Saturday, December 30, 2017

புத்தாண்டின் புதுவரவு!




புத்தாண்டைப் புத்துணர்வுடன் எதிர்கொள்ள வரமாய் அமையும் என் அடுத்த நூல். வழக்கம்போல் பழனியப்பா பதிப்பகத்தாரின் பேராதரவுடன், ஐயா முத்துக்குமாரசாமி அவர்களின் ஆசிகளுடன், தமிழறிஞர் வி.ஐ.டி. கல்லூரியின் வேந்தர் திரு.விசுவநாதன் அவர்களின் அற்புதமான அணிந்துரையுடன் வெளிவந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறேன். நண்பர்களின் வாழ்த்துகளையும் வேண்டி நிற்கிறது என் கிறுக்கல்கள்! 


எண்ணக்குவியல்களின் சிதறல்கள் 
வண்ணக்கோலங்களாய் வான்முட்ட
திண்ணக்குயில்களின் இசைப்பாட்டும்
சிகரம்தொட்ட சிறுபொழுதுகள்!

No comments:

Post a Comment

காகத்தின் நுண்ணறிவு!

  காக்கை நாம் அன்றாடம் பார்க்கிற பறவை. ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது நாம் இயல்பாகப் பயன்படுத்தும் பழமொழி. நாங்கள் அன்றாடம் கா...