Monday, November 16, 2015

தமிழ் மொழியின் சொல்வளம்!

பவள சங்கரி


ஒரு பொருளின் தன்மைக்கேற்ப அப்பொருளின் பெயரைக் குறிக்க பல சொற்கள் பயன்படுத்துவது நம் மொழியின் தனிச்சிறப்பு. இது வேறு எந்த மொழியிலும் காணமுடியுமா என்பது ஐயமே… உதாரணமாக,
இலை என்று எடுத்துக்கொண்டோமானால் அதற்கு எத்தனை வகைப் பெயர்கள் பாருங்கள்…
நெற்பயிர் இலைகள் – தாள்
கருப்பஞ்செடி இலைகள் – தோகை
தென்னை, பனை மர இலைகள் – ஓலை
தாழை இலைகள் – மடல்
காய்ந்த இலை – சருகு
சில வகை இலைகளை – தழை என்கிறோம்..

அதேபோல் செடியில் தோன்றும்போது பூ – அரும்பு என்றும், மலர் மலர்ந்து வருங்கால் அது ‘போது’ என்றும், விரிந்த நிலையில் மலர் என்றும் அழைக்கிறோம்.
மலராத பூவையோ, மொட்டு, அரும்பு, மொக்கு, முகை என்று பலவாறு அழைக்கிறோம்…
பூவிலிருந்து காய் வரும்போது அதை, ‘பிஞ்சு’ என்றும், முதிர்ந்த பிஞ்சை காய் என்றும், பழுக்கும் பருவத்தில் செங்காய் என்றும், முற்றிலும் பழுத்த பின்பு பழம், கனி என்றும் கூறுகிறோம். ‘பிஞ்சு’ வகைகளில், ’குரும்பை’, ‘வடு’, ‘மூசு’, ‘கச்சல்’ என்று செடிகளின் வகைக்கேற்ப மாறுபடும்.. எடுத்துக்காட்டு:
வாழைப்பிஞ்சு – கச்சல்
மாங்காய் பிஞ்சு – வடு
தேங்காய் பிஞ்சு – குரும்பை
இளங்காய் – மூசு

No comments:

Post a Comment