Sunday, September 11, 2011

எவ்வம் - கலீல் ஜிப்ரான்

நொந்த மனம் கொண்ட பேதையொருத்தி எவ்வம்’ பற்றி பகல்வீர் ஐயனே என  வேண்டினாள் !

பகன்றாரே பலவும் சிந்தையதுவும் விழித்தெழ:

உம் புரிதல்கள் அனைத்தும் உள்ளடக்கிய கூட்டை உடைத்தெறியும் உசாத்துணை உம் எவ்வமே அம்மணி!

கனிந்து நிற்கும் கனியாயினும் ஞாயிறொளியில் இதயத் தாமரை மலர ஓட்டை உடைத்தெறியும் எவ்வம் பொறுக்க வேண்டுமே!

 வாழ்வின் அன்றாட அற்புதங்களை வியப்புடனுறைந்து  உம் இதயக்கூட்டில் அணைக்குங்கால், உம் இன்பத்திற்கு இம்மியளவும் குறைவிலா அதிசயத்தையும் தோற்றுவிக்க வல்லதந்த எவ்வமன்றோ?

உம் வயல் வெளியில் கடந்து போகும் கால மாற்றங்களை ஏற்றுக் கொள்வது போன்றே உம் இதய வெளியின் மாற்றங்களையும் ஏற்றுக் கொள்ள இயலும் உம்மால்!

உம் துயரங்களின் நடுக்கங்களின் (குளிர்) ஊடே பொறுமையாக கவனம் கொண்டு நோக்கினால் உம்முடைய பெரும்பான்மையான துயரங்களுக்கான காரணமே உன் சுய - தேர்வு  மட்டுமேயன்றோ?

உம்முள் இருக்கும் வைத்தியன் அளிக்கும் மருந்து கசப்பானதாக இருப்பினும் அதுதானே உம் பிணியைப் போக்கும் உபாயம்?

ஆம், அந்த வைத்தியன் மீது நம்பிக்கை வை முழுமையாக! அத்தோடு அவனளிக்கும் கசப்பான தீர்வையும் சகித்துக் கொண்டு பொறுமையுடன் பருகி விடு!

அவன் கையில்  பலமும், உறுதியும் ஓங்கி இருப்பினும்,  மற்றொரு மாயக் கை ஒன்று மென்மையாக ஒரு மலர்பாதை விரிக்கும் உனக்கு!

அவன் அளித்த அக்கோப்பை உன் மென்மையான இதழைப் பதம் பார்த்தாலும்,

குயவனால் தம் புனிதமான கண்ணீரால் வார்க்கப்பட்டு அழகாக வடிவமைக்கப்பட்டதன்றோ அக்கோப்பை?


http://www.youtube.com/watch?v=AVx6H68Siww&feature=related



2 comments:

  1. அருமையான பகிர்வு .பகிர்வுக்கு நன்றி .

    ReplyDelete
    Replies
    1. நன்றி. இவை எமது மொழிபெயர்ப்பு.

      Delete