் போலவே மூளை ஆய்வாளர் மைக்கேல்,'சுய உணர்வு' அல்லது நினைவு என்பதே ஒரு மாயத் தோற்றம் [illusion] என்கிறார்.

புத்த மதத்தின் போதனைகளில் 'சுயம்' என்பது தனிப்பட்ட பொருள் அல்ல. ஆனால் எண்ணங்கள், புலனறிவு, பொதுக்கருத்துக்கள் மற்றும் நொடிக்கு நொடி மாறும் உணர்வுகள் இவைகளின் கூட்டமைப்பேயாகும் என்கிறது.

தத்துவ மேதை சாக்ரடீஸ், 'சுயம்' ஒன்றுதான் ஆன்மாவை அடைக்கக் கூடிய சிறை என்கிறார்.

மனித மனத்தால், இன்பம், துன்பம், அமைதி, பேரின்பம் எனும் உணர்வுகள் ஏற்றுக் கொள்ளப் பெற்று கருவழியாகத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் மறை பொருள் சுரங்கம் தான் மனித மனம்.

மனிதனுடைய புலனறிவிற்கு எட்டாதது மனம், உயிர், மெய்ப்பொருள் ஆகும். மனமானது எங்கே, எப்படி இயங்குகிறது என்பது பற்றி இன்று வரையில், மனதைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிற விஞ்ஞானிகளுக்கும் புலப்படவில்லை.

உடலில் உயிர் இல்லாத போது, உணர்ச்சிகளும் இல்லை. உயிரே உணர்வாக மாற்றம் பெறுகிறது. உயிர் உணர்ச்சியாக மலரும் கட்டத்தில்தான் மனம் பிறக்கிறது. எனவே உயிர்தான் மனம்.

மனத்தை அறிவென்றும் அழைக்கின்றோம். எண்ணம், சொல், செயல் என்ற மூன்றிற்கும், இயக்கக் களமாக இருப்பது மனம். இத்தகைய பருப் பொருளான மனத்திற்கு ஆண், பெண் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. உயிர் பொதுவானது. ஆண், பெண் என்ற பேதமற்ற அத்தகைய மனதை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருபவர்களே மாமனிதர்களாகிறார்கள்.

"ஊன் கெட்டு உயிர் கெட்டு உணர்வு கெட்டென் உள்ளமும் போய்
நான் கெட்ட வாபாடித் தெள்ளேனம் கொட்டாமோ"
என்று மாணிக்கவாசக சுவாமிகள் திருவாசகத்தில் அருள்கிறார்.
'நான்' கெட்ட நிலையில் அவர்கள் செயல்கள் யாவும் இறை செயலாகவே நிகழும்.

இப்போது சொல்லுங்கள்! என்ன நினைக்கிறீர்கள். நம்முடைய 'சுயம்' எங்கே இருக்கிறது ? யார் நம் எண்ணங்களை செயல்படுத்துகிறார்கள் ?...................

காகத்தின் நுண்ணறிவு!

  காக்கை நாம் அன்றாடம் பார்க்கிற பறவை. ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது நாம் இயல்பாகப் பயன்படுத்தும் பழமொழி. நாங்கள் அன்றாடம் கா...