Monday, June 30, 2014

ஆத்ம ராகம்

பவள சங்கரி


 தற்போதைய உடலில் வாழும் வாழ்வுக்கு ஏற்பவே, ஆத்மா மறுபிறவியில் வேறு உடலை அடைகின்றது.
அத்தியாயம் – 15, பதம் – 3



அப்பா.. அப்பாபேப்பர் படிக்கறீங்களாசாப்பிட்டாச்சாப்பா


இல்லப்பா. உனக்காகத்தான் வெயிட்டிங். நிம்மியும் இன்னும் சாப்பிடலை. அவளோட ரூமில் படிச்சிட்டிருக்கா பாருசப்பாத்தியும், சன்னாவும் செய்திருக்கேன். வாங்க சாப்பிடலாம்

சாரிப்பா, இன்னைக்கு நான் உங்களுக்கு டின்னர் தயார் பண்ண ஹெல்ப் பன்ணமுடியாமப் போச்சு. பை வே, அப்பா ஷி ஈஸ் சுமனா, என்னோட ஃபிரண்ட். இன்னைக்கு நம்மளோட டின்னர் சாப்பிடப் போறாங்க

வணக்கம் அப்பா

அவள் உடுத்தியிருந்த ஜீன்ஸ் பேண்ட், டி ஷர்ட், பாய் கட் முடி போன்றவற்றிற்கும் அவளுடைய பேச்சிற்கும் சம்பந்தமே இல்லாதது போல இருந்தது.

வணக்கம்மா. என்ன செய்யறீங்க. படிச்சிட்டிருக்கீங்களா?”

இல்லைப்பா, நான்  பாட்டு ஆசிரியராக ஒரு தமிழ் பள்ளியில்  பணியில் இருக்கறன். உங்கள் மகன் வழமையாக வரும் பள்ளிதான் அது. அங்குதான் என்ர தலைமை ஆசிரியை மூலம் இவர் அறிமுகமானார். நான் தான் இவருக்கு கர்நாடக இசை கற்றுத் தருகிறன்