Monday, December 4, 2017

அந்தாதி - தமிழின் இனிமை!




முதல் வரியின் இறுதிச் சொல் அடுத்த வரியின் முதற் சொல்லாக வருவதுதான் அந்தாதி எனப்படும். மனப்பாடம் செய்வதற்கு எளிமையாக இருக்க வேண்டும் என்று கருதியும் அந்தாதி இலக்கியம் தோன்றியிருக்கலாம். தமிழில் தோன்றிய முதல் அந்தாதி காரைக்கால் அம்மையார் பாடிய அற்புதத் திருவந்தாதி ஆகும்.
குறிப்பிடத்தக்க அந்தாதிகள் இதோ:

(1) முதல் திருவந்தாதி - பொய்கை ஆழ்வார்
(2) இரண்டாம் திருவந்தாதி - பூதத்தாழ்வார்
(3) மூன்றாம் திருவந்தாதி - பேயாழ்வார்
(4) சடகோபர் அந்தாதி - கம்பர்
(5) திருவரங்கத்தந்தாதி - பிள்ளைப் பெருமாளையங்கார்
(6) கந்தர்
அந்தாதி - அருணகிரிநாதர்
(7) திருவருணை அந்தாதி - எல்லப்ப நாவலர்
(8) அபிராமி அந்தாதி - அபிராமி பட்டர்
(9) திருக்குறள் அந்தாதி - இராசைக் கவிஞர்

11-ஆம் திருமுறையில் வரும் அந்தாதிகள்
(1) அற்புதத் திருவந்தாதி - காரைக்காலம்மையார்
(2) சிவபெருமான் திருவந்தாதி - கபிலதேவ நாயனார்,
(3) சிவபெருமான் திருவந்தாதி - பரணதேவ நாயனார்
(4) கயிலைபாதி காளத்தி 
பாதி அந்தாதி - நக்கீர தேவ நாயனார்
(5) திருவேகம்பமுடையார்
திருஅந்தாதி - பட்டினத்தடிகள்
(6) திருத்தொண்டர் திருஅந்தாதி - நம்பியாண்டார் நம்பிகள்
(7) ஆளுடைய பிள்ளையார்
திருவந்தாதி - நம்பியாண்டார் நம்பிகள்
(8) பொன்வண்ணத்தந்தாதி - சேரமான் பெருமாள் நாயனார்
19ஆம் நூற்றாண்டில் மிகுதியான அந்தாதி நூல்கள் தோன்றியுள்ளன. வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளும் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களும் அதிக எண்ணிக்கையில் அந்தாதி நூல்கள் இயற்றியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment