Sunday, February 24, 2019




அன்பு நண்பர்களே,

என்றென்றும் ஆதரவு அளிக்கும் பழனியப்பா பதிப்பகம் இந்த முறையும் அற்புதமான இந்த ஆய்வு நூலை அருமையாக வெளியிட்டுள்ளார்கள். பேரா. நாகராசன் ஐயாவுடன் இணைந்து எழுதியுள்ள இந்த நூலின் 360 பக்கங்களும் தமிழர்களின் தொன்மை வரலாற்றின் சுவையானக் காட்சிகளைப் படம் பிடித்துக் காட்டியுள்ளது என்பதில் மிகவும் மகிழ்வாக உள்ளது.. இறையருளால் அனைத்தும் சாத்தியமானதில் நண்பர்களின் நல்வாழ்த்துகள்ின் பங்களிப்பும் உண்டு!

பேரன்பும்,பெருமதிப்பிற்கும் உரிய தமிழறிஞர்கள் பழ.நெடுமாறன் ஐயா அவர்களின் வாழ்த்துரையும், மறவன்புலவு சச்சிதானந்தம் ஐயா அவர்களின் அருமையான அணிந்துரையும் இந்நூலுக்கு மகுடம் சூட்டியிருப்பதில் உள்ளம் நெகிழ்கிறோம். நன்றி என்பது வெறும் வார்த்தைகளாகி விடக்கூடும். ஊக்கமும், உற்சாகமும் கொடுக்கவல்ல உன்னத வரம் அவ்வெழுத்துகள் என்பதில் மன நிறைவில் பூரிப்படைந்திருக்கிறோம். அன்புச் சகோதரர் ஓவியர் ஜீவா அவர்களின் அழகான அட்டைப்பட வடிவமைப்பும் பெருமை சேர்க்கிறது. அவருக்கும் மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம்.