Saturday, June 21, 2014

பொன் சிறகு

பவள சங்கரி






பெரிய பெரிய ஆசைகளைப் 
பக்குவமாய் பறைசாற்றுவதில் 
பாதகமொன்றுமில்லை.

பாடுபொருட்கள் பரவசமாய்
பரிந்துரைத்தால் பாவலனுக்கு
பரமானந்தம்தான்!

பொன்சிறகு விரித்து வானமேகும்
வார்த்தை வாழ்க்கைக்கு
வாதமும் விவாதமுமேது?

வாழுவதும் வாழ்த்துவதும்
வரமாய்வந்த மாயம்.
வலுவாகிப்போனது நிரந்தரம்.

பொய்மை மெய்மையாவதும்
மெய்மை மயங்கித்திரிவதும்
காலத்தின் கோலம்.

மண்ணில் விழுந்த மழைத்துளியெல்லாம்
முத்தாய் பொன்னாய் வைரமாய் மின்னி
மாலையாய்  காளியவள் பொற்பாதம் சேரும்

மிரளாத வானம் துவளாதத் தூரிகை
தளராத சிந்தை கலங்காத சித்தம்
மயங்காத மானுடமும் மாதவம்!!!




No comments:

Post a Comment

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 36

  63 நாயன்மார்கள் வரலாறு – 31 மூர்க்க நாயனார்   தொண்டை நாடு சான்றோர் உடைத்து , எனும் பழமொழிக்கேற்ப சான்றோர் பெருமக்கள் பல்லோர் அவதரித...