Saturday, April 15, 2023
Saturday, March 25, 2023
Tuesday, March 21, 2023
இதயப்பறவை
ஏதோவொரு வலையில் சிக்குண்ட
அப்பறவையை மீட்கச் சென்றேன்.
சிறைபட்ட சிறகெலாம் காயங்கள்:
அந்த அழுத்தம் தந்த முத்தங்கள்.
என் தோப்பில் சுகமாக
சிறகடித்துத் திரிந்த பறவைதானது!
கையிலே ஓடேந்தி
வனம் வனமாய் சுற்றித்திரிந்த
பாழ்பறவை வெறுமையைத் தாங்கி
கூடு திரும்பியது.
தானுறையும் வனமெலாம் தேன்பூக்களும்
சுவையான பழங்களும் நிறைந்ததுதான்!
வெகுதூரம் பறந்து சென்றதுதான்
சோகம் தீர்க்கும் சுகத்திற்காக.
சுமைகூடி சிந்திய கண்ணீரால்
தாகம் தீர்த்துக் கொண்டது.
பாயும் சுனையின் குளிரினூடே
குதூகலித்துக் கிடந்த புள்தானது.
தன்னைச்சுற்றி குவிந்துக் கிடப்பதையே
அறியாமல் தேடும் பரிதாபம்
என்றுதான் புரிந்துகொள்ளும்
பற்றறுத்தலே பேரின்பமென்று?
#பவளசங்கரி
Saturday, March 18, 2023
கல்வியின் பின்னடைவு எதிர்கால பொருளாதாரத்தின் பின்னடைவு!
சென்ற ஆண்டில் பொதுத்தேர்வில்
பங்கேற்காத மாணவர்களின் எண்ணிக்கை 4%ஆக இருந்தது நிகழாண்டு 6%ஆக உயர்ந்துள்ள நிலையில்
கடந்த மார்ச் 13ஆம் தேதி
தொடங்கி நடைபெற்று வரும் +2 பள்ளியிறுதியாண்டுத் தேர்வுகளில் 49,000க்கும் மேற்பட்ட
பள்ளி மாணவர்கள் பங்கேற்காத நிலை ஏற்பட்டுள்ளது கவனம் கொள்ள வேண்டிய முக்கிய விசயம்.
(குறிப்பாக அரசு பள்ளி மாணவர்கள்
38,000 பேர்) காரணம்
இது எதிர்காலத்தில் தமிழகத்தில் தீவிரமான பொருளாதார
பின்னடைவிற்கு வழிவகுக்கும். ஏற்கனவே வட மாநிலத்தவர் வந்து வேலை செய்ய வேண்டிய தேவை
அதிகரித்து வரும் நிலையில் பள்ளிக்கும் மாணவர்கள் ஒழுங்காக வர விருப்பம் இல்லாத இந்த
மனநிலை எதிர்காலத்தை பல விதங்களில் பாதிக்கக்கூடும். தமிழ், ஆங்கிலம் பாடத்தேர்வில்
5.6% மாணவர்கள் வராமல் இருந்துள்ளனர் .. அரசு இந்தப் பிரச்சனையில் தீவிர கவனம் செலுத்தி
அவசரகால நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். கல்வி கற்க வேண்டியதன் அவசியத்தையும்,
அவர்களுக்கு ஆர்வம் ஊட்டும் வகையில் திட்டம் தீட்டுவதையும் அவசரகாலத் தேவையாக கருத
வேண்டியதும் அவசியம் … மாணவர்கள் திடீரென்று
சமீப காலங்களில் ஏன் பள்ளியை விட்டு வெளியேறுகிறார்கள், ஏன் மொழிப்பாடங்களைத் தவிர்க்கிறார்கள்,
இன்னும் எவ்வளவு மாணவர்கள் பள்ளிக்கு வரமால் இருக்கிறார்கள் போன்ற ஆய்வுகளை உடனடியாக
மேற்கொள்ள வேண்டும். பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் பாலிடெக்னிக் கல்வி போன்று தொழிற்கல்வி
பயின்று முன்னுக்கு வரமுடியுமா என்பது போன்ற ஆய்வுகளையும் மேற்கொள்ள வேண்டும். அரசு
இதில் உடனடி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தமிழ்நாட்டின் எதிர்கால பொருளாதாரமே கேள்விக்குறியாகாமல்
தவிர்க்கப்படக்கூடும் ….
#பவள சங்கரி
Friday, March 17, 2023
Sunday, March 12, 2023
பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 33
63 நாயன்மார்கள் வரலாறு – 28 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் ஏதமில்வே ளாளர்பெரு மங்க லத்துள் ஏயர்கோன் கலிக்காமர் ‘இறையை நேரே தூதுகொளும் அவ...
-
தமிழ்த்துறை தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், சித்தா வேதா மையம், நியூ ஜெர்சி, அமெரிக்கா, சாந்தம் உலக...
-
கண்ணதாசனின் ‘சேரமான் காதலி' (சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்) தமக்கென ஒரு உலகைப் படைத்துக்கொண்டு அதில் தாமே சக்கரவ...
-
பவள சங்கரி h ttps://www.youtube.com/watch?v=AXVK2I37qbs சமுதாயத்தில் பல புரட்சிகளை ஏற்படுத்திய, சிவவாக்கியர், ‘புரட்சிச் சி...
