Monday, December 31, 2012

மெய்ஞ்ஞானத்திலிருந்து தோன்றியதே விஞ்ஞானம்!


அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பர்களே!!


வல்லமைக்கு நன்றி


நேர்காணல் – பவள சங்கரி

புகழ் கண்டு மயங்காதே
புகழ் தேடிச் செல்லாதே
புகழாரம் பாடாதே.

இன்னல் கண்டு கலங்காதே
இகழ்ச்சி கண்டு பதராதே
இகழ்ந்துரைக்க எண்ணாதே

தியானம் என்றால் என்ன?

“எண்ணத்தை வெளிப்படுத்துவதுதான் தியானம். நல்லெண்ணத்தை நாம் கொள்ளும்போது அதுவே நம் செயலுக்கு ஆதாரமாக விளங்குகிறது. நற்சுவாசத்துடன், நல்லெண்ணத்தை நாம் வெளிப்படுத்தும்போது அந்த அலைகள் அதற்கு தகுந்தவற்றை ஈர்த்து நம் செய்கைக்கு துணை புரிகின்றது.”
“தியானம் மூலம் தம் குருதேவர் கொடுக்கும் பாடங்களின் மூலம் தம்முடைய மெய்ஞ்ஞானத்தை உயர்த்திக் கொள்வதோடு தம் வாழ்க்கை முறையையும் மாற்றிக் கொண்டு அதன் தரத்தையும் உயர்த்திக் கொள்ளலாம். சப்த ரிஷிகளின் துணையோடு மாமகரிஷிகள், நவகோள்கள் , ராசி மண்டலங்கள், நட்சத்திர மண்டலங்களின் ஈர்ப்போடு தம்மைத் தாமே உயர்த்திக் கொள்ள்லாம்” என்று ஆணித்தரமாகக் கூறும் ஞானத்திருமதி ராஜம்மாள் பாலசுப்பரமணியம் அம்மையார், தன்னுடைய 70 அகவையைத் தாண்டியவர். நல்ல ஆரோக்கியமும், தெளிவான சிந்தனையும், கலகலப்பான உற்சாகமும், அமைதியான மனோநிலையும் கொண்ட இளம் மங்கையாக வலம் வருதலே இதற்கான சான்று.. ஆவிகளுடன் தம்மால் உரையாட முடியும் என்றும் அதற்கான அனுமதி கிடைக்கும் போது மட்டுமே அது குறித்த செய்திகளை பகிர்நது கொள்ள முடியும் என்றும் சொல்லி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார். இது குறித்து அவரிடம் மேலும் சில வினாக்களும் அதற்கான அவ்ருடைய விடைகளும் பல ஐயங்களை தெளிவாக்கும் விதமாக அமைந்துள்ளது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். பொறியியல் கல்லூரியின் தாளாளர் ’கவாலியர்’ எம். எஸ் மதிவாணன் அவர்களின் உடன் பிறந்த சகோதரி இவர். இவர்களின் குடும்பமே ஆழ்ந்த ஞானமும், எண்ணமே கடவுள் என்ற உறுதியான நிலைப்பாடும், நேர்மையே  இலட்சியம் என்ற கடப்பாடும் கொண்டு செயல்படும் பாங்கு மகிழ்ச்சியளிக்கக்கூடியது.

வள்ளியம்மை





பவள சங்கரி

கோட்டை கொத்தளத்தில் சுதந்திர தினக் கொடியை ஏற்றி, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட முதலமைச்சர் .வீரதீர சாகசங்கள் புரிந்தவர்களுக்கு விருது வழங்குவதற்குத் தயாரானார். சுனாமியின் போது தம் உயிரைப் பணயம் வைத்து, இரண்டு குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய இளைஞன், ஒகேனக்கல் ஆற்று வெள்ளத்தில் கவிழ்ந்த படகிலிருந்து பல உயிர்களைக் காப்பாற்றிய முதியவர், இளம் பெண்களைக் கடத்தும் கும்பலைக் காட்டிக்கொடுத்த நபர், குழந்தைக் கடத்தல் கும்பலைக் கண்டுபிடிக்க உதவியவர் என முதன்மை வரிசையில் அமர்ந்திருப்போரின் மத்தியில் தம்முடைய மனைவி வள்ளியம்மை நாச்சியார் என்கிற வள்ளியும் அமர்ந்திருப்பதைக் கணவன் முத்துமணி. உற்று நோக்கியவாறு காத்திருந்தான்.

Sunday, December 23, 2012


அன்பு நண்பர்களே,


பேராண்மைமிக்க பெண் சாதனையாளர்கள் பற்றிய என்னுடைய கட்டுரைத் தொகுப்பை பெருமைமிகு, ‘கோனார் மாளிகை’ பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தார் வெளியிட்டிருக்கிறார்கள். இந்த புத்தகத் திருவிழாவிற்கு என்னுடைய நான்கு புத்தகங்களை பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தார் வெளியிடுகிறார்கள் என்பதை மன  நிறைவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நம் நண்பர்கள் முடிந்தவர்கள் வாங்கிப் படித்து தங்களின் மேலான கருத்துக்களைக் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இதோ முதலாவதாக ‘விடியலின் வேர்கள்’ . வரலாற்றுப் புதின ஆசிரியர் திரு திவாகர் அவர்களின் சிறப்பானதொரு அணிந்துரையுடன் அழகாக வடிவமைக்கப்பட்டு வெளிவந்துள்ளது.


Monday, December 17, 2012

வாழ்வே தவமாய்!




    “வீணையடி நீ எனக்கு,
    மேவும் விரல் நானுனக்கு
    பூணும் வடம் நீ எனக்கு,
    புது வயிரம் நானுனக்கு”


 பாரதியின் இந்தப் பாடலை வாசிக்கும்போது மட்டும் கவிதாவின் வீணை சற்றே அதிகமாக குழைந்து, குழைந்து போவது போல்த் தோன்றுவது காட்சிப்பிழையாகக் கூட இருக்கலாம். ஆனால் கவிதாவின் குரலில் ஒலிக்கும் அந்த ஜீவனுள்ள வரிகள் கேட்போரின் செவிகளில் தேன் மழை சொரிந்துவிட்டுச் செல்வதைத் தவிர்க்க இயலாது. கலைமகளின் அந்த இசைக்கருவி இந்தப் பூமகளின் விரல்களின் நர்த்தனத்தில் தேவகானம் பொழிவது உறுதி என்று பிரபல இசை விமர்சக வித்தகர் சுப்புடுவிடமே தம் இளம் வயதிலேயே விருது பெற்ற பெருமையுடையவள். இன்று காதோரம் சில நரை முடிகள் எட்டிப் பார்க்கும பருவத்திலும், குரலிலும், மீட்டும் இசையிலும் சற்றும் தொய்வில்லாத அதே வளம் கண்டு வணங்காதவர் இலர்.  

Tuesday, December 11, 2012

நம்பிக்கை ஒளி! (10)




ஒட்டவும் முடியாமல், விலகவும் முடியாமல் உள்ளே உறுத்தும் சில உறவுகள் கொடுக்கும் வலி மன நிம்மதியைப் பறித்து விடக்கூடியது. ஒவ்வொன்றாக உறவுகளெல்லாம் விட்டு விலகிய காலம் போய் இன்று மெல்ல மெல்ல புதிய சொந்தங்களும், பந்தங்களும் ஒட்டிவர வாய்ப்பு அமைந்தும் அதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள் மாலதி. சின்னம்மாவிடம் நேரில் சென்று பேச வாய்ப்பில்லாதலால், முத்தழகு அண்ணனைப் பற்றிய தகவலை போனில் விவரமாகச் சொன்னாள். விசயம் அறிந்தவர் உள்ளம் நெகிழ்ந்து, “மாலு ஆண்டவன் உன் வாழ்க்கையிலும் கண் திறந்திருக்கிறான். உனக்கும் ஒரு விடிவு காலம் வந்திருக்கு. தேவையில்லாம விரோதத்தை வளர்த்துக்காதே.. குற்றம் பார்த்தால் சுற்றம் இல்லை. அவிங்கவிங்க சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி போக வேண்டியதுதான். முத்தழகனும் தெரிஞ்சு எந்த தப்பும் செய்யலையே.. காலம் செய்யுற கோலம் இதெல்லாம்..  இனிமேலாவது உன் வாழ்க்கை நிறைவா இருக்கணும்டா...  எதையும் மனசுல வச்சிக்காதே...” என்று சொன்னது அப்போதைக்கு அவ்ளுடைய கோபத்தை சற்றே தணியச் செய்திருந்தாலும், அண்ணன் என்று முழுமையாக ஏற்றுக் கொள்ளும் எண்ணம் மட்டும் வர மறுத்துக் கொண்டிருந்தது. சுப்ரஜாவும்  ஓரிரு முறை போனில் தொடர்பு கொண்டு பேசியும், பாசம் பெரிதாக வரவில்லை. காலம் மட்டுமே எல்லாவற்றையும் செப்பனிடும் வல்லமை பெற்றதன்றோ?

