Friday, September 30, 2016

காக்கும் வரமருளும் அன்னையே!



பிள்ளைகள் பலகோடி, அத்தனையும்
உனைநாடி உன்பதம் தேடி
வாழும்வழி தாங்கும்கதி தேடும் உயிர்கள்!
சூழும்துயர் நீங்கும்சதி நாடும் மனங்கள்
காக்கும்வரம் நாளும் தரும் அன்னையே!
வீழ்த்தும் கபடம் தாக்கும் பாகாசுரன்களை
பாட்டுக்கொரு புலவனும் பாருக்கொரு ஞானியும்
ஊர்தோறும் உழவனும் சோறுக்கென சேறும்
வாழ்வுக்கொரு வீணையும் பாரதத்திற்கொரு வீரமும்
அளித்தவள் அவளே அன்னை பராசக்தி!