Sunday, January 19, 2020

தமிழ் மொழிவழிக் கல்வி



கர்நாடக மாநிலத்தில் கன்னடம் கட்டாயமாகப் பயில வேண்டும் என்பது போல மகாராட்டிரத்திற்கு மராட்டிய மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை, தாய்மொழி கன்னடம் தான் பயிற்று மொழி; 10ஆம் வகுப்பு வரை, கன்னடம் கட்டாய மொழிப் பாடம் என்ற, சட்ட திருத்தத்தை, கர்நாடகா அரசு நிறைவேற்றியுள்ளது.
'தொடக்கக் கல்விச் சட்டம் 1920' சட்டத்தின்படி, எட்டாம் வகுப்பு வரை, தாய் மொழியான தமிழில் தான் கல்வி கற்றுத் தரவேண்டும் என்பதற்கான விதிகள், 1924இல் கொண்டு வரப்பட்டுள்ளன. அந்த வகையில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில், தாய்மொழி வழிக் கல்வி தான் வலியுறுத்தப்படுகிறது என்பது உறுதியாகிறது. தற்போதுள்ள கல்வி உரிமைச் சட்டத்தின், 29 (எம்) பிரிவும், தேசிய கல்விச் சட்டமும் தாய்மொழிக் கல்வியைத் தான் வலியுறுத்துகிறது. இந்நிலையில், ஒன்றாம் வகுப்பிலிருந்து, தாய்மொழி வழி கல்வியை போதிக்காமல் இருப்பது சட்ட விரோதமானது அல்லவா?
ஏன் நம் தமிழ் நாட்டில் மட்டும் நம் தமிழ் மொழி வழிக்கற்பித்தல் கட்டாயமாக்கப்படவில்லை மை லார்ட்?

No comments:

Post a Comment