Friday, December 7, 2012

தாமிர சபை


பவள சங்கரி


காந்திமதியம்மன் உடனமர் ஸ்ரீ நெல்லையப்பர் ஆலயம்


மூலவர்    :     நெல்லையப்பர்  (வேண்ட வளர்ந்தநாதர் )
அம்மன்/தாயார்    :     காந்திமதி, வடிவுடையம்மை
தல விருட்சம்    :     மூங்கில்
தீர்த்தம்    :     பொற்றாமரைக்குளம் (ஸ்வர்ண புஷ்கரணி கருமாறித் தீர்த்தம், சிந்துபூந்துறை
பழமை    :     1000-2000 வருடங்களுக்கு முன்


சிவபெருமானாரின், நடராசத் திருமேனியின் அருட்கூத்து நடத்துகின்ற ஐம்பெரும் சபைகளான, ரத்தின சபை, கனக சபை, வெள்ளி சபை, தாமிர சபை, சித்திர சபை ஆகியவற்றில் “தாமிர சபை” என்று போற்றப்படுகிற காந்திமதியம்மன் உடனமர் நெல்லையப்பர் ஆலயம், திருநெல்வேலியில் அமைந்துள்ளது. தமிழ் நாட்டில், முக்கியமான ஐந்து சபைகளில், இரண்டு சபைகள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன. ஸ்ரீ நெல்லையப்பர் காந்திமதி ஆலயம் தாமிர சபையாகவும், ஸ்ரீ குற்றால நாதர் ஆலயம் சித்திர சபையாகவும் உள்ளன.


தேவாரப் பாடல் பெற்ற பாண்டிநாட்டுத் தலங்களில் இது 14வது தலம்.

திருஞானசம்பந்தர் அருளிய தேவாரப்பதிகம்

Monday, December 3, 2012

நம்பிக்கை ஒளி! (9)






பவள சங்கரி

நம்பிக்கைஒளி (8)

சகோதரன் என்ற சக்தி வாயந்த உறவு இருந்தும் இல்லாமல் மனம் வெறுப்படைந்த நிலையில், ஒரேயடியாக மறந்துபோன நினைவுகள் அனைத்தும் மெல்ல மெல்ல தலை தூக்கி தூக்கத்தையும், படிப்பையும் கெடுத்தது. இத்தனை நாள் இல்லாத அந்த பாசம் இன்று மட்டும் எப்படி
புதிதாக வரும் என்ற கோபமே மேலிட்டது.

"மாலு, மாலு என்னாச்சு.. கண்ணெல்லாம் சிவந்திருக்கு.. உடம்பு ஏதும் சரியில்லையா?” நெற்றியில் கை வைத்துப் பார்த்த, உடன் தங்கியிருக்கும் அறைத்தோழி ஆர்த்தி உடல் நெருப்பாய்க் காய்வதை உணர்ந்து, “நல்ல காய்ச்சல் இருக்கும் போல இருக்கு மாலு. வாங்க டாக்டர்கிட்ட போய் வரலாம். நானும் வேண்டுமானால் இன்று ஆபீசிற்கு லீவ் போட்டுவிடுகிறேன்என்றாள்.அதெல்லாம் வேண்டாம் ஆர்த்தி, ’மெட்டாசின்மாத்திரை இருக்கு போட்டுகிட்டு தூங்கி எழுந்தா சரியாகிடும். நீங்க அனாவசியமா லீவ் எல்லாம் போட வேண்டாம். கிளம்புங்க ஆர்த்தி, ... இவ்வளவு அக்கறையா சொன்னதற்கு ரொம்ப தேங்க்ஸ்

Wednesday, November 28, 2012

மீண்டுமொரு சரித்திரம்





காத்திருக்கிறாள்
கன்னியவள்
கனிவான மணமகனுக்காக...

கண்ணில் ஓர் காதலுடன்
கையில் மாலையுடன்
சுயம்வர மண்டபமதில்...

Tuesday, November 27, 2012

Sand and Foam - Khalil Gibran (5)



 (வாலிகையும்) மணலும் , நுரையும்! (5)

பவள சங்கரி

புனையிழையவள் தம் முகத்தை புன்னகையால் முகத்திரையிடலாம்.

சோகத்தில் சோர்ந்த இதயமது, இன்பமான இதயத்துடன், இன்னிசை கீதமதை இதமாக இசைக்கும் அவரின் என்னே உயர் பண்பு.

எவனொருவன் மாதொருத்தியை புரிந்து கொள்கிறானோ, அல்லது மேதைகளை, சோதனைகளுக்குள்ளாக்குகிறானோ, அல்லது மௌனத்தின் மர்மமதை விடுவிக்கிறானோ, அவனொருவன் மட்டுமே சௌந்தர்யமான சொப்பனத்திலிருந்து, எழுப்பி, காலை உணவு மேசையின் மீது அமரச் செய்யக் கூடியவன்.

Monday, November 26, 2012

நம்பிக்கை ஒளி! (8)





பவள சங்கரி

நம்பிக்கை ஒளி!(7)

சுப்ரஜா, வாழ்க்கையில் துயரமான பகுதி என்ற ஒன்றையே கனவிலும் கண்டிராத ராஜா வீட்டு கன்றுக்குட்டியாக துள்ளித் திரிபவள்.கிருஷ்ணா குரூப் ஆஃப் கம்பெனிகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் நிறுவனர், கிருஷ்ணராஜின் ஒரே வாரிசு. பார்ன் வித் சில்வர் ஸ்பூன்என்பதால் கஷ்டம் என்பதே தெரியாமல் வளர்ந்தவள். தம் தளராத உழைப்பினால் ஐந்து தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடும் அளவிற்கு சொத்து சேர்த்து விட்டவர், கிருஷ்ணராஜ். ஒரே மகளை செல்வச் செழிப்பில் திணறச் செய்பவர். நினைத்ததும், கேட்டதும் உடனே கிடைக்கும் வரமும் பெற்றவள். ஆயினும் தான் வளர, வளர கூடவே  சேர்ந்து தம் செல்வச் செருக்கின் காரணமான  குறும்புகளும் அதிகமாகிக் கொண்டிருந்தது ஒரு நிலையில் அது தந்தைக்கு வேதனை ஏற்படுத்துவதாகவே இருந்தது. ஏழ்மையின் துயர் பற்றி எள்ளளவும் சிந்திக்காதவள், அதன் பிடியில் சிக்கித் தவிப்பவர்களின் வேதனையை உணர முடியாமல், மேலும் ரணப்படுத்தக் கூடியவள். தாயின் அதிகப்படியான செல்லத்தினால் எதையுமே தவறு என்று தெரியாமலே செய்து கொண்டிருப்பவள்.

மகளின் திருமண வயது வந்தபோதுதான் தந்தைக்கு அவள் எதிர்காலம் பற்றிய கவலையும் உடன் தொற்றிக் கொள்ள ஆரம்பித்தது. திருமண வாழ்க்கையின் அனுசரிப்பு தம் மகளுக்கு சாத்தியமாகுமா என்ற கவலையும் இருந்தது. அழகும், அறிவும், வசதியும் ஒருங்கே அமையப் பெற்றதால் ஈயாய் மொய்க்கும் இளைஞர் கூட்டத்திடம் தவறாக மாட்டிக் கொள்ள்க் கூடாதே என்ற கவலையும் அதிகமானது. விட்டுக் கொடுக்கும் சுபாவமே அறவே இல்லாமல் இருப்பவளால் திருமண வாழ்க்கையை சரிவர நடத்திச் செல்ல முடியுமா, தன் பெயருக்கும் சேர்த்து பங்கம் வந்துவிடுமோ என்ற கவலையில் பெற்றோர் இருந்தது நியாயம்தானே. அடிக்கடி இதனைத் தம் நெருங்கிய நண்பனும், உறவினருமான தில்லைராசனிடம் சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்தபோதுதான் தில்லைராசன் கொடுத்த ஊக்கத்தில் ஆறுதல் அடைந்து கொண்டிருந்தார் கிருஷ்ணராஜ். இன்னொருவர் வீட்டில் சென்று அக்குடும்பத்தாருடன் அனுசரித்து வாழும் கலை சுட்டுப் போட்டாலும் தம் மகளுக்கு வரப்போவதில்லை என்பதை தெளிவாகப் புரிந்து வைத்திருந்தவர், நல்ல பையனாகப் பார்த்து வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்க வைக்க வேண்டும் என்று முடிவெடுக்க வேண்டிவந்தது.

Thursday, November 22, 2012

SAND AND FOAM (Khalil Gibran) - மணலும், நுரையும்! (4)






பவள சங்கரி


செவியொன்றைத் தாரும் எமக்கு, குரலொன்றைத் தருவேன் யான் உமக்கு.
நம் மனம் என்பதோர் நுரைப்பஞ்சு; நம் இருதயமோ ஓர் சிற்றாறு.
நம்மில் பெரும்பாலானோர் ஓடுவதைக் காட்டிலும் உறிஞ்சுவதைத் தேர்ந்தெடுப்பது ஆச்சரியமன்றோ?
நீவிர், பெயர் இடாததோர் வாழ்த்துரைக்காகக்கூட ஏங்கிக் கிடந்த தருணம் மற்றும் காரணம் அறியாமலேயே வருத்தம் கொள்ளும் போதும், உண்மையில், பின்னரும், வளரக்கூடிய அனைத்துப் பொருட்களுடன் நீவிரும் வளர்ந்து கொண்டுதானிருக்கிறீர் மற்றும் உன்னதமான உம் சுயம் நோக்கியும் உயர்ந்து கொண்டுதானிருக்கிறீர் நீவிர்.

Wednesday, November 21, 2012

நம்பிக்கை ஒளி! (7)






பவள சங்கரி

நம்பிக்கை ஒளி! (6)

நம்முள் இருப்பது அனைத்துமே நல்ல குணங்கள், தம்மால் அனைவருக்கும் உதவியே அன்றி உபத்திரவம் இல்லைபோன்ற எண்ணங்களெல்லாம் நம்மையறியாமல் நமக்குள் ஒரு செருக்கை விதைதுவிடுவதோடு அது விரைவாக எதிர்வினையையும் கூட ஏற்படுத்திவிடுகிறது. தான்என்ற அகங்காரம் என்று இதைத்தான் சொல்கிறார்களோ? எது எப்படியோ, மாலதிக்கு எல்லா விசயங்களிலும் தானே முடிவெடுக்கும் வழமை ஊறிவிட்டது. கேள்வி கேட்கும் நிலையில் இருந்த அக்காவும் இன்று இல்லை, சின்னம்மாவிடம் பகிர்தல் மட்டுமே சாத்தியம். பரமு தன்னைவிட இளையவள். இந்த நிலையில் தான் செய்வது சரி என்ற முடிவிற்கு வர தீர யோசித்துத்தான் செயல்படுகிறாள். ஆனாலும் அனுபவம் இல்லாத சில விசயங்களில் என்ன முடிவு எடுப்பது என்று குழப்பமே மிஞ்சுகிறது. உற்ற தோழமையோ, தக்க ஆலோசனை வழங்கக்கூடிய உறவோ இல்லாத வேதனை அப்போதுதான் வெளிச்சம் கொண்டது. தாயையும், தமக்கையையும் நினைத்து மனம் வேதனையடைந்ததுதான் கண்ட பலன்.

Monday, November 19, 2012

பாதையும் பயணமும்! - வெற்றி நடை தீபாவளி மலரில்!




பாதையும் பயணமும்!

விரிநத பாதைகள் இரண்டும்
தெளிவாகத்தான் இருந்தது
தோற்றத்தில்.

ஒரே நேரத்தில் இரு
பயணம்
சாத்தியமில்லை.

உற்று உற்று நோக்கி
விலக்கியது கீழான கணக்கில்.
அடுத்தொன்று சிறந்ததுதானா?

நடையைக் கட்டினேன்
சந்தேகத்துடனே.
சென்ற தொலைவும்
அதிகமில்லை.

உள்ளிருந்து உறுத்திய
சந்தேகமுள் தேர்ந்தெடுத்ததைத்
தவறென்று குத்தியது.

விலக்கிய அடுத்தொன்றை
ஏற்கத் துடித்த மனம்
கடந்து போன காலத்தைக்
காட்டி அச்சமூட்டியது.

தத்தித்தத்தி குழந்தையாய்
நடைபயின்று தளர்வுடன்
வாடி நிற்கும் நேரம்

சாலை இரண்டும் இணையும்
முகட்டில் பூத்துக் குலுங்கும்
பூவின் மணம்

அலைபாய்ந்த மனமும்
கடந்து வந்த பாதையை
விலக்கி மற்றொன்றை
நோக்கி நகர்ந்தது.

தொலைத்த காலத்தினூடே
வழியே வழியை உணர்த்த
மாற்றங்கள் ஏதும் நிகழவில்லை.

போதியாய் புரிய வைத்தது...
தவற விட்டது பாதையை
அல்லவென்று!


நன்றி : வெற்றி நடை இதழ்


Sunday, November 18, 2012

சொர்க்க வாசல்! - இன் & அவுட் சென்னை இதழில்




சுவர்க்க வாசல்!

அகக் கண்கள் திறந்து
காட்சிகள் விரிகின்றன.
அழகான நீர் நிலையைக் காண்கிறேன்!
இரு புறமும் கொத்துக் கொத்தாக
மலர்கள் தாங்கிய குறுஞ்செடிகள்.

நீலமேகக் கூரையில்
வெண்பஞ்சுப் பொதிகள்
வெளிர்நீல மலைக் குன்றுகளில்
பனிபடர்ந்த மரக் கன்றுகள்!

அந்தி மயங்கும் நேரம்
கூட்டில் அடையப் போகும்
புள்ளினங்களின் கீச்சுக் கீச்சு கீதம்
மனம் அமைதியில் திளைத்த இன்பம்

அந்த ஓடைக்கரையிலொரு குச்சு வீடு
சின்ன அறையில் நிறைமனதுடன் நான்!
குச்சு வீட்டின் கொல்லைப்புறத்து
பசுமையான வயல் வெளி
நாணம். கொண்ட பயிர்களின் மோனம்

கரையோரத்து மலர்களின் நறுமணம்
குடில்........அழகான குடில்
எளிமையான மனிதரும்
அழகான புள்ளினங்களும்
பகிர்ந்து வாழும் அழகிய குடில்

குடிலின் அருகில் என் சொந்தங்கள் இல்லை
என் சாதி இல்லை - என் மதம் இல்லை
என் இனம் கூட இல்லை
 பெயர் மட்டுமே அடையாளமாக
 அன்பு மட்டுமே ஆதாரமாக

இயற்கையின் இனிமையைக்
கொண்டாடும் இனமாக
அந்த அழகைப் பகிர்ந்து
பருகும் இனமாக
திறந்த இதயத்துடன், பரந்த
மனதுடன் வாழும் இனம்
அங்கு என் அமைதியான
ஆனந்தமான வாழ்க்கை!



நன்றி - இன் & அவுட் சென்னை இதழுக்கு.

Friday, November 16, 2012

துர்காபாய் தேஷ்முக்


துர்காபாய் ஒரு பெண்ணல்ல்
அவர் ஒரு மனித டைனமோ (மின்னோட்டம் உண்டாக்கும் பொறி)

(சரோஜினி நாயுடு)


”இரும்புப் பெண்” என்று அனைவராலும் பாராட்டப்பெற்ற துர்காபாய் தேஷ்முக், மிக வித்தியாசமான, துணிச்சலான சுதந்திரப் போராட்ட வீராங்கனை மட்டுமல்லாது, தன்னலமற்ற ஒரு சிறந்த சமூகசேவகி, மிக வித்தியாசமான பெண்ணியவாதி.
அரசியலமைப்பு மன்றம் மற்றும் தற்காலிக பாராளுமன்றத்தில், 750 திருத்தங்களுக்கு குறைவிலாமல் கொண்டுவந்தவர். கோடிக்கணக்கான நிதியை மூலதனமாகக் கொண்டு ஆறு பெரிய கல்வி நிறுவனங்களை உருவாக்கி நடத்தி வந்தவர். பயிற்சி பெற்ற சரியாக நிர்வகிக்கப்படும் ஊழியர்கள் மூலமாக பல சமுதாய மாற்றங்கள் கொண்டுவர முடியும் என்ற கனவும் உடையவர். தம்முடைய சுதந்திர தாகத்தின் விளைவாக இளம் வயதிலேயே சிறைக்கம்பிகளைக் கண்டவர். ஒடுக்கப்பட்ட மற்றும், ஒதுக்கித்தள்ளப்பட்ட பெரும்பான்மையான மகளிருக்காகப் போராடியவர். அவருடைய வாழ்க்கை  இலக்குகள் நிறைந்ததாகவும், சாதனைக்ளை ஊக்குவிக்கின்ற சம்பவங்கள் நிறைந்ததாகவும் இருக்கிறது.

ஜூலைத்திங்கள் 15ம் நாள், 1909ம் ஆண்டு, ஆந்திரப் பிரதேசம், இராஜமுந்திரியில், காக்கிநாடாவின் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். தம்முடைய எட்டாவது வயதிலேயே, ஒரு வசதியான ஜமீந்தார் குடும்ப தத்துப் புத்திரனுக்கு பால்ய விவாகம் செய்து வைக்கப்பட்டார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு , அவர் பருவமடைந்த போதுதான் திருமணம் என்பதற்கான அர்த்தம் புரிந்தது. அதில் விருப்பமில்லாதலால் அந்த திருமண பந்தத்தை முறித்துக் கொண்டு பொது வாழ்க்கையில் ஈடுபட முடிவெடுத்தார். சுப்பாராவ் என்ற தன்னுடைய இளம் கணவரிடமும் தன் மனநிலையைச் சொல்லி புரியவைக்க முடிந்தது அவரால். சுப்பாராவும் அதனை ஏற்றுக் கொண்டு கொஞ்ச காலம் கழித்து ஒரு வழக்கறிஞரின் மகளை திருமணம் செய்து கொண்டார். 30 ஆண்டுகள் அவரோடு வாழ்ந்த பின்பு தம்முடைய மனைவியின் எதிர்காலம்  பற்றிய நம்பிக்கையாக துர்காபாயை நினைத்தார் என்பது ஆச்சரியமான விசயம்.

Thursday, November 15, 2012

’தங்க மங்கை’ தீபாவளி சிறப்பிதழில் என் சிறுகதை!


அன்பு நண்பர்களே,

’தங்க மங்கை’ தீபாவளி மலரில் ‘கருணையினால் அல்ல’ என்ற என்னுடைய சிறுகதை பிரசுரமாகியுள்ளது. வாசித்து தங்கள் கருத்தை பகிர்ந்து கொண்டால் மகிழ்வேன். கருணையினால் அல்ல’ கதையின் சுட்டி இதோ:




நன்றி,
அன்புடன்
பவள சங்கரி


Wednesday, November 14, 2012

sand and foam (3) - Khalil Gibran மணலும் நுரையும்! (3)




sand and foam (3) - Khalil Gibran

மணலும் நுரையும்! (3)

ஏழு முறைகள் எம் ஞாதிருவை வெறுத்திருக்கிறோம் யாம்,
முதல் முறையாக அவளை, சாதுவான மங்கையாகக் கண்டாலும்   அவள உச்சத்தை எட்டக்கூடும்
இரண்டாம் முறை அந்த முடமாகிப் போனவனுக்கு முன்னால் துள்ளிக் கொண்டிருக்குமவளைக் கண்டேன்.
மூன்றாம் முறையாக கடினமானது மற்றும் எளிதானதிற்கும் இடையிலான தேர்ந்தெடுத்தலில் அவள் அந்த எளிதானதையேத் தேர்ந்தெடுக்கக் கண்டேன்.

Tuesday, November 13, 2012

தீபாவளிப் பரிசு!



 
அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள் நண்பர்களே!
அன்புடன்
பவள சங்கரி


சிறுகதை

தீபாவளிக்கு இன்னும் மூன்று நாட்களே இருக்கிறது. புது துணி எடுக்கவோ, பலகாரம் செய்யவோ ஏதும் விருப்பம் இல்லை. ஒரு வாரமாக கடைவீதிக்குப் போகலாம் என்று கணவர் சுந்தரம் கூப்பிட்டு சலித்துப்போனதுதான் மிச்சம்.

எல்லாம் தீபாவளி கழித்து வாங்கினால் என்ன நட்டம். இந்தக் கூட்டத்தில் போய் அலைமோதி வாங்கி வந்து புதுசு உடுத்தனுமாக்கும். மெதுவா அப்பறமா வாங்கலாம்என்று தட்டிக் கழித்த சாவித்திரியைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. ஒரு காலத்தில் ஒரு மாதம் முன்பே எப்போது குழந்தைகளுக்கு துணி எடுப்பீர்கள் என்று சண்டை போட்ட மகராசியா இவள் என்று ஆச்சரியமாக இருந்தது. பள்ளிபாளையம் பேப்பர் மில்லில் வேலையில் இருந்த காலம் அது. போனஸ் வருவதற்குள் எப்போது வரும் என்று கேட்டு தொணப்பி எடுத்துவிடுவாள். 

Monday, November 12, 2012

நம்பிக்கை ஒளி! (6)




                               

பவள சங்கரி
காலம் ஏதோ ஒரு கணக்கு போட்டுக் கொண்டு காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறது. எந்த் கணினி கொண்டு இந்த அளவீடூகள் நிர்ணயிக்கப்படுகின்றன என்று தெரிந்தால் கூட ஏதேனும் தப்பிக்கும் வழியைக் காணலாம். நல்லது நடக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் அதற்குத் தகுந்தாற்போல் தாம் சந்திக்ககூடிய அத்துனை பேரும் நல்லிதயம் கொண்டவர்களாக ய்தார்த்தமாக அமைந்து விடுகிறார்கள். அதுவே தம் கோரத் தாண்டவத்தை ஆடிப்பார்க்க முடிவு செய்துவிட்டால் திரும்பிய புறமெல்லாம் அடிமேல் அடி விழத்தான் செய்கிறது. தப்பிக்கும் வழியே இல்லாமல் கிடுக்கிப்பிடி போட்டு பிடித்துவிடுகிறது. நம்பிக்கை என்ற ஒரு பிடிமானம் மட்டும் கண்டெடுத்துக் கொண்டால் அதிலிருந்து எப்படியும் மீண்டு தப்பித்து வந்துவிடலாம். சுழட்டியடித்த சுனாமியும் ஒரு நேரம் அடங்கித்தானே ஆகவேண்டும்....

ஆசிரியர்களுக்கான ஓய்வறையினுள் நீண்ட மேசையின் முன் நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவர், முன் நெற்றி வழுக்கையாக, நெற்றி நிறைய திருநீறு பட்டையாகப் போட்டுக் கொண்டு இடையில் அழகாக குங்குமப் பொட்டும் வைத்துக் கொண்டு நடு நாயகமாக அமர்ந்து கொண்டிருந்தார். அவர்தான் மயில்வாகனனாக இருக்கும் என்பதும் சொல்லாமலே புரிந்தது. அவரும் மாலுவைப் பார்த்தவுடன் தெரிந்து கொண்டார். தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு அவளுடைய பயணம், குடும்பம் எல்லாம் பற்றிய சம்பிரதாயமான விசாரிப்புகளை முடித்துவிட்டு பின்பு அவளுடைய எதிர்காலத் திட்டங்கள் பற்றியும் பொறுமையாக்க் கேட்டு அறிந்து கொண்டார். நல்ல மதிப்பெண்கள் வாங்கியிருப்பதைப் பார்த்து மகிழ்ந்தவர், பின்பு அவளையும்  அழைத்துக் கொண்டு பள்ளியின் ஒரு மூன்று சக்கர வாகனத்தில் (ஆட்டோ)  கிளம்பினார். தில்லைராஜன் ஐயாவின் வார்த்தைகளுக்கு உள்ள மரியாதையைப் பற்றி நன்கு புரிந்து கொள்ள முடிந்தது. அவர் பேச்சிலிருந்து தாங்கள் சந்திக்கப்போவது ஐஏஎஸ் கோச்சிங் செண்ட்டரில் பணி புரியும் ஒரு நபரைத்தான் என்பதும் புரிந்தது.

Wednesday, November 7, 2012

Sand and foam - Khalil Gibran மணலும், நுரையும் (2)



பவள சங்கரி


                                                   Sand and foam - Khalil Gibran (2)

மணலும், நுரையும் (2)

வெகு நேரம், அந்த, பருவ மாற்றங்களும்  அறியாமல், அமைதியாக, எகிப்தின் தூசிப்படலத்தினுள் கிடந்தேன் யான்.
பின்னர் அந்த நிசாந்தகன் எம்மை உயிர்த்தெழச் செய்ததால், யான் எழுந்து அந்த நைல் நதிக்கரையோரம் பகலோடு பாடிக்கொண்டும், நிசியோடு சுவனம் கொண்டும் நடந்தேன்.
மேலும் தற்போது அந்த பகலவனோ, தம் ஓராயிரம் பாதக்கிரணங்கள் கொண்டு எம்மை ஏறி மிதித்துச் சென்றதனால் யான் மீண்டும் அதே எகிப்தியப் புழுதியில் கிடக்க நேரலாம்.

Tuesday, November 6, 2012

நம்பிக்கை ஒளி ! (5)



பவள சங்கரி

பணிக்குச் செல்லும் பரபரப்பு காலை நேரத்தில் வாடிக்கையான காட்சிதான் என்றாலும், வீட்டிலுள்ள அனைவரும் ஒரு சேர ஒரே நேரத்தில் கிளம்ப வேண்டுமென்றால் கொஞ்சம் கூடுதல் டென்சன் தான். அதுவும் ஒரு குளியலறை, ஒரு கழிவறை என்று இருக்கும் வீடுகளில் கேட்கவே வேண்டாம். நீ முந்தி, நான் முந்தி என்று ஒரே கூத்துதான்.

சாவதானமாக உட்கார்ந்து துண்டு முடிந்துகொண்டு, காலையில் எப்.எம் ரேடியோவில் ஆரம்பித்து பின்பு டீவி சீரியல் ஒன்று பாக்கியில்லாமல் பார்த்துக் கொண்டிருந்த பரமுவா இது என்று ஆச்சரியமாக இருந்தது. எண்ணெய் வழியும் முகமும், பரட்டைத் தலையும் என்று எப்பொழுது பார்த்தாலும் அழுது வடிந்து கொண்டிருந்தவள் இன்று அரை மணி நேரமாக கண்ணாடி முன்னால் நின்று கொண்டிருப்பதைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. பாவம் எத்தனை ஆசையை சுமந்து கொண்டிருந்திருக்கிறது இந்தப் பிள்ளை என்று நினைத்துக் கொண்டாள் மாலு. மாநிறமாக இருந்தாலும், நல்ல களையான வட்ட முகம் அவளுக்கு. செதுக்கி வைத்த சிற்பம் போல அளவான நாசியும், துருதுருவென்ற கண்களும், பட்டுக் கன்னமும் அழகாகவே இருந்தாள். பாவாடை தாவணி உடுத்திக் கொண்டு அதைத் திரும்பி, திரும்பி நின்று அழகு பார்த்துக் கொண்டிருந்தாள். தாவணி கலருக்கு மேட்ச்சாக வளையலும், காது தோடும், கழுத்து மணியும் போட்டுக்கொண்டு , பொட்டும் கூட அதே கலரில் வைத்துக்கொண்டு கிளம்பியதைப் பார்க்க ஆச்சரியமாக் இருந்தது.

Wednesday, October 31, 2012

மணலும், நுரையும் - கலீல் ஜிப்ரான்



SAND AND FOAM - KHALIL GIBRAN (1926)


    "Half of what I say is meaningless, but I say it so that the other half may reach you."



மணலும், நுரையும்


அனுதினமும், இந்தக் கரையோரங்களில் அந்த மணல் மற்றுமந்த நுரையினிடையே,
நடை பயின்று கொண்டிருக்கிறேன் யான்
உயர்ந்த அந்த அலைகள் எமது பாதச்சுவடுகளை அழித்துவிடக்கூடும்,
மேலும் அந்த வளி அந்த நுரையையும் ஊதித்தள்ளிவிடும்.
ஆயினும் அந்தக் கடலும், கரையும் என்றும் நிரந்தரமாய் இருக்கும்.

Monday, October 29, 2012

நம்பிக்கை ஒளி! (4)





பவள சங்கரி

நம்பிக்கை ஒளி (3)


உலகமே இருண்டு போய் ஏதோ அதள் பாதாளத்தினுள் அனைவரும் தத்தளிப்பது போல ஒரு படபடப்பு. நாட்கள் சில உருண்டோடியது புரிந்தது. மீண்டு எழ வேண்டியது அவசியம்தான். அடித்துப் போட்டது போன்று உடலும், மனமும் ரணமாகிக் கிடந்தது. வெகு நேரம் கழித்துதான் இரவு தூக்கம் வந்தது.... அன்றாட வழக்கம் போலவே அன்றும் விடியலிலேயே விழித்துக் கொண்டவள், கண்ணைத் திறக்காமல் அப்படியே எழுந்து படுக்கையிலேயே அமர்ந்து கொண்டு தன் தாயாய் இருந்து அன்பு சொரிந்த அந்த அழகு அக்கா முகத்தை நினைவில் கொண்டுவந்தாள். பளிச்சென்ற ஒரு ஒளியுடன் ஒரு முகம் நினைவில் தோன்றியது. அது தன் தாயின் முகமோ அல்லது அக்காவின் முகமோ என்று தெரியாதவாறு இரண்டும் கலந்த ஒரு தோற்றமாகக் காட்சியளித்தது. தெய்வமாக இருந்து தன்னை எப்படியும் வழிநடத்துவாள் என்ற நம்பிக்கையும் தெம்பைக் கொடுத்தது. மறக்க நினைப்பதைவிட மனக்கோவிலில் தெய்வமாக்கி பூஜிப்பது எளிதாகவே இருந்தது! வாழ்ந்தாக வேண்டுமே... அதற்கு ஒரு பிடிமானமும் தேவையாக இருக்கிறதே...

சின்னம்மா மாலுவின் விடுமுறைக்கான காரணத்தை நேரில் சென்று அவள் வேலை பார்க்கும் பள்ளியில் சொல்லிவிட்டு வந்திருந்தாள் என்றாலும் அதிகமாக விடுமுறை எடுப்பது அவ்ளுடைய வேலைக்கு மட்டுமல்லாது மன ஆறுதலுக்கும் சரியாகாது என்பதால் அவளை எப்படியும் உடனடியாக திரும்ப வேலைக்குப் போகச் செய்வதே நல்லது.. அதற்காக அவளைத் தயார்ப்படுத்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே, மாலு குளித்துவிட்டு வெளியே கிளம்பியதைக் கண்ட பரமுவும், சின்னம்மாவும் ஆச்சரியத்தில் கண் அகல பார்த்துக் கொண்டிருந்தனர். முகத்தில் அபரிமிதமான களைப்பும், வேதனையும் தெரிந்தாலும் அது அனைத்தையும் மீறி ஒரு தெளிவும் இருந்ததைப் பார்த்து நிம்மதிப் பெருமூச்சு விட்டவள் ,

மாலு, நானே சொல்லணும்னு நினைச்சேன். வேலைக்குப் போனால்கூட மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்குமேன்னு. இப்படியே படுத்துக்கிட்டே அழுதுகிட்டே இருந்தாலும், மாண்டவர் மீண்டு வரப்போவதில்லை. நம்ம வாழ்க்கையை நாம வாழ்ந்துதானே ஆக வேண்டும்.

அக்கா உன்னைப் பார்த்தா எனக்குப் பெருமையா இருக்குக்கா... எல்லா விசயத்திலும் போல இதிலேயும் நீ பக்குவமா நடந்துக்கிறது ஆச்சரியமாவும் இருக்கு. எவ்வளவு பெரிய இழப்பு. எத்தனை பெரிய அதிர்ச்சி! இவ்வளவு சீக்கிரம் சமாதானம் ஆகி வெளியே வருவேன்னு நினைச்சுக்கூடப் பார்க்க முடியல...

என்ன செய்யிறது பரமு, வேற வழியில்லையே ...  வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரமில்ல... எல்லாமே ஒரு சுழற்சிதானே.. சுற்றிவரும் பூமியைப் போல நல்லதும், கெட்டதும் மாறி மாறித்தானே வருது. என்ன ஒரு சிலருக்கு கெட்டது கொஞ்சம் அதிகமா தங்கிப் போகுது. முதல் நாள் இரவு கோடீஸ்வரனாக பஞ்சு மெத்தையில் பகட்டாகப் படுத்து இருந்தவர் மறுநாள் குடும்பத்துடன் நடுத்தெருவில் நிற்கும் நிலை வந்ததே. குஜராத்தின் பூகம்பத்தின் நில அதிர்வில் பயந்து அலறியடித்துக் கொண்டு வெளியில் வந்து நின்றவர்களின் கண் முன்னாலேயே பரம்பரையாகச் சேர்த்த அத்தனை சொத்தும் தரைமட்டமாகி கட்டிடத்துடன் சேர்ந்து அவர்களின் எதிர்காலமும் தூள், தூளாகி, மண்னோடு மண்ணாகிப்போனதே?   அவர்களெல்லாம் பிழைக்காமலா போனார்கள். கடலோரத்தில் சொகுசு விடுதியில் சுகமாகக் கொண்டாடிக் கொண்டிருந்தவர்களை சுனாமி மொத்தமாக அள்ளிக் கொண்டு போகவில்லையா? எஞ்சியவர்கள், முழு குடும்பத்தையும் இழந்தவர்களும் எப்படியோ பிழைத்துக் கொண்டுதானே இருக்கிறார்கள். இதுதானே யதார்த்தம்.... வேதனையை மென்று கொண்டே, முன்னேறிக் கொண்டே இருக்கத்தானே வேண்டும். சில இழப்புகள் இறுதிவரை மறக்கவே முடியாதது. இதயத்தில் குத்திக் கொண்டிருக்கும் ஊசிமுனை போன்றது. அம்மா, அப்பாவை இழந்ததைவிட அதிக சோகம்தான்..  அம்மாவாக வளர்த்த அக்காவை இழந்தது.என்று சொன்னவளின் கண்களில் மாலையாகக் கண்ணீர் வழிந்தோடியது. அதனை மறு புறம் திரும்பி அப்படியே துடைத்துக் கொண்டு கடினமான புன்சிரிப்புடன் கோவிலுக்குச் சென்று வருவதாகக்கூறி கிளம்பினாள். அக்கா, மாமா மற்றும் குழந்தையின் ஆன்மா சாந்தியடைய மனமார பிரார்த்தனை செய்து கொண்டு திரும்பியவள், மளமளவென வேலைக்குக் கிளம்பத் தயாரானாள்.

பள்ளியில் ஒவ்வொருவராக வந்து துக்கம் விசாரிக்கும்போதும் பொத்துக் கொண்டு வந்த அழுகையை வெகு சிரமத்திற்குப் பிறகே கட்டுப்படுத்த முடிந்தது. மனதில் இருந்த இலட்சியங்களின் உறுதி அவளை மேற்கொண்டு அடி எடுத்து வைக்கும் வலலமையையும் வழங்கியது. தலைமையாசிரியர் அழைத்து ஆறுதல் சொன்னதோடு, ம்னதைக் கட்டுப்படுத்தி வேலையிலும், படிப்பிலும் முழு கவனம் செலுத்தினால் மனமும் தானாக ஒருநிலைப்படும், துக்கமும் கட்டுக்குள் வரும் என்று சொன்னதை வேத வாக்காக எடுத்துக்கொண்டு செயல்பட ஆரம்பித்தாள்.

அரசுக் கல்லூரியில் இளங்கலை பொருளாதாரப் பிரிவில் சேர்ந்து படிப்பதில் எந்தச் சிரமமும் இருக்கவில்லை. பொறியியல் கல்லூரியில் படிக்கும் வாய்ப்பும் பிரகாசமாக இருந்தாலும், ஏனோ அவளுக்கு அதில் நாட்டமில்லாது போனது.  தன்னைப் போன்று ஆதரவில்லாமல் தவிப்போருக்கு உதவும் வகையில் தம் எதிர்காலம் அமைய வேண்டும் என்ற விருப்பம் கொண்டிருந்ததால், பொறியியல் படிப்பை தேர்ந்தெடுக்கத் தயக்கமாக இருந்தது. சொந்த நாட்டையும், உதவியை நாடும் உறவுகளையும் விட்டு பணி நிமித்தம் வெகுதூரம் செல்லவேண்டிய தேவையை எதிர்கொள்ள மனமில்லை என்பதும் முக்கிய காரணமானது. திரைகடல் ஓடாமலும் திரவியம் தேட நம் நாட்டிலேயே வழியும் இருப்பதாகத் தோன்றியது. மாலை கல்லூரியில் சேர்ந்து படித்ததில் பகல் நேரத்தில் பள்ளி வேலைக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. விடுமுறை நாட்களில் டியூசன் வகுப்பு எடுப்பதற்கும் ஏற்பாடு செய்து கொண்டாள். கடந்து போன கடினமான நிகழ்வுகளை திரும்பிப் பார்க்க நேரமில்லாத நெருக்கடியைத் தானே உருவாக்கிக் கொண்டாள் என்றுதான் சொல்ல வேண்டும். குழந்தைகளுடன், குழந்தையாகப் பழகும்போது மனது லேசாகிப்போவது நிம்மதியளித்தது.

சின்னம்மா அசந்து தூங்கிக் கொண்டிருப்பது போன்று தெரிந்தது. பாவம் இந்த வயதில் மாடாய் உழைத்து, ஓடாய்த் தேய்ந்துபோய்க்கிடக்கிறாரே என்று வருத்தமாக இருந்தது. இன்று நாமே சமைக்க்லாமே என்று சமையலறைப் பக்கம் போக எத்தனித்தவள், அங்கு ஏதோ உருட்டும் சத்தம் கேட்டுத் தயங்கி நின்றாள். கையை எட்டி மெதுவாக மின் விளக்கைப் போட்டாள். வாழ்க்கையில் எத்தனையோ துயரங்களைக் கண்டும் அஞ்சாமல் மீண்டு வர முடிந்தவளுக்கு இந்த சிறு எலியின் மீது அப்படி ஒரு அச்சம். விளக்கைப் போட்டுவிட்டு அது ஓடி மறையக் காத்திருந்தாள். உள்ளே சென்று அரிசிப் பானையிலிருந்து இரண்டு ஆழாக்கு அரிசியை எடுத்து முதலில் தண்ணீரில் கொட்டினாள். அதற்குள் விளக்கு வெளிச்சமும், உருட்டும் சத்தமும் கேட்டு வாரிச்சுருட்டிக் கொண்டு எழுந்து வந்தாள் சின்னம்மா.

அடடா.... இன்னைக்கு என்னமோ இப்படி தூங்கிப்போயிட்டேனே... என்னமோ ஒரே அசதியா இருந்ததுஎன்று ஏதோ பெரிய தவறு செய்தவள் போல சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தாள். சின்னம்மா எழுந்து வந்துவிட்டால் இனி தன்னை எந்த சமையல் வேலையும் செய்யவிடமாட்டார் என்று தெரிந்தாலும்,

அம்மா, இன்னைக்கு நானே சமைக்கிறேனே.. நீ இன்னும் கொஞ்ச் நேரம் படுத்து ஓய்வெடுக்கலாமில்ல.. ஏன் இப்படி அரக்கப்பரக்க எழுந்திரிக்கணும்?” என்றாள்.

இல்லம்மா, நல்லாத்தானே இருக்கேன். நான் பல்லை விளக்கிப்புட்டு போய் பால் வாங்கியாறேன். வந்து காபி போட்டுட்டு சமைக்கிறேன். நீ போய் உன் வேலையைப்பாரும்மா.. இதெல்லாம் நான் பாத்துக்கறேன்என்று கையைப்பிடித்து சமையல அறையிலிருந்து வெளியே கூட்டி வந்துவிட்டாள். என்ன கெஞ்சினாலும் இனி தன்னை வேலை செய்ய விடமாட்டாள் என்று தெரிந்ததால், கொஞ்ச நேரம் பாடம் படிக்கலாம் என்று புத்தகத்தை எடுத்துவைத்துக் கொண்டு உட்கார்ந்தாள்.

சின்னம்மா பால் வாங்கிவந்து சுடச்சுட, மணக்க, மணக்க காப்பியுடன் வந்தபோது, பரமுவும் எழுந்து காலைக்கடன்களை முடித்துவிட்டு வந்திருந்தாள்.மூவரும் ஒன்றாக அமர்ந்து கொஞ்ச நேரம் காபியுடன் சுகமாக அளவளாவிவிட்டு அவரவர் வேலையைப் பார்க்கக் கிளம்பினர்.

வழக்கம் போல துண்டு முடிந்து கொண்டிருந்த பரமுவிடம் மாலை தான் பள்ளி வேலை முடித்து வரும்போது, வெளியில் செல்லத் தயாராக இருக்கச் சொல்லிவிட்டுப் புறப்பட்டாள், மாலு.  வெகு சிரத்தையுடன் காலையிலேயே தம் கடமையைத் துவங்கிவிட்ட, பரமுவைப் பார்த்து பெருமிதமாக இருந்தது. ஏதாவது சிறு நூல்முனை கிடைத்தாலும் முன்னுக்கு வந்துவிடுவாள் அதை இறுக்கிப் பிடித்துக்கொண்டு என்று நினைத்துக் கொண்டாள். எங்கு போகப் போகிறோம் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தாலும் அக்கா, அவளாகவே சொல்லுவாள என்று முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள் பரமு. மாலு கிளம்பும் அவசரத்தில் இருந்ததால் மாலை கேட்டுக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டாள். சின்னம்மா கொடுத்த தக்காளி சாதம் டப்பாவை எடுத்து கைப்பையினுள் திணித்துக் கொண்டே மாலை முதலாளியிடம் சொல்லிவிட்டு சீக்கிரமாக வீட்டிற்குத் திரும்பிவிட்டால் மூவரும் சேர்ந்தே வெளியில் செல்லலாம்  என்றும் கூறிவிட்டுச் சென்றாள். சின்னம்மா அவசரமாகக் காரணம் கேட்டதற்கும் புன்னகைத்துவிட்டு, ”சாயந்திரம் வாங்க பேசிக்கலாம்என்று ஒத்தை வரியில் பதில் சொல்லிவிட்டுக் கிளம்பினாள். அன்று மாலை கல்லூரியும் விடுமுறையாக இருந்ததால் வசதியாகப் போய்விட்டது.

ஒரு துக்கம் நடந்த வீட்டில் உடனடியாக ஏதாவது நல்ல காரியம் செய்ய முயற்சிப்பார்கள். அந்த சூழ்நிலை மாற்றம் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் என்பதற்காக.

