பவள சங்கரி
ஹாய்
குட்டீஸ் நலமா?
விருந்தோம்பலும் குரு பக்தியும்!
ஆதி
காலந்தொட்டு நம்முடைய இந்திய பாரம்பரியத்தில், விருந்தோம்பல், நட்பு,
அன்பு, பாசம், பண்பு, ஆன்றோருக்கும்,
மூத்தோருக்கும் மரியாதை போன்றவற்றிற்கு தனிப்பட்ட
கவனம் செலுத்தப்படுவது இயல்பு. நம் மரபணுக்களில்
ஆழமாக ஊறிய ஒன்று இது
என்றுகூட சொல்லலாம். திருநாவுக்கரசு நாயனார் புராணத்தின் ஒரு
பகுதியான அப்பூதியடிகள் வரலாறு இப்படியான
நம்முடைய தமிழர் பண்பாட்டிற்கு அழகான
ஒரு எடுத்துக்காட்டாக விளங்குவதைப் பாருங்கள்!