Wednesday, February 5, 2014

வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போம்!


அன்பு நண்பர்களே,

இந்த நூலை வெளியிட்டுள்ள பழனியப்பா பதிப்பகத்தாருக்கு மனமார்ந்த நன்றி.

​​ 
Displaying img015.jpg
  Displaying img016.jpg
​​
​​
                
என்னுரை

இந்த வாழ்க்கையில் நாம் அறிந்திராத ஏதேதோ இருக்கிறது. தேடுதலும் இருந்துகொண்டேதான் இருக்கிறது . அனைத்திலும் முதன்மையாக இருப்பதுஅன்புஎன்பதாகவே இருக்கிறது. இந்த நவீன அவசர உலகத்தில் அந்த அன்பை வெளிப்படுத்தவோ அல்லது ஏற்றுக்கொள்ளவோகூட நேரமில்லாமல் போகிறது. அப்படியிருக்கும்போது, நல்ல ஆக்கங்களை ஆழ்ந்து படிப்பது என்பது ஆகாத காரியமாக இருக்கிறது. ஆனாலும் இன்றைய நவீன வாழ்க்கைச் சூழலை சேதமில்லாமல் எதிர்கொள்வதற்கு சிலவற்றை அறிந்து கொள்ளத்தான் வேண்டியிருக்கிறதுஆசையைக் கட்டுப்படுத்தினால்தான் நிம்மதியாக வாழ முடியும் என்கிறார் புத்தர் . அனைத்திற்கும் ஆசைப்படு என்கிறார்கள் சிலர். இதில் எதைக்கொள்வது, எதை விடுவது? மேலும் குழப்பத்தையே ஏற்படுத்துகிறதுதன்னம்பிக்கை மட்டுமே நல்ல பாதையை அமைத்து கொடுக்கக்கூடியது. இந்த நம்பிக்கையைப் பெறக்கூடிய பல வழிகளில் ஒன்று இது போன்ற ஆக்கங்களை வாசிப்பது. நம்முடைய முன்னோர்கள் இந்த நம்பிக்கையை வளர்ப்பதற்கு பல உதாரணங்களை வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். அதில் ஒன்றுதான் பீர்பால் கதைகள். ஆக்கமும் ஊக்கமும் நிறைந்த படைப்புகள் அவை.

Tuesday, February 4, 2014

உலக புற்று நோய் தினம்



பவள சங்கரி


”புற்று நோய் என்பது வெறும் ஒரு வார்த்தைதான். வாழ்க்கையின் முற்றுப் புள்ளி அல்ல” - ஜான் டைமண்ட்

இன்று உலக புற்று நோய் தினம். புற்று நோய்களில், இரத்தப்புற்று நோய் (லுக்கிமியா) சிறுநீரகப் புற்று நோய், மார்பகப் புற்று நோய், நுரையீரல் புற்று நோய், கருப்பை புற்று நோய், தோல் புற்று நோய் போன்ற பல வகைப்பட்ட புற்று நோய்கள் உள்ளன. உடலின் செயல்பாடுகளைத் தன் முழுக் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொள்ளும் செல்களின் கட்டுப்படுத்த முடியாத வளர்ச்சியே புற்று நோயாகும்.

Monday, February 3, 2014

இதுதானா ஆப்புங்கறது..?


பவள சங்கரி


காட்சி - 1

ஹலோ, ஹலோ.. ஏனுங்க எவ்ளோ நேரமா போன் அடிக்குதே. அப்புடி என்னதான் செய்வீங்க. போன் அடிச்சா உடனே எடுக்கணும்கறது குட் மேனர்ஸ் . இதுகூட தெரியாதாக்கும்..

ஆமாம்மா எங்களுக்கு வேற பொழப்பே இல்லை பாரு.  போனையே பாத்துக்கிட்டு எப்ப அடிக்கும்னு உக்கார்ந்திருக்கோமாக்கும்.  மனுசன் காலையிலருந்து, பேல் போட்றதுக்கு மாடா உழைச்சுக்கிட்டிருந்தா உனக்கு கிண்டலா இருக்குது. பேசமாட்ட பின்ன. சுகமா வீட்டுல ஃபேனுக்கடிய உக்காந்துக்கிட்டு, ஹாயா வேலைக்காரிகிட்ட அதிகாரம் பண்ணிக்கிட்டு, நேரத்துக்கு ஜூஸ் குடிச்சு உடம்பையும் பாத்துக்கிட்டு மேடம் சுகமா இருக்கணும்னா நாங்க இங்க இப்புடி கடந்து உழைச்சாத்தானே ஆச்சு. சரி வேலை கடக்குது. என்னத்துக்கு போன் பண்ணின அதச்சொல்லு.