Friday, May 2, 2014
என்ன செய்யலாம்?
பவள சங்கரி
சோதனை எலியாய் இருந்தால் சோகமென்பதே இல்லை
எதையும் சிந்திக்க வேண்டிய தேவையும் இல்லை
புல்லிலும் புதரிலும் ஓடிஓடி வயிறையும் நிரப்பிடலாம்
எல்லாமே குதூகலமாயும் கொண்டாட்டமுமாய் ஆகிடலாம்
வேணிலில் காயலாம், நிழலில் இளைப்பாறலாம்
குளிரானால் வைக்கோலினுள் சுருண்டு கிடக்கலாம்
நாள்முழுதும் எங்கும் கிடக்கலாம் எதிலும் புரளலாம்
தங்கும் இடமும் சலனமின்றி சடுதியில் மாறலாம்
Wednesday, April 30, 2014
Sunday, April 27, 2014
புரியாத புதிர்
பவள சங்கரி
வெள்ளை நிறத்தில் ஒரு குட்டி
கரும்புள்ளியுடன் மங்கிய நிறத்திலொன்று
அடர்கருமை நிறத்தில் மற்றொன்று
செழுமை நிறத்திலொரு கெடா
காய்ந்த கானகத்தில் கம்பு மேய்ந்தபடி
அவ்வப்போது இடையனை நோக்கியபடி
மண்மேட்டில் கையணையில் சாய்ந்தபடி
பகற்கனவில் சுகமாய் இலயித்தபடி!
சொடுக்கி அழைத்தவனின் சோதியில்
சொக்கப் பானையாய் மெய்மறந்ததில்
நிறமற்ற தனிமனமொன்று தாவியதில்
வேலிமுள்ளில் சிக்கி சின்னாபின்னமானது
வெம்மையும் கருமையும் செம்மையும்
சீவத்தில் ஒடுங்கும் சிவமாய் - பாவமாய்
கல்லையும் முள்ளையும் தாங்கிநிற்கும்
தவமாய் தவிப்போடு தவழும் கோலம்
புரியாத புதிர்களாகக் கடந்துபோகும் காலம்
புரியாதது எதுவும் தனக்கானது அல்ல - வேறு
புரிதலுக்காகக் காத்துநிற்பது புத்தொளிவீசுவது
புரிந்தும் புரியாத புதுமணம் பொன்மனம்.
Subscribe to:
Posts (Atom)
காகத்தின் நுண்ணறிவு!
காக்கை நாம் அன்றாடம் பார்க்கிற பறவை. ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது நாம் இயல்பாகப் பயன்படுத்தும் பழமொழி. நாங்கள் அன்றாடம் கா...

-
கண்ணதாசனின் ‘சேரமான் காதலி' (சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்) தமக்கென ஒரு உலகைப் படைத்துக்கொண்டு அதில் தாமே சக்கரவ...
-
உதயன் படங்களைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியவை... நன்றி. ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு. (மீன்கொத்தி...
-
தமிழ்த்துறை தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், சித்தா வேதா மையம், நியூ ஜெர்சி, அமெரிக்கா, சாந்தம் உலக...