Thursday, September 11, 2014

பாரதியும் ஓர் புத்தனே!

பவள சங்கரி



லட்சியமே சுவாசமாக
கொண்ட
கொள்கையே வேதமாக
விடுதலைப்புள்ளின் விவேகத்தோடு

Sunday, September 7, 2014

முந்திரிக் கொட்டை



பவள சங்கரி
தலையங்கம்
ஒரு காலத்தில் முந்திரி பேர ஊழல் பிரசித்தி பெற்றது. அது போல நம் சமையலிலும் முந்திரி பருப்பு முக்கியமான இடம் பிடித்துள்ளது. துடுக்குத் தனமாகவோ அல்லது முந்திக் கொண்டோ, எதையேனும் செய்பவர்களை முந்திரிக் கொட்டை என்று விளையாட்டாகச் சொல்வார்கள். காரணம், பெரும்பாலான பழங்களில் பழத்திற்குள்ளே இருக்கும் கொட்டை, முந்திரிப்பழத்தில் மட்டும் பழத்திற்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்கும்.
பிரேசில் நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டதாக இருந்தாலும், உலகளவில் முந்திரி அதிக பரப்பளவில் பயிரிடப்படுவது நம் இந்தியாவில்தான். நம் இந்தியாவில், ஒரு ஆண்டிற்கு சராசரியாக 60,000 டன் முந்திரி விளைவிக்கப்படுகிறது. வியட்நாம், நைஜீரியா, இந்தியா, பிரேசில், இந்தோனேசியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் இது அதிகம் பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் அதிக அளவில் முந்திரி பயிரிடப்படுகிறது. இந்தியாவில் கேரள மாநிலம்தான் முந்திரி உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. அவை தரம் வாரியாகப் பிரிக்கப்பட்டு உள் நாட்டுச் சந்தைக்கும், வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ஸ்ரீ ஹரி ஓம் அம்மா!


பவள சங்கரி
“துறவியரில் நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது பேர் காமத்தையும் செல்வத்தையும் துறந்துவிட்ட பிறகும்கூட, பெயர், புகழ் ஆசையால் விலங்கிடப்படுகிறார்கள். மாபெரும் உள்ளங்களுக்கும் கடைசியாக உள்ள பலவீனம் புகழில் உள்ள ஆசை” 
சுவாமி விவேகானந்தர்
நம் இந்தியத் திருநாடே ஆன்மீகம் என்னும் அடித்தளத்தின்மீது கட்டப்பட்ட ஒரு மாபெரும் கோட்டை என்பதே உலகறிந்த உண்மை. நம் நாட்டில் மட்டுமே பல மதங்கள், பல இனங்கள், பல தெய்வங்கள், ஒவ்வொன்றிற்கும் ஒருவிதமான தத்துவங்கள், எண்ணற்ற வழிபாட்டு முறைகள் என்று திரும்பிய புறமெல்லாம் ஏதோவொரு ஆன்மீகச் சின்னம் நம் கண்ணில் பட்டவாறே இருக்கும். அந்த வகையில் துறவறம் பூண்டு, நாட்டை விட்டு காட்டில் சென்று தவம் புரிந்த சங்க காலத்தின் சக்கரவர்த்திகளாகட்டும், சகல செல்வங்களும் கொட்டிக்கிடக்க, எந்தச் சுகமும் தேவையில்லை என்று துறந்து தெருவில் இறங்கிச் செல்லும், செல்வந்தராகட்டும், நாகரீக உலகில் பிறந்து, வளர்ந்தாலும் இளமை முதல் எதிலும் எதுவித நாட்டமும் இன்றி, இறைமையை அல்லும், பகலும் மனதிலேற்றி மெல்ல, மெல்ல துறவை நாடியோராகட்டும், அனைவரின் இலக்கும் இறைவனை அடைவது என்பதோடு, உள்ளத் தூய்மையும், அதனால் பெறக்கூடிய மன நிம்மதியும்தான். அந்த வகையில், இறைவனின் படைப்பில் ஒவ்வொரு மலரும் ஒரு தனிப்பட்ட குணமும், மணமும், நிறமும் கொண்டிருப்பது ஆச்சரியப்படத்தக்கது. இயல்பாகவே பெண்கள் இளம் வயதிலிருந்தே, தங்களை அழகுபடுத்திக்கொள்வதில் தனி விருப்பம் கொண்டவர்களாக இருப்பவர்கள். ஒரு இளம் பெண் மனதில் ஆசா, பாசங்கள் அனைத்தும் மறைந்து, அன்பும், அமைதியும், பேரானந்தமும் நிலைத்து நிற்கும் வண்ணம் துறவு நிலையை தேர்ந்தெடுப்பது என்பது சாமான்ய காரியம் அல்ல. பிறவியிலேயே அப்படி ஒரு எண்ணம் வாய்க்கப் பெற்றவர்களுக்கே இது சாத்தியம் என்பதே நிதர்சனம்.
வண்ண வண்ணச் சிற்றாடையுடன், சிங்காரம் செய்து, இன்பமாய் வலம் வரும் காலத்தில், பாண்டியும், பல்லாங்குழியும் விளையாடும் பருவத்தில், தூய வெண்ணாடையை உடுத்தி, அதே தூய்மையை உள்ளத்திலும் புகுத்தி, மங்கையரில் தாம் ஒரு தனி ரகம் என்பதை ஆச்சரியமாகக் காணச் செய்துள்ளவர் ஸ்ரீ ஹரிஓம் அம்மையார் அவர்கள். தம் இளம் பருவத்திலேயே இறைவனின் மீது நாட்டம் கொண்டு, இயற்கையாய் ஒரு இளம் பெண்ணிற்கு உள்ள எந்த உணர்வினாலும் ஆட்படாமல், அறிவும், இறைமையும் தம் இரு கண்களாக எண்ணி தம் வாழ்நாளைத் தவமாக கழித்துக் கொண்டிருப்பவர். அதற்கு இணையான ஆசிரியப் பணியில் தம் கடமையைச் செவ்வனே நிறைவேற்றி, எண்ணிலடங்கா பெண் குழந்தைகளை ஒழுக்கச் சீலர்களாக உருவாக்கியுள்ள பெருமை அம்மையாரையேச் சேரும். தாம் புனிதமாகக் கருதியத் தம் ஆசிரியப் பணியிலும், மற்ற ஆசிரியர்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும் திகழ்ந்தவர், 72 வயது நிரம்பிய ஸ்ரீஹரிஓம் அம்மையார் அவர்கள்.

பொன் மொழிகள்


பவள சங்கரி