Thursday, July 9, 2015

திருக்கருகாவூர் – தல புராணம்


பவள சங்கரி

கருணை மழை பொழியும் கருகாவூர் கற்பக நாயகி!

11698584_861438480611445_8838361490820937760_n
திருக்கருகாவூர் – திருத்தாண்டகம்
குருகாம் வயிரமாங் கூறு நாளாங் 
கொள்ளுங் கிழமையாங் கோளே தானாம்
பருகா அமுதமாம் பாலின் நெய்யாம் 
பழத்தின் இரதமாம் பாட்டிற் பண்ணாம்
ஒருகா லுமையாளோர் பாக னுமாம்
உள்நின்ற நாவிற் குரையா டியாங்
கருவா யுலகுக்கு முன்னே தோன்றுங் 
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே. - [திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(ஆறாம் திருமுறை)]
முத்தி லங்குமுறு வல்லுமை யஞ்சவே
மத்த யானைமறு கவ்வுரி வாங்கியக்
கத்தை போர்த்தகட வுள்கரு காவூரெம்
அத்தர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே. – [திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த 
திருக்கருகாவூர் தேவாரத் திருப்பதிகம் – (மூன்றாம் திருமுறை 46வது திருப்பதிகம்)]

தல விருட்சம்

பவள சங்கரி


அனைத்து கோவில்களிலும் தல விருட்சம் என்று இருக்கிறதே. அதன் தாத்பரியம் என்ன என்று தெரியுமா? ஆதி காலத்தில் நம் முன்னோர்கள் காடுகளில் குடில் அமைத்து கூட்டமாக வாழ்த்து வந்தனர். பெரிய கட்டிடங்கள் எல்லாம் இல்லை. அந்த காலத்தில் மரத்தினடியில் இறை உருவை எழுந்தருளச் செய்து வழிபட்டு வந்தனர். பின்னர் நாகரீக வளர்ச்சியில், காடுகள், நாடு, நகரமாகவும் மாறி, கட்டிட அமைப்புகளும் உருவாக ஆரம்பித்தன. பிரம்மாண்டமான ஆலயங்களும் உருவாயின. மரத்தடியில் இருந்த தெய்வச் சிலைகள் ஆலயங்களில், மூலத்தானத்தில் வைக்கப்பட்டபோது, ஆண்டவனுக்கு அடைக்கலமான மரங்கள் தல விருட்சங்களாக பாதுகாக்கப்பட்டு வருவதாக ஐதீகம்.... சுவையான தகவல் அல்லவா?
சிவன் கோவிலில் பெரும்பாலும் வில்வ மரங்களே தல விருட்சமாக இருக்கும்.

Wednesday, July 8, 2015

பொன் மொழிகள்



சுட்டும் விழிச்சுடர்


பவள சங்கரி
உள்ளத்தில் உண்மையும், மனதில் தெளிவும், விடா முயற்சியும் இருந்தால் எந்த தீய சக்தியும் அணுகாமல் தம் இலட்சியம் நிறைவேற மன உறுதியே துணை நிற்கும் என்று நிரூபித்து உள்ளார் சிங்கால்!