Thursday, December 22, 2016

சுய மரியாதை



புதுச்சேரி யூனியனின் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி.. புதுச்சேரி யூனியனை குற்றமில்லா பிரதேசமாக உருவாக்குவோம் என்று உறுதியோடு இருப்பவர். 1972இல் இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி. திகார் சிறையில் கைதிகளின் நலன் கருதி (3C மாடல் அதாவது C-Collective, C-corrective, C-Communicative என்ற பொருளில்) கிரண்பேடி நல்ல சீர்திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளார். டென்னிஸ் போட்டியில் ஆசிய சாம்பியன் பட்டம் வென்றவர். அவருடைய கம்பீரமான குரலும், மிடுக்கான தோற்றமும் அவர் 61 வயதைக்கடந்தவர் என்று அறியும்போது ஆச்சரியம் கொள்ளவைக்கும். ஐ.நா.சபையில் இந்தியாவின் பிரதிநிதியாகப் பணியாற்றியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவின் மேகன் டோன்மேன் என்பவர் இவரைப் பற்றி, “யெஸ், மேடம் சார்” என்ற ஆவணப்படம் உருவாக்கியிருக்கிறார் .
சமீபத்தில் திருமணமான ஒரு இளம் இணையர் இவரிடம் ஆசிகள் பெறுவதற்காக காலில் விழுந்திருக்கின்றனர். அவர் உடனே அதைத்தடுத்து காலில் ஏன் விழுகிறீர்கள் என்று கூறிவிட்டு தானும் அவர்கள் காலில் விழுந்துள்ளார். இனியொருவர் இதுபோன்று சக மனிதர் காலில் விழவேண்டியதில்லை என்ற சுய மரியாதை விழிப்புணர்வை ஏற்படுத்தி பலமடங்கு உயர்ந்து நிற்கிறார்!

No comments:

Post a Comment