Tuesday, July 30, 2013

காக்காய் பொன்



பவள சங்கரி

அந்தி மாலைப் பொழுது. இருண்ட மேகக்கூட்டத்தின் இடையே அவ்வப்போது மெல்ல முகம் காட்டி மறையும்  நிலவுப் பெண்அசைந்து, அசைந்து அன்னை மடியாய் தாலாட்டும் இரயில் பயணம்சன்னலோர இருக்கையாய் அமைந்ததால் இயற்கை காட்சிகளுடன் ஒன்றிய பயணமாக அமைந்தது. ஆம்பூரிலிருந்து ஜோலார்ப்பேட்டை செல்லும் பாதை . தென்னை மரக்கூட்டங்களின் அணிவகுப்புஇடையே சுகமாய் நித்திரை கொள்ள ஏங்க வைக்கும் சுத்தமான மண் தரை. சிலுசிலுவென தென்னங்காற்றின் சுகத்தினுடன் இரண்டு அணில் பிள்ளைகள் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தன. அவ்வப்போது மூக்கோடு மூக்கை வைத்து உரசி எதோ கேலி பேசி நகைத்துக் கொண்டிருந்தன.. வாக்மேனிலிருந்து மெலிதாக மொழி படப்பாடல் இனிமையாக இதயத்தை ஊடுறுவிக்கொண்டிருக்கிறது

Friday, July 26, 2013

வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (20)


பவள சங்கரி

துக்கத்தை சுமையென ஒதுக்க முடியுமா?



“தோல்வி, வேதனை , போராட்டம், இழப்பு, அதள பாதாளங்களிலிருந்தும் மீண்டு வரும் வழி போன்றவற்றை அறிந்தவரே, நாம் அறிந்தவர்களிலேயே மிக அழகான மனிதர்கள். இந்த மனிதர்களே,  பாராட்டு, உணர்திறன் மற்றும் கருணை, கனிவு, ஆழமான அன்பு போன்றவைகள் நிறைந்ததொரு  புரிதலான வாழ்க்கையை வாழ்பவர்கள். அழகான மக்கள் சட்டென்று தோன்றுவதில்லை”.
எலிசபெத் குப்ளர் ராஸ்

Monday, July 22, 2013

மெய்கண்டார்




பவள சங்கரி

டேய் மச்சி, இன்னைக்கு அந்த கோர்ட் வாசல்ல உண்ணாவிரதம் இருக்குற பொம்பளையோட கேசு, சூடு பிடிக்குதுடா. கேமாராவோட ஓடிவா.. “
என்னடா ஆச்சு திடீர்னு
என்ன.. வழக்கம் போலத்தான். மகளிர் அமைப்பும், வேறு சில பொது நலச் சங்கங்களும் வந்துட்டாங்க சப்போர்ட்டுக்கு, அப்பறம் என்ன கேக்கணுமா..”
கோர்ட் வாசலின் எதிர்ப்புறம் மரத்தடியில் உட்கார்ந்து தர்ணா செய்து கொண்டிருந்த செண்பகத்தை போலீசார் விரட்டிக் கொண்டிருந்தனர். பொது நல சங்கங்களும், மற்ற பெண்கள் நல அமைப்புகளும் விசயம் அறிந்து வந்து சேருவதற்குள் எப்படியாவது செண்பகத்தை விரட்ட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தார்கள் போலீசார். ஆனால் அவர்கள் பயந்தபடியே நடந்துவிட்டது. மூக்கில் வியர்த்தது போல எல்லோரும் ஆஜர் ஆகிவிட்டார்கள்.

Thursday, July 18, 2013

வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (19)


பவள சங்கரி
“ஒருவரை விடுவிக்க வெறுமனே அவருடைய சங்கிலிகளை உடைத்தெறிவது மட்டுமல்லாமல் அடுத்தவர்களின் சுதந்திரத்தை மதிப்பதோடு அதை மேம்படுத்தும் வகையில் வாழ்வதில்தான் இருக்கிறது. 
_நெல்சன் மண்டேலா


