Monday, November 19, 2012

பாதையும் பயணமும்! - வெற்றி நடை தீபாவளி மலரில்!




பாதையும் பயணமும்!

விரிநத பாதைகள் இரண்டும்
தெளிவாகத்தான் இருந்தது
தோற்றத்தில்.

ஒரே நேரத்தில் இரு
பயணம்
சாத்தியமில்லை.

உற்று உற்று நோக்கி
விலக்கியது கீழான கணக்கில்.
அடுத்தொன்று சிறந்ததுதானா?

நடையைக் கட்டினேன்
சந்தேகத்துடனே.
சென்ற தொலைவும்
அதிகமில்லை.

உள்ளிருந்து உறுத்திய
சந்தேகமுள் தேர்ந்தெடுத்ததைத்
தவறென்று குத்தியது.

விலக்கிய அடுத்தொன்றை
ஏற்கத் துடித்த மனம்
கடந்து போன காலத்தைக்
காட்டி அச்சமூட்டியது.

தத்தித்தத்தி குழந்தையாய்
நடைபயின்று தளர்வுடன்
வாடி நிற்கும் நேரம்

சாலை இரண்டும் இணையும்
முகட்டில் பூத்துக் குலுங்கும்
பூவின் மணம்

அலைபாய்ந்த மனமும்
கடந்து வந்த பாதையை
விலக்கி மற்றொன்றை
நோக்கி நகர்ந்தது.

தொலைத்த காலத்தினூடே
வழியே வழியை உணர்த்த
மாற்றங்கள் ஏதும் நிகழவில்லை.

போதியாய் புரிய வைத்தது...
தவற விட்டது பாதையை
அல்லவென்று!


நன்றி : வெற்றி நடை இதழ்


2 comments:

  1. கவிதை நல்லாருக்குங்க..

    ReplyDelete
  2. வாங்க, அன்பின் சாந்தி, வாங்க. மிக்க மகிழ்ச்சி. நன்றி.

    அன்புடன்
    பவளா

    ReplyDelete