Thursday, October 6, 2016

ஓம் மகாசக்தியே போற்றி!



பவள சங்கரி

எத்தனை எத்தனை பிறவியம்மா
எல்லாம் உன் அருளம்மா
அத்தனையும் பாவங்களன்றி
வரமாக்கிய வடிவுடைநாயகியே
நாடகமான வையகத்தில்
பூடகமான மனமின்றி
சேடகனாய் வாழாமல்
சிறகடித்து சிறந்திருக்கருள்வாயே

வாதமும் விநோதமும் வாழ்வானதும்
நாதமும் வேதமும் கரைசேர்ப்பதும்
சகாராவிலும் மொட்டவிழ்வதும்
சகலகலாவல்லி நின் திருவிளையாடல்
கருத்திலுறை காத்தியாயினி
கடம்பவனத்தின் காவல்காரி நீ
அடங்காதார் மனக் கூட்டிலும்
அகம்நிறைந்து முகமலரச் செய்பவள்!
அன்புறுவாய் அகிலம் ஆள்பவள் காளி
புன்முறுவாய் புவியாவும் பொழிபவள் பூமாரி
நான்மறை வித்தாய்த் திகழ்பவள் தேவி
எந்நாளும் எமையாளும் எழிலரசி ஏழவார்குழலி!
போற்றி! போற்றி! ஓம் மகாசக்தியே போற்றி!

No comments:

Post a Comment