Saturday, November 5, 2016

நெருஞ்சி முள்


கணிப்பொறியில் சிக்குண்ட 
கனிசமான பொழுதுகளில் 
அம்மாவிடமும் இயந்திரத்தனமான 
உரையாடல்கள்.

இடப்புற ஊக்கு வலப்புறமும்
வலப்புற வளையம் இடப்புறமும்
இடமாறியிருந்த அம்மாவின் 
இரவிக்கையை முதலுங்கடைசியுமாய்
கண்டது இறுதிக் குளிப்பாட்டலில்தான்.
பிடிமானம் அற்றுப்போன இயந்திரத்தனம்
காலமெலாம் நெஞ்சின் நெருஞ்சியாய் .....

No comments:

Post a Comment

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 33

  63 நாயன்மார்கள் வரலாறு – 28 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் ஏதமில்வே ளாளர்பெரு மங்க லத்துள்     ஏயர்கோன் கலிக்காமர் ‘இறையை நேரே தூதுகொளும் அவ...