Friday, November 15, 2013

பாட்டி சொன்ன கதைகள் 18




ஹாய் குட்டீஸ் நலமா?


‘தானத்திலே சிறந்தது கண் தானம்’. 


கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடாதவர்கள் இருக்க முடியாது. கொஞ்ச நேரம் கண்கள் கட்டப்படிருந்தால் நாம் எவ்வளவு சிரமப்படுகிறோம். இந்த உலகமே இருண்டதுபோல் எல்லாம் கருமையாக... அப்பப்பா..  இப்படியே வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டும் என்றால் நினைத்துப் பார்க்கவும் முடியவில்லை இல்லையா? இப்படித்தான் நம் இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 70 இலட்சம் பேர் பார்வையற்றவர்களாக இருக்கிறார்கள். கருவிழி நோயால் பாதிக்கப்பட்டு கண் பார்வை இழந்ததினால் அறுவைச் சிகிச்சைக்காக காத்திருப்போர் மட்டும் 10 இலட்சம் பேர். ஒரு ஆண்டிற்கு ஒரு இலட்சம் வரை கருவிழிகள் தேவைப்படுகிறது என்கிறது கணக்கெடுப்பு. ஆனால் நம் இந்தியாவில் கண் தானம் மூலம் கிடைப்பதென்னவோ 22,000 கருவிழிகள் மட்டுமே. இதற்கு நாம் என்ன செய்யலாம்? முதல்ல நம்ம கண்ணை பொன்னைவிட பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும். நமக்குத் தெரிந்தவர்களிடம் எல்லாம் கண் தானம் பற்றி எடுத்துச் சொல்லலாம். நம் குடும்பத்தில் இருப்பவர் அனைவரையும் கண் தானம் செய்யும்படி கேட்டுக்கொள்ளலாம்.  கண் தெரியாத நம் சக தோழர்களுக்கு நம்மால் முடிந்த உதவியைச் செய்யலாம். 

சரி, யார் யார் கண் தானம் செய்ய முடியும் தெரியுமா?

Monday, November 11, 2013

அதிரடி தீபாவளி!


பவள சங்கரி


எதற்காக என்னைத் தேர்ந்தெடுத்தாய் நீஉனக்கு என்ன பிரச்சனை? என்னால் உனக்கு என்ன காரியம் ஆக வேண்டும்? எப்படி உதவ முடியும் உனக்கு நான்? ஏன் என்னை இப்படி சுற்றிச் சுற்றி வருகிறாய்என்னைப் பற்றி உனக்கு என்ன தெரியும் மச்சி....?”

, இதுதான் உன்னோட பிரச்சனை மீத்து.. எதுக்கு இப்படி கேள்வி மேல கேள்வி கேட்கறே. அதுவும் மச்சினெல்லாம் சொல்றே ஃபிரண்ட்ஸ்குள்ளதான் இப்படியெல்லாம் பேசுவாங்க. இல்லேனா அக்கா ஹஸ்பண்டை மச்சான்னு சொல்லுவாங்க. நீ மும்பையிலருந்து வந்ததால உனக்கு இதெல்லாம் தெரிய நியாயமில்ல. அதான் இப்படி யாரை வேணுமின்னாலும் மச்சான்னு கூப்பிடுற..  இனிமே ஜாக்கிரதையா இரு, சந்தேகம்னா எங்க யார்கிட்டயாவது கேட்டுட்டு பிறகு இப்படியெல்லாம் பேசலாம்சரியா.. ”

ஏய் இவன பாருப்பா, டெய்லி இதே நேரத்துக்கு கரெக்டா வந்து நிக்கிறான்கரெக்டா ஆபீஸ் விட்டு வெளியே வர  நேரத்துக்கு வந்துடறான். எவ்வளவு திட்டினாலும் கோபமே வரமாட்டேங்குது.. என்ன மனுசன் இவன்.. சே.. முகத்தை வேற இப்படி பாவமா வச்சிக்கறான்.. எந்த கேள்வி கேட்டாலும்  தலையை குனிஞ்சிகிட்டு யூ ன்னு சொல்றான்நான் சரின்னு சொன்னா எங்க வீட்டில வந்து பொண்ணு கேப்பானாம்எவ்ளோ தைரியம் பாறேன்.. முன்ன, பின்ன ஒன்னும் தெரியாத ஒரு ஆளைப்போய் நானே எங்க வீட்டுல  என்னை கட்டிக்குடுக்கச்சொல்லி ரெக்கமண்ட் பண்ணனுமாம். இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல...”

இதை நீ முன்னாடியே சொல்லியிருக்கணும். 30 நாளா ஒரு மனுசனை உன் பின்னால அலையவிட்டு இப்ப சொல்றயே . உனக்கும் குறும்புதானே.. ”

Sunday, November 10, 2013

தனிமையின் இனிமை!



                                        நன்றி : ஓவியம் - திரு ஆர்,எஸ்.மணி

இயலாது என்று சொல்லும்
இம்சையைக் கொடுக்காதே
இயல்பாய் இருக்கும் இனிமை
இங்கிதமாய் நீளும் தனிமை!

நாளும் ஒரு பாடமடி
நிதமும் ஒரு முகமூடி
நகலும் அசலும் உறவாடி
கருமமேக் கண்ணாயினர்.

ஆர்ப்பரிக்காத அமைதி
உள்ளக் கொந்தளிப்பின்
உச்சம் உலர்ந்த சுவாசம்
உயிரில் கலந்த உன்னதம்!

அமைதியான நதியின் ஓடம்
அளவில்லாத கருணை ஈரம்
பிழையில்லாத வான் மேகம்
பிரிவறியாத புள்ளின் நேசம்!