Friday, December 16, 2016
Thursday, December 15, 2016
41% இந்துக்களுக்கு அடிப்படைக்கல்வி இல்லை!
உலகளவிலான அனைத்து மதங்களின் அடிப்படையில் கல்வி கற்றோரின் எண்ணிக்கையை பியூ ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் அதிர்ச்சிகரமான தகவலாக, உலகளவில் நம் இந்து மதமே அடிப்படைக் கல்வியில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளது. யூதர்களே கல்வியில் முதலாம் இடத்தில் உள்ளனர்.
41% இந்துக்கள் அடிப்படை கல்வியே இல்லாமல் இருக்கின்றனர்.
53% இந்துப்பெண்கள் / 29% இந்து ஆண்கள் சுத்தமாக கல்வி வாடையே இல்லாதவர்களாக உள்ளனர்!
6.4 ஆண்டுகள் அடிப்படைக்கல்வி பெற்ற இந்து மதத்தின் ஆண்கள் மத்தியில் 4.2 ஆண்டுகள் மட்டுமே பெண்கள் அடிப்படைக் கல்வி பெறுகின்றனர்.
இசுலாமியப்பெண்கள் 4.9 ஆண்டுகள் அடிப்படைக்கல்வி பெறுகின்றனர்.
53% இந்துப்பெண்கள் / 29% இந்து ஆண்கள் சுத்தமாக கல்வி வாடையே இல்லாதவர்களாக உள்ளனர்!
6.4 ஆண்டுகள் அடிப்படைக்கல்வி பெற்ற இந்து மதத்தின் ஆண்கள் மத்தியில் 4.2 ஆண்டுகள் மட்டுமே பெண்கள் அடிப்படைக் கல்வி பெறுகின்றனர்.
இசுலாமியப்பெண்கள் 4.9 ஆண்டுகள் அடிப்படைக்கல்வி பெறுகின்றனர்.
Tuesday, December 6, 2016
சோ ராமசாமி அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்
மூத்த பத்திரிக்கை ஆசிரியர், எழுத்தாளர், அரசியல் சித்தாந்தவாதி, நகைச்சுவை நடிகர், நாடக ஆசிரியர், வழக்கறிஞர் திரு.சோ ராமசாமி அவர்கள் இன்று அதிகாலை (07/12/2016) நம்மைவிட்டுப் பிரிந்துள்ளது மிகவும் வேதனைக்குரிய விசயம். எழுத்துலகில் தனக்கென ஒரு தனிப்பாணியை உருவாக்கி மக்களை தட்டியெழுப்பிய அரசியல் சிந்தனைவாதி, உயர்திரு சோ அவர்களின் முகமது பின் துக்ளக் என்ற நாடகம் தமிழகத்தின் பட்டி தொட்டிகளெல்லாம் பரவி அரசியலில் ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியது என்றால் அது மிகையில்லை. இந்த நாடகம் பின்னர் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. அவருடைய எழுத்துகள் போலவே இந்த நாடகமும் மக்களிடையே பன்மடங்கு எழுச்சியை ஏற்படுத்தியது. பத்திரிக்கைத் துறையில் அவர் ஆற்றிய பணிக்களுக்காக 1986ஆம் ஆண்டு வீரகேசரி விருதும், 1994ஆம் ஆண்டு கொயங்கா விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அன்னாரது ஆன்மா சாந்தியடையவும், அவர்தம் குடும்பத்தாரும், இரசிகர்களும் மனம் அமைதி பெறவும் எல்லாம் வல்ல கூத்தப்பெருமானை இறைஞ்சுகிறோம்.
Sunday, December 4, 2016
தீவிர சிகிச்சை பெறும் தமிழக முதலமைச்சர் விரைவில் குணமடைய பிரார்த்தனைகள்
பொன் மனச் செல்வி!
செல்வி. ஜெ. ஜெயலலிதா
செல்வி. ஜெ. ஜெயலலிதா
தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து தீவிர சிகிச்சை அளித்து வருவதாக அப்பல்லோ மருத்துவமனை அறிவித்துள்ளது.
தற்போதைய முதல் அமைச்சரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான, ’அம்மா’, ‘புரட்சித் தலைவி’ என்று அன்பாக தொண்டர்களால் அழைக்கப்பெறும் ஜெயலலிதா அம்மையார் அவர்கள் அரசியலில் நுழைவதற்கு முன்னர் தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களின் மூலம் தன்னுடைய கலையுலகச் சாதனையை நிரூபித்தவர். செல்வி ஜெயலலிதா அம்மையார் அவர்களின் தனிச் சிறப்பென்பதே, அவர் எந்தத் துறையில் நுழைந்தாலும் அத்துறையின் எல்லைவரை சென்று சாதிக்கும் வல்லமைப் பெற்ற, தோல்வியைக் கண்டுத் துவளாத, துணிச்சல்மிகு பெண்மணி என்றால் அது மிகையாகாது. ஃபீனிக்ஸ் பறவை போல, அழிக்க, அழிக்க, அந்தச் சாம்பலிலிருந்து மேலும், மேலும் புத்துணர்வுடன் உயிர் பெற்று வரும் வல்லமை கொண்டவர் இந்தப் பன்முக நாயகி. அந்த வகையில் பெண்குலத்திற்கே பெருமை சேர்க்கும், தன்னம்பிககை எனும் மகுடம் சூடிய இரும்புப் பெண்மணி, தாய்மை முலாம் பூசிய தங்க மங்கை,
Monday, November 28, 2016
வந்துவிடு வனிதா.. !
பவள சங்கரி
ஓவியம் : நன்றி திரு. ஜீவா
சன்னல் திட்டின் விளிம்பில் உட்கார்ந்தவாறு மாலை நேர மங்கிய ஒளியில் மயிலிறகாய் வருடும் தென்றல், முன் நெற்றி முடியை மெல்லச் சுழட்டியடித்தது. அவளுடைய தலை சன்னலில் முட்டியிருந்தது. சன்னல் தூரிகையின் நெடி மூக்கில் நுழைந்து ஒருவித உறுத்தலை ஏற்படுத்தியது.அவள் களைப்பாகவும் இருந்தாள்.
Thursday, November 24, 2016
Tuesday, November 22, 2016
Subscribe to:
Posts (Atom)
காகத்தின் நுண்ணறிவு!
காக்கை நாம் அன்றாடம் பார்க்கிற பறவை. ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது நாம் இயல்பாகப் பயன்படுத்தும் பழமொழி. நாங்கள் அன்றாடம் கா...

-
தமிழ்த்துறை தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், சித்தா வேதா மையம், நியூ ஜெர்சி, அமெரிக்கா, சாந்தம் உலக...
-
கண்ணதாசனின் ‘சேரமான் காதலி' (சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்) தமக்கென ஒரு உலகைப் படைத்துக்கொண்டு அதில் தாமே சக்கரவ...
-
உதயன் படங்களைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியவை... நன்றி. ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு. (மீன்கொத்தி...