பரமுவை ஆட்டோவில் ஏற்றுவதற்கு இருவரின் உதவியும் தேவையாக இருந்தது. வீட்டிற்கு வந்து ஒரு வாய் காப்பித் தண்ணீர் கூடக்குடிக்காமல் அத்துனை அவசரமாக மகள் எதற்காக இரண்டு பேரையும் இழுத்துக் கொண்டு கிளம்புகிறாள் என்பது சஸ்பென்சாகவே இருந்தது. இருந்தாலும் மாலு எதைச் செய்தாலும் அது அனைவரின் நன்மைக்காகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி வைத்திருந்ததால் ஆர்வம் அதிகமாகிக்கொண்டே போனது. ஆட்டோ ஒரு எலும்பியல் மற்றும் நரம்பியல் மருத்துவமனை வாசலில் போய் நின்றபோது குழப்பம் கொஞ்சம் வந்தது. அம்மாவிற்கு ஒருவேளை ஏதும் உடம்பு முடியவில்லையோ என்று எண்ணிய போது கொஞ்சம் டென்சன் ஆனாலும், அம்மாவைப் பார்த்தால் நல்லாத்தானே இருக்குன்னு குழப்பம் அதிகமானது.. அதற்குள் செவிலியர் வந்து, “யாரும்மா இங்க பரமேசுவரிங்கறது?”  என்று கேட்கவும் அடுத்த வார்த்தை பேச முடியாமல் மாலு அக்காவின் பின்னால் அமைதியாக அம்மாவும் மகளும் நடந்தார்கள்....

போலியோ நோயினால் வலுவிழந்து சூம்பிப்போன கால்களுக்கு விசேசமான  காலணிகள் அணிந்து நடக்கப்போகும் தன்னுடைய கனவு நடைமுறைக்கு வரப்போகிறது என்ற இன்ப அதிர்ச்சி, மருத்துவமனையினுள் நுழைந்து அதற்கான ஏற்பாடுகள் செய்தபோதுதான் தெரிந்தது. தன்னையே நம்ப முடியாமல் கிள்ளிப் பார்த்துக் கொண்டிருந்தாள் அந்தப் பெண். முதன்முதலில் கால்களுக்கு பெரிய தெம்பு வந்ததுபோல் உணர்ந்தாள். இரண்டு கைகளின் அடியில் கச்சிதமாகப் பொருந்தும்படியான பஞ்சுப்பொதி வைத்த குச்சியும், தொடைப்பகுதியில் அணைப்பாக பெல்ட் போட்டு  கட்டி, அதனை இடுப்புடன் மற்றொரு பெல்ட்டுடன் சேர்த்துக் கட்டி, ஒரு வழியாக எழுந்து நிற்க வைத்துவிட்டார்கள். வானளவு உயர்ந்து நிற்பது போல ஒரு உணர்வு வந்தது முதன்முதலில் எழுந்து நின்ற அந்த இனிய பொழுதில்.. தெய்வமாக மாலு தன் வாழ்வில் வந்து ஒளியேற்றி வைத்ததை நினைக்க நினைக்க கனவா, நனவா என்றே தெரியாமல் மயக்கத்தில் கிடந்தாள் அவள்..

அக்கா, வங்கியில் கணக்கு ஆரம்பித்து, ஏதோ கொஞ்சம் சேமித்து வருகிறாள் என்று தெரிந்தாலும் அது அவளுடைய படிப்பிற்காக என்றுதான் எண்ணியிருந்தாள். ஆனால் அதெல்லாம் தனக்காகத்தான் என்று தெரிந்தபோது அவளுடைய மகிழ்ச்சிக்கு எல்லையில்லாமல் போனது. இழுத்து, இழுத்து நகர்ந்து பின்புறமெல்லாம் தேய்ந்து போய்விடுமோ என்ற அச்சத்தில் அதிக்மாக நகரக்கூட முடியாமல் சிறைக்கைதியாய் அடைந்து கிடந்தவளுக்கு சுவர்கலோகமே கண் முன்னால் தெரிந்ததில் ஆச்சரியமில்லையே! இவ்வளவு பெரிய தொகையை தனக்காக மனமுவந்து செலவு செய்தவளை நினைக்கும் போது நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. அதைவிட அடுத்து நடந்தது மேலும் இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தது. ஆம், மருத்துவமனையில் இவர்களுடைய ஏழ்மை நிலையை உணர்ந்தவர்கள் தொண்டு நிறுவனம் மூலம் உதவி கிடைக்க செய்த ஏற்பாட்டினால், செலவு செய்த தொகையில் பெரும் பகுதி திரும்பக் கிடைத்தபோது மகிழ்ச்சியாக இருந்தாலும், மாலு அதை வாங்க மறுத்தாள். தங்களைவிட சிரமத்திலிருப்பவர்களுக்கு உதவக்கூடுமே என்றே மறுத்தாள். ஆனாலும் சின்னம்மாவும், பரமுவும் வற்புறுத்தியதால் அரை மனதுடனே வாங்கிக் கொண்டாள். ஆனால் அதுவும் நல்லதாகவேப் போய்விட்டது.

ஆம்... பரமுவிற்கு தான் செய்ய நினைத்த அடுத்த முக்கியமான கடமையும் நிறைவேறியது, அந்தப் பணத்தின் மூலமாக. பரமு, வானுலக தேவதையாக உலா வருவது போல உணர்ந்தாள். அடுத்தடுத்து நடந்தவைகள் பரமுவின் தன்னம்பிக்கையை உரமிட்டு வளர்ப்பதாகவே அமைந்தது. ஆம், மாலு செய்த அடுத்த நல்ல காரியம், பரமுவிற்கு ஊனமுற்றோருக்கான பொது தொலைபேசிச் சேவையை வாங்கிக் கொடுத்ததுதான். மற்றவர்களைப் போன்று தம் மகளும் எழுந்து நடந்து வேலைக்குச் செல்வதைக் கண்ட அந்தத் தாயின் மனம் பூரிப்பில் நிறைந்துதான் போனது. மாலுவைக் கட்டிக்கொண்டு அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடினாள். அந்தக் கணம் இளம் வயதிலேயே தம்மை அனாதையாக விட்டுச்சென்ற தாயே திரும்பி வந்துவிட்டதாக உணர்ந்தாள் மாலு ..... அதுவே அடுத்தடுத்த அவளுடைய செயல்பாடுகளுக்கு ஒரு டானிக்காகவும் அமைந்து விட்டது.

இளங்கலை பட்ட வகுப்பில் முதல் நிலையில்  தேறியவள், மேற்கொண்டு உயர்கல்வி பெறவும் முடிவு செய்து அதற்கான முயற்சிகளும் மேற்கொண்டாள். பெரிய சிரமம் இல்லாமல் எம். ஏ. வகுப்பில் சேர்ந்தும்விட்டாள்.

அன்று கல்லூரி முடித்துவிட்டு வீட்டிற்கு வரும் வழியில் பரமுவையும் கூட்டிவந்து விடலாம் என அவளுடைய பூத்திற்குச் சென்றவள், பேருந்தை விட்டு இறங்கியவுடனே சற்று தொலைவிலிருந்த பரமுவின்  தொலைப்பேசிச் சாவடி நன்கு தெரியும். கம்பீரமாக மேசையின் முன் நாற்காலியில் அமர்ந்துகொண்டிருப்பவளைப் பார்க்க பெருமையாக இருந்தது. அவளுடைய முகத்தில் இருந்த அந்த நிறைவு இவ்வளவு நாளைய வேதனையைப் பறைசாற்றியது. கிட்டே நெருங்கும் போது ஒரு இளைஞன் அவளிடம் பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது. இவனை இதற்கு முன்பும் ஒரு சில முறைகள் பார்த்தது போலத்தான் இருந்தது. ஆனால் இன்று அவர்களுடைய பழக்கத்தில் ஏதோ ஒரு வித்தியாசம் தெரிந்தது. இது நல்லதற்கா அல்லது தீமை விளையக்கூடியதா என்ற தெளிவு தனக்கே இல்லாதலால் பொறுத்திருந்து பார்ப்போம் என்றிருந்தாள் மாலு. 16 வயது தளதளப்பு நன்றாகவேத் தெரிந்தது. ஏழ்மையோ, வறுமையோ எதுவும் பருவ வளர்ச்சியை பெரிதாக தடை செய்வதில்லை.  ஊனமில்லாத மனதில் அனைத்து உணர்வுகளும் எதார்த்தமாக வருவதும் இயற்கை. இதெல்லாம் நினைவில் வந்தபோது, பரமுவின் பாதுகாப்பு பற்றிய கவலையும் உடன் வந்தது!

