Monday, March 4, 2019

ஓம் நமச்சிவாய ஓம்!







வரம்வேண்டும் நவசக்தி நின் வரம்வேண்டும் 
மனம் வேண்டும் அன்னையே நதி போலோடவே 
நாளும் பகடையாயுருட்டும் விதியின் பிடிவிலகிடவே
 சிதறும் சிந்தையாவும் சீர்  பெற வேண்டும் தாயே!
கபடமில்லா  உடுக்கையாய் நேயமும் வேண்டுமே 
தீதென்றறியாதோர் திண்ணம் தீயாயொளிரும் திட்பமும் 
பனிபோல் விலகியோட வேண்டும் அம்மையே!
நன்னெறியால் நயந்த நேசம் கூடவும் வேண்டும் 
தன்னைத்தான் உணரும் தவமும் சித்திக்க வேண்டுமே 
நானெனும் அகந்தை அழிய நீயருளல் வேண்டும்! 
சித்தமெலாம் சிவசக்தியே என்றுணரும் நிலையருளலும் வேண்டுமே!
பண்ணின் இசையாய் விண்ணின் மேகமாய் கண்ணின் 
காட்சியாய் உதிக்கும் நாயகியே! சகலமும் நீயே!
உவமையில்லா பேரொளியே! அத்தனோடு ஆடும் ஆனந்தசோதியே!
மனத்தகத்து அழுக்கறுத்து ஆட்கொளும் ஆதிசக்தியே!
அம்மையுன் பாதம்  காணும் காலமெதோ! ஓம் நமச்சிவாய ஓம்!