Saturday, June 30, 2012

முதிதை


முற்றும் துறந்த முனிவராயினும்
பட்டமரம் துளிர்ப்பதில்லை
படுத்த உடல் எழுவதில்லை

கலந்தை கொள்ளும் பேரறிவாளராயினும்
கறந்தபால் மடி புகுவதில்லை
முதிர்ந்த இளமை திரும்புவதில்லை

பற்று நிறைந்த பாவையராயினும்
மலர்ந்த மலர் மொட்டாவதில்லை
கனிந்த கனி காயாவதில்லை

சத்தியம் காக்கும் மகாத்மாவாயினும்
சொன்ன சொல் மறைவதில்லை
இருந்தும் பேசாமடந்தையாயில்லை

முனிவரும் இல்லை முதிதையும் இல்லை
என்னுள் இருக்கும் அனைத்துமாய் யான்

மனிதரைப் படைத்தவனும் கடவுள்
கடவுளரைப் படைத்த மனிதனும் கடவுள்

கடவுளும், கடவுளும் ஆழிப்பேரலையில்
கலந்தனர் ஒன்றாய் சுனாமியால்!
கடவுளும், கடவுளும் முதிதையில்

கண்ணும் கருத்தும் கருணையில்
முதிதையும் முற்றிய நிலையில்
கடவுளாய் மனிதரும் மனமுவந்து
கடவுளையும் படைத்து கால
ஓட்டத்தையும் கட்டுப்பாட்டுக்குள்
நிலைக்கச் செய்து சரித்திரமும்
படைக்கச் செய்தாய் பதவிசாய்!







No comments:

Post a Comment