Wednesday, March 19, 2025

சூழ்நிலைக் கைதி


வார்த்தைகளை கொஞ்சம் பக்குவமாகப் பயன்படுத்தியிருந்தால்
இவ்வளவு பெரிய துன்பச் சூழலில் சிக்கியிருக்க மாட்டேன்
சற்றே பொறுத்திரு எனும் மந்திர வார்த்தையால்
சூழ்நிலையைப் புரிய வைத்திருந்தால் ஆதீத கற்பனையால்
இவ்வளவு அதிர்ச்சியடைந்திருக்க மாட்டேன்
ஒரு சிறிய விளக்கம் கொடுத்திருந்தால் தூக்கம் கெட்டு
குருதி கொதித்து மருத்துவமனை வரை வந்திருக்க மாட்டேன்
எப்படியும் எதையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருப்பது
தெரிந்தும் இத்தனை கடினமான வார்த்தைப் பிரயோகத்தைத்
தவிர்த்திருந்தால் சுயபச்சாதாபத்திற்கு ஆளாகாமல் இருந்திருப்பேன்
மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லும்போது தற்காப்பிற்கு
ஒரு மரத்துண்டாவது சிக்காமலா போகும்
சமாதானத்திற்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப்போடாமல்
அதீத அமைதி காப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது?
- பவளா

No comments:

Post a Comment

சூழ்நிலைக் கைதி

வார்த்தைகளை கொஞ்சம் பக்குவமாகப் பயன்படுத்தியிருந்தால் இவ்வளவு பெரிய துன்பச் சூழலில் சிக்கியிருக்க மாட்டேன் சற்றே பொறுத்திரு எனும் மந்திர வார...