Saturday, March 25, 2023
Tuesday, March 21, 2023
இதயப்பறவை
ஏதோவொரு வலையில் சிக்குண்ட
அப்பறவையை மீட்கச் சென்றேன்.
சிறைபட்ட சிறகெலாம் காயங்கள்:
அந்த அழுத்தம் தந்த முத்தங்கள்.
என் தோப்பில் சுகமாக
சிறகடித்துத் திரிந்த பறவைதானது!
கையிலே ஓடேந்தி
வனம் வனமாய் சுற்றித்திரிந்த
பாழ்பறவை வெறுமையைத் தாங்கி
கூடு திரும்பியது.
தானுறையும் வனமெலாம் தேன்பூக்களும்
சுவையான பழங்களும் நிறைந்ததுதான்!
வெகுதூரம் பறந்து சென்றதுதான்
சோகம் தீர்க்கும் சுகத்திற்காக.
சுமைகூடி சிந்திய கண்ணீரால்
தாகம் தீர்த்துக் கொண்டது.
பாயும் சுனையின் குளிரினூடே
குதூகலித்துக் கிடந்த புள்தானது.
தன்னைச்சுற்றி குவிந்துக் கிடப்பதையே
அறியாமல் தேடும் பரிதாபம்
என்றுதான் புரிந்துகொள்ளும்
பற்றறுத்தலே பேரின்பமென்று?
#பவளசங்கரி
பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 36
63 நாயன்மார்கள் வரலாறு – 31 மூர்க்க நாயனார் தொண்டை நாடு சான்றோர் உடைத்து , எனும் பழமொழிக்கேற்ப சான்றோர் பெருமக்கள் பல்லோர் அவதரித...
-
தமிழ்த்துறை தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், சித்தா வேதா மையம், நியூ ஜெர்சி, அமெரிக்கா, சாந்தம் உலக...
-
பவள சங்கரி h ttps://www.youtube.com/watch?v=AXVK2I37qbs சமுதாயத்தில் பல புரட்சிகளை ஏற்படுத்திய, சிவவாக்கியர், ‘புரட்சிச் சி...
-
கண்ணதாசனின் ‘சேரமான் காதலி' (சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்) தமக்கென ஒரு உலகைப் படைத்துக்கொண்டு அதில் தாமே சக்கரவ...