தொடரும்

நன்றி : திண்ணை

Saturday, October 27, 2012

நவராத்திரி கொழுக்கட்டை



அன்பு நட்புக்களே,

நவராத்திரி எல்லோரும் நன்றாக கொண்டாடியிருப்பீர்கள்.. ஆயுத பூஜைக்கு நம் ஊரில் பொறி, பொட்டுக்கடலை, நிலக்கடலை, அவுள், நாட்டுச் சக்கரை என அனைத்தும் போட்டு கலந்து வைத்து படையல் போட்டு அதை அனைவருக்கும் கொடுப்பது வழக்கம். எப்படியும் நிறைய மீந்து போகும். இனிப்பு இருப்பதால் அதனை வறுத்தோ அல்லது வேறு எந்த விதத்திலோ பயன்படுத்த முடியாது. விரைவில் நமத்தும் போய்விடும். இந்த முறை என் சிறு மூளையைக் கசக்கி ஒரு திட்டம் போட்டேன்.. ஒரு புது ரெசிப்பி ரெடி. அதான் நவராத்திரி கொழுக்கட்டை. செய்வதும் மிகவும் எளிது.


பொறி, அவுள், பொட்டுக்கடலை, நிலக்கடலை, நாட்டுச்சக்கரை அனைத்தும் கலந்த கலவையை மின்சாரம் இருக்கும் நேரம் பார்த்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள். இனிப்பு போதவில்லையென்றால் மேலும் கொஞ்சம் வெல்லம் சேர்க்கலாம். இந்தக் கலவையுடன் ,தேங்காய் பல்லு, பல்லாக நறுக்கி அதனை சிறிது நெய்விட்டு வதக்கிக் கொள்ளுங்கள் அதனை பொறி கலவையில் கொட்டி நன்கு பிசையவும். தேவையானால் கொஞ்சம் தேங்காய் தண்ணீர் அல்லது தண்ணீர் தெளித்து, கொழுக்கட்டைகளாக பிடித்துக் கொள்ளவும். இட்லி பாத்திரத்தில் வைத்து 5 நிமிடம் வேக வைத்து எடுத்தால் போதும். சூப்பர் கொழுக்கட்டை ரெடி.. செய்து,சாப்பிட்டுப்பார்த்துவிட்டுச் சொல்லுங்களேன்... சுவையோ சுவை!

நன்றி : வல்லமை

நீதானா அந்த பொன்வண்டு ?



சிலந்தி பின்னிய வலையாய்
சிக்குண்டுக் கிடந்த
 பொன்வண்டு;

கட்டழகாய்
காலநேரமில்லாமல்
மின்னும் அழகு காட்டியபடி!

ஆசை வண்டின்
கானமும் மினுமினுப்பும்
கரிசனமாய் அரவணைக்கும்!

மென்சிறகின் தழுவல்
இங்கிதமாய் சிறைப்பிடிக்க
சங்கீதமாய் மனம் மயங்கும்!

மெய்சிலிர்க்கும் ஆனந்தம்
அளப்பரிய குதூகலம்
சுவாசமெல்லாம் சுகந்தம்!

எனக்கான பொன்வண்டு
எனக்காக ரீங்காரமிட்டு
கனவிலும் கட்டித்தழுவுகிறது!

வண்டு தரும் உறவால்
கொண்டு வரும் புத்துணர்வால்
இரவும், பகலும் தொலைகிறது!

சிறகுவிரித்து சுற்றிவரும்வேளை
இதழ்விரித்து கிறங்கிக்கிடக்கும்
தேன்நிறைந்த மலரும் நானே!

தூர இருந்து துடிக்கச்செய்து,
தூக்கம் கவர்ந்து துவளச்செய்து,
மணம் கவரும் மாயமான
நீதானா அந்த பொன்வண்டு?!?


நன்றி : மணியோசை இதழ் வெளியீடு

http://www.maniyosai.com/cms/literature/poem/neethaana-antha-ponvandu


Monday, October 22, 2012

நித்திலம் - கலீல் ஜிப்ரான்

நித்திலம்



சிப்பியொன்று  தமதருகில் இருந்த மற்றுமொரு சிப்பியிடம், “ யான் பெரும் வலியைச் சுமந்து கொண்டிருக்கிறேன், கனரகமாகவும், உருண்டையானதுமான அது  எமைத் துன்பமுறச் செய்கிறதே,” என்றது..

மேலுமந்த மற்றொரு சிப்பியோ, “வாழ்க வாழ்க, அந்த விண்ணும், சாகரமும்!  எம்முள்  ஏதும் இருந்தும்,  இன்மையாலும், கூட யான்  எந்த வேதனையும் இன்றி சுகமாகவும், நிம்மதியாகவும் இருக்கிறேன்“ என்றதாம் மன நிறைவுடன்.

அத்தருணமதில் அவ்விடத்தைக் கடந்து செனற,, இவ்விரண்டு சிப்பிகளின் உரையாடலையும் செவிசாய்த்த, நண்டு ஒன்று தம்முள் ஏதுமிருந்தும் இல்லாததனால் சுகமாகவும், நிம்மதியாகவும் இருப்பதாகக் கூறிய அச்சிப்பியை நோக்கி, “ ஆம், நீவிர் சுகமாகவும், நிறைவாகவும் இருப்பினும் உம் அண்மையிலிருப்பவர் சுமப்பதோ சுகமான சுமையானதொரு பேரழகான நித்திலமன்றோ  “ என்றது.

ஆம், வலியையும் வேதனையையும் சுமந்தாலும், சுமப்பது முத்தல்லவோ ?


2 காதல் கீதம் .

ஒரு முறை கவிஞனொருவன் காதல் கவியொன்று புனைந்து வைத்தான். அதிரம்மியமாக அமைந்துவிட்ட, கீதமதனைப் பிரதிகள் பலவாக உருவாக்கியவன்,  ஆடவர், மகளிர் என இரு பாலரான நண்பர்கள் மற்றும்  அறிந்தவர்களென அனைவருக்கும் அனுப்பி வைத்தான். மலைகளுக்கப்பால் வசித்துக் கொண்டிருக்கும், ஒரு முறை மட்டுமே சந்தித்திருந்த இளம் மங்கையொருத்திக்கும் போய்ச் சேர்ந்ததந்தக் காதல் கவிமலரின் பிரதியொன்று.

இரண்டொரு நாளில் அந்த இளம் மங்கையவளிடமிருந்து தூதுவன் ஒருவன் வந்தானொரு மடலையும் சுமந்து கொண்டு.. அம்மடலில் அவள், “ நீவிர், எமக்கெழுதிய அக்காதல் கவிமலர் எம் உள்ளத்தையேக் கொள்ளை கொண்டுவிட்டது. நீவிர் இக்கணமே வந்து எம் தாய் தந்தையரைச் சந்தித்துப் பேசினால் நம் திருமண, நிச்சயதார்த்ததிற்கான ஏற்பாடுகளைச் செய்யலாம் “ என்று எழுதியிருந்தாள்.

அக்கவிஞனோ அந்த லிகிதமதற்குப் பதிலாக, அவளுக்கு, “எம்  சிநேகிதியே, இஃது ஒரு பாவலனின் இதயத்திலிருந்து பீறிட்டுக் கிளம்பும்  இனிய காதல் கானம். ஏதோவொரு ஆடவனால்  ஏதோவொரு மங்கைக்காக இசைக்கப்படும் இனிய கீதம்தான் இது,” என்றான்.

அதற்குப் பதிலாக அவள்,” ஒரு கபட வேடதாரியின் பொய்யுரைகள்! இன்றிலிருந்து எம் இறுதிக் காலம் வரை உம்மால் இவ்வுலகின் அனைத்துப் புரவலர்களையும் ஒட்டு மொத்தமாக வெறுக்கிறேன்” என்றாள்.

கவிதை என்பதே, பொய்யுரை என்பதை அறிந்திருந்தும், ஒரு கவிஞன் அந்த பொய்யுரை மீது காதல் கொள்வதே இயல்பு.



The Pearl

Said one oyster to a neighboring oyster, “I have a very great pain within me. It is heavy and round and I am in distress.”

And the other oyster replied with haughty complacence, “Praise be to the heavens and to the sea, I have no pain within me. I am well and whole both within and without.”

At that moment a crab was passing by and heard the two oysters, and he said to the one who was well and whole both within and without, “Yes, you are well and whole; but the pain that your neighbor bears is a pearl of exceeding beauty.”
                                        - –oOo– -


The Love Song

A poet once wrote a love song and it was beautiful. And he made many copies of it, and sent them to his friends and his acquaintances, both men and women, and even to a young woman whom he had met but once, who lived beyond the mountains.

And in a day or two a messenger came from the young woman bringing a letter. And in the letter she said, “Let me assure you, I am deeply touched by the love song that you have written to me. Come now, and see my father and my mother, and we shall make arrangements for the betrothal.”

And the poet answered the letter, and he said to her, “My friend, it was but a song of love out of a poet’s heart, sung by every man to every woman.”

And she wrote again to him saying, “Hypocrite and liar in words! From this day unto my coffin-day I shall hate all poets for your sake.”
              - –oOo– -

நன்றி : திண்ணை