அறியாததை அறிந்து, தெரியாததற்குள் காலடி வைக்கலாமா?
நடப்பது அனைத்தும் நன்மைக்கே என்று எடுத்துக்கொண்டு வாளாவிருக்கலாமா? அல்லது நம்மை மீறி நடப்பவைகளை எதிர்த்து நின்று போராடலாமா? அல்லது விட்டுவிலகி வேறு பாதையை நாடலாமா?
சமீபத்தில் என் நண்பர் ஒருவரை வெகு நாட்களுக்குப் பிறகு சந்தித்தேன். அவர் சமீபத்தில் மிகப்பெரிய வியாபார காந்தமாக மாறிவிட்டதாகக் கேள்விப்பட்டிருந்தேன். உண்மையில் அவரை எனக்குத் தெரியும் என்று சொல்லிக் கொள்வதில் எனக்கும் பெருமையாக இருந்தது. காரணம் வாழ்க்கையின் அடி மட்டத்திலிருந்து உழைப்பினால் மேல் நிலைக்கு வந்தவர். அன்று அவரைப் பார்த்தபோது என் கற்பனைக்குச் சற்றும் எட்டாத நிலையில் மிகவும் வேதனையாகக் காணப்பட்டார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பேசிக்கொண்டிருந்தபோது, அவருடைய வியாபார பங்குதாரர் தன்னை ஏமாற்றிவிட்டு பணத்தையெல்லாம் எடுத்துக்கொண்டு போய்விட்டார் என்று புலம்பினார். இத்தனைக்கும் அந்தக் கூட்டாளி இவருடைய நெருங்கிய நண்பர். தான் ஏமாற்றப்பட்டதால், வேதனையிலும், கோபத்திலும் உழன்று நொந்து போயிருந்தார். இது நடந்து கிட்டத்தட்ட ஓராண்டு ஆன நிலையில் இன்னும் அவர் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளாமல், தன் வேதனைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் முகமாக, இந்த ஏமாற்றத்திற்கு தர்க்கரீதியான ஒரு காரணத்தைத் தேடி தன் மூளையை கசக்கிப் பிழிந்துகொண்டிருக்கிறார். எப்படியாவது அதை அறிந்தே ஆக வேண்டும் என்று தீர்மானமாக இருக்கிறார்.

Thursday, July 11, 2013

வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (18)


பவள சங்கரி
மகிழ்ச்சியின் ஒரு வாயில் அடைபட்டால், அடுத்தது திறக்கிறது, ஆனால் நாம் மூடிய அந்தக் கதவையே நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருப்பதால், நமக்காகத் திறக்கப்பட்ட மற்றொரு கதவைப் பார்க்க முடியாமல் போய்விடுகிறது. – ஹெலென் கெல்லர்.



வாழ்க்கையை உள்ளது உள்ளபடி அப்படியே எதிர்கொள்வோம்!
“சில நேரங்களில் நம் வாழ்க்கையில் வருவதை, எந்தத் தடுப்பு நடவடிக்கையோ, முன்கூட்டிய திட்டமோ அல்லது தீர்மானமோ என ஏதுமின்றி உள்ளது உள்ளபடி, அப்படியே ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஏனெனில் நாம் தொடர்ந்து அந்த விளைவை கட்டுப்படுத்த முயற்சிக்கும்போது, தற்செயலான மற்றும் வளர்ச்சிக்கு மிகக் குறுகிய இடமே அளிக்கிறோம்”.
ஜீனைன் கேரோன்
சில நேரங்களில் வாழ்க்கை தொடர்ந்த பற்பல எதிர்மறை விளைவுகளை வரிசையாக ஏற்படுத்திக் கொண்டிருப்பதை உணருகிறோம். நம் பாதையில் இடருகிற மிகப்பெரும் தடைக்கற்களை எதிர்த்து அப்புறப்படுத்த நினைக்கிறோம். வாழ்க்கை பெரும் பாரமாகவும், மகிழ்ச்சியை மொத்தமாக கபளீகரம் செய்யக்கூடியதாகக்கூடத் தோன்றலாம்.

Monday, July 8, 2013

கேத்தரீனா




                                           
பவள சங்கரி

 “சபேசா, இன்னைக்கு பொண்ணு பாக்க வறோம்னு சொல்லியிருக்கு, சாயங்காலம் 5 மணிக்கு போகணும். மணி மூனு ஆவுதுப்பா. சீக்கிரம் தயாராகிடுப்பா..”

அம்மா.. ஏம்மா.. இப்படி சொன்னா புரிஞ்சிக்காம அடம் புடிக்கறீங்க. என் வாழ்க்கைய என்னை வாழவிடுங்க. எனக்கு பிடிச்சப் பொண்ணைகல்யாணம் செய்துக்க உடமாட்டேன்னு நீங்கதான் அடம் புடிக்கறீங்க. முன்ன பின்ன தெரியாத ஒரு பெண்ணை, அதுவும் கிராமத்துப் பொண்ணை கட்டிக்கிட்டு அமெரிக்காவுல போய் எப்படி குடும்பம் நடத்த முடியும். நாலு வார்த்தை சேர்ந்தா மாதிரி இங்கிலீஷ் பேச முடியாது, புரிஞ்சிக்கவும் முடியாது. அங்க போய் ரொம்ப கஷ்டப்படணும்மா. சொன்னா புரிஞ்சிக்கோங்க. இவளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கவெல்லாம் எனக்கும் நேரம் இருக்காது. மொழி தெரியாம, நான் ஆபீசு போன நேரத்துல  ஏதாச்சும் பிரச்சனைன்னா என்ன பண்ணுவா.. தேவையாம்மா இதெல்லாம்? எனக்கு கல்யாணமே வேண்டாம். ஆளை உடுங்க

Saturday, June 29, 2013

வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா? (17)




பவள சங்கரி



அனைவரும் கற்றுணர வேண்டிய மூன்று சத்தியங்கள் : பரந்த மனம், அன்பான பேச்சு, சேவை வாழ்க்கை மற்றும் கருணை ஆகியவைகளே மனிதம் மலரச் செய்யும் மகத்தான செயல்கள்.
புத்தர்

கருணையுள்ள இதயம் கடவுள் வாழும் இல்லம்!

நல்ல எண்ணங்களே நம்முடைய நல்ல செயல்களுக்கு வித்தாகி வெற்றிக் கனியை எட்டிப் பறிக்கச் செய்கிறது என்பது திண்ணம். அனைவரிடத்திலும், எப்பொழுதும் கருணையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பது நல்லதொரு கருத்து என்றாலும், நடைமுறையில் அது முழுவதும் சாத்தியமாகுமா என்ற ஐயம் எழாமல் இல்லை. ஆனாலும் பழகப் பழக நாளடைவில் அது சாத்தியமாகும் என்பதும் சத்தியம். தம்மைத் தாமே வலிமையாகவும், புத்திசாலியாகவும் ஆக்கிக்கொள்ளவும்  மற்றும் அதிக தன்னம்பிக்கையுடனும், நெகிழ்த் திறனுடனும் நடந்து கொள்ளச் செய்யும் யதார்த்தமான பாதை இது. பச்சாதாபத்துடன் நடந்துகொள்ளும் மனோ நிலையை வளர்த்துக்கொள்ளும் போது, தம் அன்புக்குரியவர்களின் தேவைகளை உணர்ந்து தக்க சமயத்தில் உதவி செய்வதற்கும் வழிவகை செய்யும்.  அஞ்சி நடுங்கச் செய்யும்  கடினமான நேரங்கள் மற்றும் வாழ்க்கையின் இருண்ட காலங்களையும் கூட பொறுமையுடன் எதிர்கொள்ளச் செய்யக்கூடியது ‘கருணை’ என்ற இந்த மகோன்னத குணம்.  மிகக் கடினமான நேரங்களில் கூட தம் சுயநலத்திற்காக மட்டுமே  கண்களை மூடிக்கொண்டு கருணைக் கடலில் மூழ்கித் தெளிவதன் மூலம் தம் குறிக்கோளை நிறைவேற்றிக் கொள்ளும் ஆற்றல் பெற முடியும். அதனாலேயே  சக்தி வாய்ந்ததொரு ஆயுதமாக செயல்படக்கூடிய, ‘கருணை’ என்ற இந்த அற்புதமான குணத்தை வளர்த்துக் கொள்வது ஒரு வெற்றியாளருக்கு அவசியமாகிறது. 

காகத்தின் நுண்ணறிவு!

  காக்கை நாம் அன்றாடம் பார்க்கிற பறவை. ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது நாம் இயல்பாகப் பயன்படுத்தும் பழமொழி. நாங்கள் அன்றாடம் கா...