Saturday, June 14, 2014

தந்தை ஒரு சீனத்துச் சுவர்!

பவள சங்கரி





தந்தை ஒரு சீனத்துச் சுவர்
வெறும் கற்களாலான சுவரல்ல
இரும்புக் கோட்டை அமைத்த சுவர்
வீசும் புயலும் தகிக்கும் தீக்கனலும்
அண்டவிடாது  அடைகாப்பவன்
குருதியை வியர்வையாக்கிப் பாசமாய்
வளர்ப்பவன். 

Tuesday, June 10, 2014

ஓடும், செம்பொனு மொக்கவே


பவள சங்கரி



சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம்
(பெரிய புராணம்) - 143

கேடு மாக்கமுங் கெட்ட திருவினார்  
  ஒடுஞ் செம்பொனு மொக்கவே நோக்குவார்
         கூடு மன்பினிற் கும்பிட லேயன்றி
          வீடும் வேண்டா விறலின் விளங்கினார்.

     குறைவதும் மிகுவதுமில்லாத என்றும் நிலைத்த செல்வத்தை உடையவர்கள், மண் ஓட்டையும் பசும் பொன்னையும் ஒன்று போலவே காண்பவர்கள்; 

இறைவனை மனத்திலே கூட்டி வைக்கும்  அன்பு மேலீட்டினால் அவனை வழிபடும் பிறப்பு ஒன்றேயன்றி, நிலையில்லாத செல்வத்தையும், சொர்கத்தையும் கூட  விரும்பாத வன்மையுடையார். அதாவது தெய்வத் தன்மையாய் என்றும் இறவாத இன்ப அன்பு நிலையுடையவர்கள். பிச்சைபுக்கு உண்ணும் நிலையையும் , செம்பொன், முத்து, வைரம், வைடூரியம் என எத்தகைய செல்வமாயினும் அதனை விரும்பாது, அடியவர்கள் இவ்விரண்டு நிலையிலும் மனம் மாறாது ஒன்று போலவே தம்பணி செய்து நிற்பர்.