Monday, January 28, 2013

வான தேவதையின் வெண்ணாடை!




சுட்டெரிக்கும் சூரியனில்
கனிநதுருகும் வெண்பனியும்
கையகலத் திரைகொணடு பளபளவென மின்னும்
கடலளவு ஒளிக்கதிரை மறைக்கத்தான் இயலுமா?
கருமமே கண்ணாயினாரென
சொல்லொன்று செயலொன்றென்று
சுற்றித்திரியும் மாக்களாய் இன்றி
போக்கும் வரவுமிலா நித்தியமாய்
நிறைந்திருக்கும் வானொளியாய்
ஊடுறுவும் ஒளிக்கீற்றையும்
மறைந்திருக்கும் தண்ணளியையும்
தன்னகத்தேக்கொண்டுத் தவம்புரியும்
தன்னிகரில்லாத் தத்துவநாயகன்!

No comments:

Post a Comment

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 36

  63 நாயன்மார்கள் வரலாறு – 31 மூர்க்க நாயனார்   தொண்டை நாடு சான்றோர் உடைத்து , எனும் பழமொழிக்கேற்ப சான்றோர் பெருமக்கள் பல்லோர் அவதரித...