Friday, August 2, 2013
Tuesday, July 30, 2013
காக்காய் பொன்
பவள சங்கரி
அந்தி
மாலைப் பொழுது. இருண்ட மேகக்கூட்டத்தின்
இடையே அவ்வப்போது மெல்ல முகம் காட்டி
மறையும் நிலவுப்
பெண். அசைந்து,
அசைந்து அன்னை மடியாய் தாலாட்டும்
இரயில் பயணம். சன்னலோர
இருக்கையாய் அமைந்ததால் இயற்கை காட்சிகளுடன் ஒன்றிய
பயணமாக அமைந்தது. ஆம்பூரிலிருந்து ஜோலார்ப்பேட்டை செல்லும் பாதை . தென்னை மரக்கூட்டங்களின்
அணிவகுப்பு. இடையே
சுகமாய் நித்திரை கொள்ள ஏங்க வைக்கும்
சுத்தமான மண் தரை. சிலுசிலுவென
தென்னங்காற்றின் சுகத்தினுடன் இரண்டு அணில் பிள்ளைகள்
ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தன. அவ்வப்போது மூக்கோடு மூக்கை வைத்து உரசி
எதோ கேலி பேசி நகைத்துக்
கொண்டிருந்தன.. வாக்மேனிலிருந்து மெலிதாக மொழி படப்பாடல்
இனிமையாக இதயத்தை ஊடுறுவிக்கொண்டிருக்கிறது.
Subscribe to:
Posts (Atom)
பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 33
63 நாயன்மார்கள் வரலாறு – 28 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் ஏதமில்வே ளாளர்பெரு மங்க லத்துள் ஏயர்கோன் கலிக்காமர் ‘இறையை நேரே தூதுகொளும் அவ...
