Tuesday, June 21, 2022
அப்பா என்றால் ....
அப்பா எனும் அற்புதம்
புவியில் என்றும் பெருவரம்
தரணியில் அவரே தனிரகம்
அல்லல் தீர்க்கும் அருமருந்து
இருள் நீக்கும் அகல்விளக்கு
அகிலம் போற்றும் இறைதூதர்
கன்னற் சுவையின் கருவூலம்
கவிதை வானின் நட்சத்திரம்
கருணைத் தேரின் மணிமகுடம்
கற்பகத் தருவின் ஆணிவேர்
பூவுலகை நீங்கினாலும் மனமதை
நீங்காமல் நிறைந்திருக்கும் நித்தியன்
நித்திரையிலும் நீதி சொல்லும்
நிரந்தர நிமலன் சொற்திரையில்
நிம்மதி அளிக்கும் நாயகன்
எல்லோரும் நலம் வாழும்
நல்லெண்ணம் கொண்ட மனிதன்
என்றும் நீங்காமல் நிறைந்திருக்கும்
ஈசனின் புத்திரன் குகன்
எனும் சிநேகிதன் புவனம்
போற்றும் உத்தமன் என்
வாழ்நாள் வழிகாட்டியாக வாகை
சூடும் அன்பான தந்தையவர்!
வரலாறாக நிலைத்திருக்கும் வல்லவர்!!
Subscribe to:
Post Comments (Atom)
காகத்தின் நுண்ணறிவு!
காக்கை நாம் அன்றாடம் பார்க்கிற பறவை. ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது நாம் இயல்பாகப் பயன்படுத்தும் பழமொழி. நாங்கள் அன்றாடம் கா...

-
உதயன் படங்களைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியவை... நன்றி. ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு. (மீன்கொத்தி...
-
கண்ணதாசனின் ‘சேரமான் காதலி' (சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்) தமக்கென ஒரு உலகைப் படைத்துக்கொண்டு அதில் தாமே சக்கரவ...
-
தமிழ்த்துறை தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், சித்தா வேதா மையம், நியூ ஜெர்சி, அமெரிக்கா, சாந்தம் உலக...
No comments:
Post a Comment