Tuesday, April 11, 2017

தீம்புளி



தீம்புளி சாப்பிட்டதுண்டா? சங்கப்பாடல் சொல்லும் சுவையான பண்டம்!
புளியையும் கருப்பங்கட்டியையும் சேர்த்துப்பிசைந்து அதைப் பொரிப்பார்கள். இப் பண்டத்துக்குத்தான் தீம்புளி என்று பெயர்.
பரதர் தந்த பல்வேறு கூலம்
இருங்கழிச் செறுவிற் றீம்புளி வெள்ளுப்புப்
பரந்தோங்கு வரைப்பின் வன்கைத் திமிலர்
கொழுமீன் குறைஇய துடிக்கண் துணியல் . . (மதுரை காஞ்சி 318)
பண்டமாற்று முறை வாணிபத்தில், நம் நாட்டிற்கு குதிரைகளை மரக்கலங்களில் ஏற்றிக் கொண்டுவந்த யவனர்கள் அதே மரக்கலங்களில் பொன் அணிகலன்களையும், தீம்புளி, உப்பு, உணக்கிய மீன் ஆகியவற்றையும் தத்தம் நாடுகட்கு ஏற்றிச் செல்லுவார்களாம்

No comments:

Post a Comment