Friday, August 2, 2013

வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போம்! (21)




பவள சங்கரி


ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் பொன்மொழிகள்

 பிறர் எதைச் செய்ய வேண்டுமென்று நீ விரும்புகிறாயோ, அதை நீயே செய்.

 மனிதர்கள் புகழ்வதும் விரைவு, இகழ்வதும் விரைவு. எனவே மற்றவர்கள் உன்னைப் பற்றிச் சொல்லும் வார்த்தைகளைக் கவனியாதே.


Tuesday, July 30, 2013

காக்காய் பொன்



பவள சங்கரி

அந்தி மாலைப் பொழுது. இருண்ட மேகக்கூட்டத்தின் இடையே அவ்வப்போது மெல்ல முகம் காட்டி மறையும்  நிலவுப் பெண்அசைந்து, அசைந்து அன்னை மடியாய் தாலாட்டும் இரயில் பயணம்சன்னலோர இருக்கையாய் அமைந்ததால் இயற்கை காட்சிகளுடன் ஒன்றிய பயணமாக அமைந்தது. ஆம்பூரிலிருந்து ஜோலார்ப்பேட்டை செல்லும் பாதை . தென்னை மரக்கூட்டங்களின் அணிவகுப்புஇடையே சுகமாய் நித்திரை கொள்ள ஏங்க வைக்கும் சுத்தமான மண் தரை. சிலுசிலுவென தென்னங்காற்றின் சுகத்தினுடன் இரண்டு அணில் பிள்ளைகள் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தன. அவ்வப்போது மூக்கோடு மூக்கை வைத்து உரசி எதோ கேலி பேசி நகைத்துக் கொண்டிருந்தன.. வாக்மேனிலிருந்து மெலிதாக மொழி படப்பாடல் இனிமையாக இதயத்தை ஊடுறுவிக்கொண்டிருக்கிறது