Friday, August 23, 2013

ஒரு மறவனின் கட்டழகுக் காதலி!


பவள சங்கரி




இரவுநேர இவுளியின் குளம்பொலியில் 
இன்முகம் மலரத் துடித்தெழுந்தாள் கன்னியவள்
இமாலய வேந்தனின் இடியெனச் சிரிப்பொலியில்
இதமாக இன்மொழிபேசி கனிவாகக் கவிபாடி
இன்புற்றிருக்கும் வேளையில் இடைவிடாத 
இடிச்சத்தமாக இவுளிகளின் நாராசமான குளம்பொலிகள்
இரவும், இனிமையும், இதமும், இன்பமும் இறந்துபோனது.
இருளும் தனிமையும் மீண்டும் சிறைபிடிக்க
இடர்வந்து சுமையாக்க மருள்வந்து மயங்கினாள் பேதையவள்!





படத்திற்கு நன்றி:

http://www.google.co.in/imgres?imgurl=http://digital-art-gallery.com/oid/6/640x989_2525_Morning_hunting_2d_fantasy_warrior_horse_picture_image_digital_art.jpg&imgrefurl=http://digital-art-gallery.com/picture/2525&h=989&w=640&sz=300&tbnid=Vj4NzV5PpqGiHM:&tbnh=91&tbnw=59&zoom=1&usg=__casKkSKbNnLy14TuDgYctjw3YII=&docid=5fZlAkTmpbpgqM&sa=X&ei=VREYUs-XNs7irAfkpoGoCA&ved=0CEMQ9QEwBw&dur=1268

2 comments:

  1. ’இ’ எழுத்துக்கவிதை இனிமையாக உள்ளது.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete